நவக்கிரகங்ளில் சந்திரனுக்கு உகந்த கோவில் திங்களூர்ஆகும். இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அருகில் உள்ளது. இக்கோவிலில் கைலாசநாதரும், பெரியநாயகி அம்மனும் வீற்றிருக்கின்றனர். இங்குள்ள சிவபெருமானின் இடது கண்ணாக விளங்குபவர் சந்திரன்.
வரலாறு - கட்டிடக்கலை:
இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவனால்கட்டப்பட்டது. திராவிடக் கட்டிடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது இக்கோவில். இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் நிலாவெளிச்சம் இங்குள்ள சிவலிங்கம் மேல் படும்.
இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவனால்கட்டப்பட்டது. திராவிடக் கட்டிடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது இக்கோவில். இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் நிலாவெளிச்சம் இங்குள்ள சிவலிங்கம் மேல் படும்.
தல புராணம்:
திங்களூரில் 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகள்என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமான் மீது கொண்ட பற்றால், சிவபெருமான் மீது பக்தி கொண்ட திருநாவுக்கரசர் பெயரை தன் மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளையதிருநாவுக்கரசு என்று பெயர் வைத்தார். மேலும் திருநாவுக்கரசர் பெயரில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார்.
ஒரு நாள் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்த போது அப்பூதியடிகள் பற்றி கேள்விப்பட்டு அவரை காண சென்றார்.திருநாவுக்கரசரை கண்ட அப்பூதியடிகள் அவரை வரவேற்று உணவளிக்க விரும்பினார். தன் மகனை வாழை இலை பறித்து வருமாறு அனுப்ப அங்கே அவனை பாம்பு தீண்டியது.
தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டால்திருநாவுக்கரசர் சாப்பிட மாட்டாரோ என்றென்னிய அப்பூதியடிகள் அதனை மறைத்து உணவளித்தார். மகனை பற்றி அறிந்த திருநாவுக்கரசர், அவனின் உடலை திங்களூர் திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று “ஒன்று கொலாம் அவர் சிந்தை” என்று பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார். இதுவே இக்கோவில் வரலாறாகும்.
சந்திரனுக்கு உகந்தவை:
ராசி : கடக ராசி
அதி தேவதை : நீர்
நிறம் : வெண்மை
தானியம் : நெல், பச்சரிசி
வாகனம் : வெள்ளை குதிரை
உலோகம் : ஈயம்
மலர் : அல்லி
ரத்தினம் : முத்து
ஸ்தல விருட்சம் : வில்வமரம்
ராசி : கடக ராசி
அதி தேவதை : நீர்
நிறம் : வெண்மை
தானியம் : நெல், பச்சரிசி
வாகனம் : வெள்ளை குதிரை
உலோகம் : ஈயம்
மலர் : அல்லி
ரத்தினம் : முத்து
ஸ்தல விருட்சம் : வில்வமரம்
காயத்ரி மந்திரம்:
பத்ம த்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சோம: ப்ரசோதயாத்.
வழிபடும் முறை:
நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரணமாவார். காலரா,நுரையீரல் நோய்கள் போன்றவை நீங்க இவரை வழிபடலாம். வெண்மை நிற மலர்களால் அர்சித்து, வெள்ளை நிற ஆடைகள் உடுத்தி, முத்து மாலை அணிந்து, பெளர்ணமி விரதம் இருந்துவழிபடலாம்.
பத்ம த்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சோம: ப்ரசோதயாத்.
வழிபடும் முறை:
நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரணமாவார். காலரா,நுரையீரல் நோய்கள் போன்றவை நீங்க இவரை வழிபடலாம். வெண்மை நிற மலர்களால் அர்சித்து, வெள்ளை நிற ஆடைகள் உடுத்தி, முத்து மாலை அணிந்து, பெளர்ணமி விரதம் இருந்துவழிபடலாம்.
பெளர்ணமி அன்று இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தொடர்புக்கு: 04362-262499
எப்படி செல்வது?
திங்களூருக்கு திருவையாருக்கு அருகில் உள்ள திருப்பழனம் சென்று அங்கிருந்து செல்லலாம்.
அருகில் உள்ள ரயில் நிலையம் - கும்பகோணம் 36 கி.மீ தொலைவில்.
அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 126 கி.மீ தொலைவில்.
அருகில் உள்ள ரயில் நிலையம் - கும்பகோணம் 36 கி.மீ தொலைவில்.
அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 126 கி.மீ தொலைவில்.






![9. கீழ்ப்பெரும்பள்ளம் [கேது]
[keedu Bhavan]
ஸ்ரீ நாகநாதராக சிவபெருமானும் சௌந்தர நாயகியாக தாயாரும் எழுந்தருளி செய்த திருத்தலமாகிய கீழ்ப்பெரும்பள்ளம் ஒரு நவக்கிரக ஸ்தலமுமாகும். கேது பகவான் அருள் செய்யும் புண்ணிய ஸ்தலம் தான் கீழ்பெரும்பள்ளம்.
வாணகிரி என்ற பெயரிலும் அறியப்படும் இந்த ஊர் திருவெண்காடிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு நாகநாத சுவாமியை வழிபட்ட கேது பகவான்பாவங்களிலிருந்து விடுபட்டதாக கூறப்படுகிறது. தலையுடன் கூடிய கேது பகவானை தரிசிப்பதென்பது மிகவும் அரிது. அப்பேர்ப்பட்ட கேது பகவானை இங்கு காணலாம்.
புராணங்களின் படி மகா விஷ்ணுவால் இரு துண்டங்கலாக்கப்பட்டஉடம்பின் பகுதி கேதுவாகவும் தலைப் பகுதி இராகுவாகவும் விளங்குவதாக அறிகிறோம். அமுதுண்ட காரணத்தால் பாம்பின் தலையுடன் கூடிய இராகு பகவானும் அறுபட்ட உடல் பொதிகை மலையில் விழுந்ததாகவும் இத்தனை கண்டெடுத்த ஒரு பிராமணன் இதனை பாதுகாத்து வந்ததாகவும் பிற்காலத்தில் அமுதுண்ட காரணத்தால் ஒரு பாம்பின் தலை அசுர உடம்புடன் ஒட்டி கேது பகவானாக ஆனதாகவும் கூறப்படுகிறது.
கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருட்டு பயம், கெட்ட பழக்கங்கள், சொத்து சேதம் அடைதல் அல்லது நாசமடைதல்,மானமிழத்தல் மற்றும் புத்திர தோஷம் போன்றவற்றால் அல்லல் படுவர். இங்கு வந்து கேது பகவானை தரிசிக்கும் பக்தர்கள் தோஷங்களிலிருந்து முக்தி அடைவர் என நம்பப்படுகிறது.
கேது பகவானுக்கு உரிய நிறம், உலோகம், தானியம் போன்றவை வருமாறு:-
நிறம்: பல்வேறு நிறங்கள் (பூ போட்டது போல்)தானியம்: கொள்ளுவாகனம்: சிங்கம்மலர்: செவ்வல்லிஉலோகம்: கருங்கல்கிழமை: ஞாயிறுஇரத்தினம்: வைடூர்யம்பலன்கள்: தரித்திரம், வியாதிகள் மற்றும் பீடைகளில்ருந்து நிவர்த்தி
கேது கவசம் என்ற மந்திரம்:-
கேதும் கராலவதனம் சித்ரவர்ணம் கிரீடினம்
ப்ரணமாமி சதா கேதும் த்வஜாகாரம் க்ரஹேச்வரம்
சிதரவர்ண சிரப்பாது பாலம் தூம்ரசமத்யுதி
பாதுநேத்ரே பிங்கலாக்ஷ ஸ்ருதீ மே ரக்தலோச்சன
க்ராணம் பாது ஸுவர்ணாபஸ்சிபுகம் ஸிம்ஹிகாஸுத
பாது கண்டம் ச மே கேது ஸ்கந்தௌ பாது க்ரஹாதிப
ஹஸ்தௌ பாது சுரஸ்ரேஷ்ட குக்ஷிம் பாது மஹா க்ரஹ
ஸிம்ஹாஸன கடிம் பாது மத்யம் பாது மஹாஸுர
ஊரூ பாது மஹாசீர்ஷோ ஜானுனி மேதிகோபன
பாது பாதௌ ச மே க்ரூர சர்வாங்கம் நர பிங்கள
ய இதம் கவசம் திவ்யம் சர்வரோக விநாசனம்
சர்வசத்ரு விநாசம் ச தாரணாத்விஜயீ பவேத்
இதி ஸ்ரீ பிரஹ்மாண்டபுராணே கேது கவசம் சம்பூர்ணம்
நன்றி :-http://bsakthivel.blogspot.in](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10647095_852683991415937_3968463691350927283_n.jpg?oh=b980748a5c3931c4a7fbe1d05d6a775b&oe=547538D2&__gda__=1415261290_ed139807aadcbeca0d911582d7bc9c2f)


