கி.பி. 1001ல் முஹம்மது கஜ்னி என்ற கொள்ளையன் செழிப்பாக இருந்த பாரத தேசத்தை நோக்கி தன் கவனத்தை திருப்பியதுதான் நம் நாட்டின் கொடூர சரித்திரத்திற்கு தொடக்கம். அச்சமயத்தில் பெரும் சக்ரவர்திகள் இல்லாமல் இருந்ததும் ஒரு பெரும் பின்னடைவு. சிற்றரசர்களால் ஆளப்பட்டிருந்த இன்றைய ஆப்கான் பகுதிகள், துருக்கிய கொள்ளைக்காரனுக்கு எளிதான விருந்தாகப் பட்டது. பல தடவை படையெடுத்து அவன் ஜெயபாலா என்ற அரசர் ஆண்டுவந்த இன்றைய பெஷாவர் என்ற பகுதியை பிடித்தான். பின்னர் அருமையான விளைநிலங்களை கொண்ட பஞ்சாப் பகுதிகளை அவன் பிடித்தான்.
அவன் பெரும்பாலும் ஹிந்துக்களின் கோவில்களை குறி வைத்தான். அக்காலங்களில் ஹிந்துக்கள் தனிப்பட்ட முறையில் சொத்துக்களை அதிகமாய் வைத்திருப்பதில்லை. மாறாக கோவில்களுக்கு அவற்றை வழங்கி விடுவார்கள். கோவில்களில் பொக்கிஷங்கள் வைக்கப்பட்டிருந்தன. அரசர்களுக்குள் போர் வந்தாலும் கோவில்களை யாரும் தாக்கும் வழக்கம் இல்லை. ஆனால் முஹம்மது கஜ்னியோ கொள்ளைக்காரன் ஆயிற்றே, அவனுக்கு ஏது தர்ம நெறிகள் ?
வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளை அவன் ஊடுறுவி, அழித்து பின் திரும்ப சென்று விடுவான். அவ்வாறு திரும்ப திரும்ப செய்து அவன் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் பயத்தை உண்டாக்கி இருந்தான். நாகர்கோட், தனேசர், மதுரா, கனௌஜ், கலிஞ்ஜர் மற்றும் சோமநாதபுரியில் அவன் இவ்வாறாக ஊடுறுவி, பேரழிவை உண்டாக்கி விட்டு திரும்பி சென்று விடுவான். செல்லும் போது பலரை அடிமைகளாக பிடித்துக் கொண்டு போய் மதமாற்றி விடுவான். இவ்வாறு முஹம்மதின் ஊடுறுவலால "சிந்தி ஸ்வாரங்கர் சபையை" சேர்ந்த மக்களும் பிற ஹிந்துக்களும் அவனின் மதமாற்றலில் இருந்து தப்பிக்க சிந்து பகுதிகளில் இருந்து வெளியேறினர்.
முஹம்மது கஜ்னி, ஆயிரக்கணக்கான ஹிந்து ஆலயங்களை அழித்தான். அதில் குஜராத்தில், சௌராஷ்ட்ரா பகுதியில் இருந்த சோமநாதர் ஆலயமும் அடக்கம். அந்த கோவில் மிக அற்புதமாய் இருந்தது. அதில் 300 இசைக் கலைஞர்கள், 500 நடன மங்கைகள், 300 பக்தர்களுக்கு முடியெடுக்கும் பணியாளர்கள் என பலர் பணி புரிந்தார்கள். அருமையான 56 தேக்கு தூண்களால் அந்த கோவில் நிறுவப்பட்டிருந்தது என்று சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கி பி 1025ம் ஆண்டு கஜ்னி அதை காத்து நின்ற 50000 மக்களை கொன்றழித்து அதனை அழித்தான். அதை காத்து நின்றவர்களில் 90 வயதான கோக்னா ரானாவும் அடக்கம். முஹம்மது சோமநாதர் ஆலயத்தில் இருந்த லிங்கத்தை உடைத்து அதன் துண்டுகளை மெக்காவிலும் மெதினாவிலும், தன் தர்பாரிலும், கஜ்னி என்ற மசூதி ஆகியவற்றின் வாயில் படிக்கட்டுகளில் பதித்தான். அந்த பேரழிவை நடத்திவிட்டு 61/2 டன் தங்கத்தோடு அவன் நாடு திரும்பினான். இன்றைய வாங்கும் சக்தியோடு ஒப்பிட்டு பார்த்தால் அதன் தற்போதைய மதிப்பு 13 லட்சம் கோடி என்கிறார்கள் பொருளாதார் நிபுணர்கள். அதாவது பத்மநாபர் கோவிலில் கிடைத்த கருவூலத்தை போல் 13 மடங்கு.
ஜகாரியா-அல்-கஜ்வானி எனும் அரேபிய புவி இயல் அறிஞர் சோமநாத ஆலயத்தின் அழிவை பற்றி கூறுகிறார்.
"சோம்நாத நகரம் கடற்கரை ஒரத்தில் அமைந்த நகரம். அந்த கோவிலில் உள்ள அற்புதங்களில் அதன் பிரதான மூர்த்தியான லிங்கம் மிகவும் முக்கியமானது. அந்த லிங்கம் மேலும் கீழும் எந்த வித பிடிப்பும் இல்லாமல் இருந்தது. கோவிலின் மைய பகுதியில் அது இருக்கும். அது காற்றில் அவ்வாறு மிதந்து இருப்பது பார்ப்பவரை அதிசயப்பட வைக்கும். அவர்கள் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் கூட!! ஹிந்துக்கள் அந்த கோவிலுக்கு அம்மாவாசை நாட்களில் தீர்த்த யாத்திரை செல்வார்கள். ஆயிரமாயிரமாய் அங்கு சேர்வார்கள். முஹம்மது அங்கு போர் புரிந்து செல்கையில் அவன் அந்த கோவிலை பிடிப்பதற்கும், அதை அழிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டான். எதற்கென்றால் அதை அழிக்கும் பொருட்டு பல ஹிந்துக்களை முஹம்மதியர்களாய் மாற்றக் கூடும் என்பதால். கடைசியில் அவன் ஒருவழியாய் அதை பிடித்து பல ஆயிரம் ஹிந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றினான். சோமநாதர் ஆலயத்தை அவன் கி.பி. 1025 ஆம் ஆண்டு பிடித்ததும் அந்த லிங்கத்தை வியந்து பார்த்தான். பின்னர் அதை அவனே உடைத்தெறிந்து பின் அதனை எடுத்து வர உத்தரவிட்டான்"
பின்னர் புனரமைக்கப்பட்ட அக்கோவிலை கி.பி. 1296 ஆம் ஆண்டு, சுல்தான் அல்லாவுதின் கில்ஜி அழித்தான். ஆயுதம் இல்லாமல் அதை தடுக்க வந்த 50000 பேர்கள் வாளுக்கு இறையானார்கள். 20 ஆயிரம் பேர் அடிமைகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
மீண்டும் அக்கோவிலை மஹிபாலா தேவா என்கிற சுதாசம அரசர் கி.பி. 1308ம் ஆண்டு கட்டினார். அதை 1375ம் ஆண்டு மீண்டும் முதலாம் முஜாஃபர் ஷா என்பவன் அழித்தான்.
மிண்டும் அது புனரமைக்கப்பட்டது. கி.பி 1451 ஆம் ஆண்டு மஹ்முத் பெக்தா என்பவனால் மீண்டும் அழிக்கப்பட்டது.
பின்னரும் உயிர்பெற்ற அக்கோவிலை, கடைசியாக கி.பி. 1701 ஆம் ஆண்டு ஔரங்கசீப் என்ற கொடுங்கோலனால் மீண்டும் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் அக்கோவிலின் தூண்களை உபயோகப்படுத்தி, ஒரு மசூதி எழுப்பப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிறகு ஹிந்துக்களின் பெரு முயற்சியால் அக்கோவில் மீண்டும் எழுந்து நிற்கிறது. ஆனால் அது நமக்கு ஆயிரம் பாடங்களை சொல்லித் தரும் ஒரு பொக்கிஷமாய் உள்ளது. இன்றைக்கு அதன் கோபுரங்கள் உயர்ந்து இருந்தாலும், "எல்லா மதமும் ஒன்றுதான்" என்று கூறும் மூடர்களை கண்டு அது வெட்கத்தால் தலை குனிந்து நின்றுகொண்டிருக்கிறது. சரித்திரத்தின் மிக மோசமான தன்மையே அது மீண்டும் மீண்டும் திரும்புகிறது என்பதுதான் என்று அது நமக்கு ஞாபக படுத்துகிறது. ஒற்றுமையும், அதர்மத்தை தட்டி கேட்கும் தன்மையும் நம்மில் அழிந்துவிட்டதை அது உலகிற்கு பரைசாற்றுகிறது.




![வாஸ்து:குறைபாடுகளும் நிவர்த்திகளும்:
வாஸ்து மூலை
1. தென்மேற்கு மூலை ( கன்னி மூலை ) எப்போதும் சரியாக 90 டிகிரியில் இருக்கவேண்டும். அதில் கவனம் மிகமிகத் தேவை. அதில் கோட்டை விட்டால் ஓட்டை விழுந்தமாதிரிதான். உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால், ஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு சுவர்கள் சரியாக 90 டிகிரி அமைப்பில் இருக்கிறது. அந்த சுவற்றுக்கு இணையாக ( பேரலெல் )காம்பவுண்டு சுவர் செல்லவேண்டும். ஆனால், அந்த வீட்டில் அவ்வாறு அமையவில்லை. மேற்கில் காம்பவுண்டு சுவர், வீட்டு சுவர் இரண்டுக்கும் மத்தியில் காலி இடம் 3′ வருகிறது. ஆனால், அது வடக்கில் செல்லச் செல்ல 90 டிகிரி வளர்ந்து வடக்கு பக்கம் 31/2′ யாக வளர்ந்து விடுகிறது. அதனால் வாயு மூலை வளர்ந்து விடுகிறது. மனைக்கு அது ஒரு குறைபாடே. எந்த கட்டத்திலும் வாயுமூலை வளர்ந்திருக்கக்கூடாது.
“வாயுமூலை வளர்ச்சி விவகாரத்தின் வளர்ச்சி” என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய சிமெண்ட் கலவையை காம்பவுண்டு சுவரின் உட்பக்கம் அப்பியும், செங்கல்லைப் பிளந்து கனத்தைக் குறைத்தும் சரி செய்யலாம்.
2. அடுத்து வரும் பிரச்சினை முன்னதைவிடப் பெரியது. சிக்கலானது. சீரியஸானது. ஒரு கட்டடத்தை எப்போதும் நான்கு மூலைகள் மட்டும் வருமாறு அமைக்கவேண்டும். அதில் அழகிற்காக மூலையைக் கூட்டினாலும், குறைத்தாலும் பிரச்சினைதான். அந்த வீட்டிற்கு படிக்கட்டுக்கு அடியில் டாய்லெட் அறை அமைந்துள்ளது. வடமேற்கில் டாய்லெட் அறை பெற்றவுடன் மொத்த கட்டடம் வாயுமூலை வளர்ச்சியைப் பெற்றுவிடுகிறது. அதனால், கட்டடம் 1முதல் 6 மூலைகளைப் பெற்றுவிடுகிறது. இது சரியானதல்ல. நான்கு மூலைகள் மட்டும் வருமாறு மாற்றியமைதுக்கொள்வது மிக அவசியம்.
3. அடுத்ததாக மிகவும் கவகிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ‘ ஈசான்ய வெட்டு ‘. இதுவும் சரி செய்யப்படவேண்டிய ஒன்றாகும். ” ஈசான்ய வெட்டுக்கு இருக்காது சுகமான வாழ்க்கை ” என்கிறது வாஸ்து சாஸ்திரம். அந்த வீட்டில் ஈசான்யத்தில் தூண் உள்ளது. ஆனால், அதை சுவராக எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்த அமைப்பினால், தரைதளம் ஈசான்ய வெட்டாக அமைகிறது. பார்வைக்கு மேல்தளம் கான்கிரீட் வந்து, ஈசான்யம் வெட்டு இல்லாததுபோல் தோன்றும். ஆனால், இந்த மாதிரி அமைப்பு ஈசான்ய வெட்டுதான். இதனை சரி செய்வது எப்படி?கிழக்கு பக்கம் தூணோடு இணைக்க ஒரு சுவர் 3/4′ கனத்திற்கு 3′ உயரத்திற்கு கட்ட வேண்டும். அதேபோல் வடக்குப் பக்கம் தூணிலிருந்து 3/4′ கனத்திற்கு 3′ உயரத்திற்கு சுவர் கட்டவேண்டும். அந்த சுவற்றின்மீது கிரில் வைத்து அழகுபடுத்தலாம். காற்றோட்டமாகவும் இருக்கும். அல்லது மேல் கான்கிரீட் வரை சுவர் எழுப்பி ஜன்னலும் வைத்துக்கொள்ளலாம். வடக்குப் பக்கம் மெயின் டோருக்கு எதிரில் ஒரு சிறிய கேட் அல்லது கதவு வெளியேவர வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு அமைப்பதில் கட்டடம் வாயுமூலை வளர்ச்சி தடுக்கப்பட்டு மொத்த கட்டடம் நாலு மூலைகளைக் கொண்டதாகவே அமையும்.
4. இன்னுமொரு பிரச்சினை என்னவென்றால், ஈசான்ய உச்ச பகுதியில் மெயின் கேட் இருப்பது நல்ல அமைப்புதான். ஆனால், அந்த கேட் மூலம் வெளியே மெயின் ரோட்டிற்கு செல்லும் வழி நேராக அமையாமல், ஆக்கிநேய நடையாக அமைந்துவிட்டது. அவ்வாறு அமைந்தால், குடிப்பழக்கம் , விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்தவீட்டு உரிமையாளரின் மகன் கீழே விழுந்து மிகுந்த பொருட் செலவு செய்தும் உள்ளார். அதனை சரி செய்ய கேட்டை நேராக மெயின் ரோட்டிற்கு செல்லும்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.
எனவே வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு ஆழமான விஷயம். எப்போதும் தேர்ந்த அறிவுடனும் தெளிவுடனும், வாஸ்து சம்பந்தப்பட்ட மாற்றங்களைச் செய்யவேண்டியது அவசியம். அரைகுறையாக எதையாவது செய்தால், வேறுவிதமான தொல்லைகள் ஏற்படலாம் என்பதால், நன்கு விஷயமறிந்தவர்களின் ஆலோசனையைப் பெற்றபின் வாஸ்து மாற்றங்களைச் செய்து நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.]
நன்றி :-http://moonramkonam.com/](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10521974_868839776467025_3291840523873357112_n.jpg?oh=c58964874be62b54a4e9d362a5f3a519&oe=54879601&__gda__=1422902457_594763ed8d7ff8804aa67b8667afd9a4)

