Monday, March 23, 2015

அருள்உடை - சப்த கன்னியர் - சரித்திரம்!

சப்த கன்னியர் (மாதர்) வரலாறும், வழிபாடும்!

அருள்உடை - சப்த கன்னியர் - சரித்திரம்!
எல்லாம் வல்ல - என்றும் - அன்றும் - இன்றும் நம்மை ஆட்கொண்டருளும் கர்த்தா - சிவபெருமானே யாவார்! அவனுடைய சக்தி சிவசக்தி என்று பெயர் பெறும். சிவபெருமான் சிவன் என அழைத்து வரப்படுதல் போல; அவனது சக்தியும் சிவா என்றும் சிவை என்றும் சொல்லப்படுவாள்! சிவனோடு என்றும் பிரியாது விளங்கி அருள் செய்பவள் சக்தி. எந்த தெய்வத்தை யார் வேண்டி நின்றாலும், அந்த இறைவனாக நின்றருளும் சிவனோடு - சக்தியும் உடனுறை தெய்வமாய் நின்றருளுவாள்!
சிவாலயங்களில் இச்சக்தி - மூலசக்தியாகவும் (கருவறை அம்பாள்) யோக சக்தியாகவும் (அர்த்த மண்டப அம்பாள்) போக சக்தியாகவும் (மகா மண்டப அம்பாள்) வீர சக்தியாகவும் (முன் மண்டப அம்பாள்) இருந்தருளுகின்றாள். அதைப் போலவே, இச்சா சக்தியாகவும் (கருவறைக்கு தெற்கு மாட அம்பாள்) கிரியா சக்தியாகவும் (கருவறைக்கு மேற்கு மாவட அம்பாள்) ஞான சக்தியாகவும் (கருவறை வடக்கு மாட அம்பாள்) இருந்தருளுகின்றாள்! இவளது தனித்த ஆலயங்கள் யாவும் அம்பாள் ஆலயம் எனப் பொதுவாகவும், காமக்கோட்டம் - என ஆகம வழக்கிலும் சொல்லப்படும். அவ்வாலயங்களில் இவள் இருந்தும் - நின்றும் தன் அன்பர்களுக்கு அருளாசி நல்குவாள்! பொருள் ஒன்றே உள்ளது. ஏகம் சத் விப்ரா பகுதாவ தந்தி - என்பது வேதவாக்கியம். அம்முறையில் சக்தி என்பது ஒன்றே! ஆயினும், அது அதன் தொழிற்பாட்டால் பலவகை அம்பாள் பேதங்களாகக் கருதப்படுகின்றது. சக்தியை மட்டும் வழிபடுவோர் சாக்தர் - எனப் பெயர் பெறுவர்! சக்தி தான் பலவோ என்னில், தான் ஒன்றே அநேகமாக வைத்திடும் காரியத்தால் - என்று இதைச் சிவஞான சித்தியார் கூறும்.
சிவபெருமான்: பவன் - சர்வன் - ஈசன் - பசுபதி - ருத்ரன் - உக்ரன் - பீமன் - மகாதேவன் எனப்படும். அட்டமூர்த்தியாய் இருந்து அருள் புரிகின்றான்.
மகா விஷ்ணு: கூர்மம் - மச்சம் - வாமனம் - வராகம் - நரசிம்மம் - பரசுராமன் - இராமன் - கல்கி என்ற அட்ட வடிவம் கொண்டு ஆட்சி புரிகின்றான்.
விநாயகர்:  விசாலாட்சர் - விசுவரூபர் - அட்சயர் - மதவிப்பிரமர் - உன்மத்தர் - லளிதர் - பீமர் - தீக்ஷணதம்ஷ்டிரர் என்ற அட்டத் திருமேனி எடுத்து ஆட்கொண்டருளுகின்றார்.
முருகன்: ஜயந்தன் - அக்னிசிகன் - பூதபதி - கிருத்திகாபுத்ரன் - சேனானி - குகன் - ஹேமசூலன் - விசாலாட்சன் என்ற அட்ட பேதம் கொண்டு அருள் தருகின்றார்.
மகாலட்சுமி: தனலட்சுமி - தான்யலட்சுமி - தைர்யலட்சுமி - விஜயலட்சுமி - வீரலட்சுமி - சந்தானலட்சுமி - கஜலட்சுமி - வித்யாலட்சுமி என்ற அட்ட லட்சுமிகளாய் இருந்து வளம் சேர்க்கின்றாள்.
சிவபெருமானின் இடப்பாகத்தில் என்றும் நீங்காது விளங்கியருளும் அன்னை பராசக்தியும், நல்லோர்களைக் காப்பாற்று முகத்தான், பலரூபங்களை ஏற்று அருளுகின்றாள்! அன்னை பராசக்தி எடுத்த திருமேனிகள் ஏழு எனவும் - எட்டு எனவும் - ஒன்பது எனவும் சொல்லப்படும். அவைகள், சப்த கன்னியர் என்றும் அஷ்ட சக்திகள் என்றும் நவமாதாக்கள் என்றும் அழைக்கப்படுவர்.
சப்தகன்னியர்:  பிராமி; - மாகேசுவரி - கவுமாரி - வைஷ்ணவி - வராகி - இந்திராணி - சாமுண்டி எனப்பெயர் பெறுவர்.
அஷ்ட சக்திகள்: இந்த எழுவரோடு ரௌத்திரி சேர்க்கப்படுவாள். ஆனால், மதுரை அஷ்ட சக்தி மண்டபத்துள்; ரௌத்திரிக்குப் பதிலாக; மதுரைமீனாட்சியின் அவதார கோலமான சியாமளா சேர்த்து எழுந்தருளுவிக்கப்பட்டுள்ளாள்.
நவ மாதாக்கள்:  நவ மாதாக்கள் எனப்படுவோர் ஒன்பது துர்க்கைகளேயாவர் அவர்கள் மகா துர்க்கா - ருத்ர சண்டா - சண்டோக்ரா - ப்ரசண்டா - சண்டா - சண்ட நாயிகா - சண்டாசி - சண்டவதீ - உக்ர சண்டா எனப்பெயர் பெறுவர்!
இவர்களை, மனோண்மணி - சர்வபூதமணி - பலப்பிரதமணி -பலவிகரணி - கலவீகரணி - காளி - இரவுத்திரி - சேட்டை - வாமை என்ற ஒன்பது சக்திகளாகச் சைவ சித்தாந்தம் கூறும். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும் அருளாற்றலாகிய சிவசக்தியானது. தனக்கென்று ஒரு பெயரும் - வடிவமும் இல்லாத தாயினும், அன்பர்களின் பொருட்டுப் பல பெயர்களையும் - வடிவங்களையும் கொள்ளும். இம்முறையில், எடுத்த திருமேனிகளே - சப்த கன்னியர் என்றும் - சப்த மாதாக்கள் என்றும் அழைக்கப்படுவர்! மகாகவி காளிதாசனின் - குமார சம்பவம் - என்ற மகா காவியத்தில் சப்த கன்னியர் சிவபெருமானின் பணிப்பெண்டிர் என்ற குறிப்புக்காணப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே சிவன் திருக்கோயில் கருவறை - தெற்கு திருமாளிகைப் பத்தியில் வடக்குத் திருமுகம் உடையவர்களாய் இந்த அம்பிகைகளின் திருமேனிகள் எழுந்தருளுவிக்கப்பட்டிருத்தலைக் காணலாம்! மூவர் முதலிகளில் ஒருவரான - சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது உலாவில், இக்கன்னியர் எழுவரும்; சிவபெருமானின் திருவுலாவின் போது; வீரபத்திரர் மற்றும் விநாயகர் காவலுடன் நடனமாடிச் சென்றதாகப் பாடித் தெரிவிப்பார். இதன் அடிப்படையிலேயே, சப்த கன்னியர் திருமேனிகள் அனைத்தும் வீரபத்திரர் மற்றும் விநாயகர் திருமேனிகளுடன் இணைந்து நவபேதங்களாக அமைந்திருக்கக் காண்கின்றோம். அத்தோடு, மத்தியப் பிரதேசம், தேவா மாவட்டத்திலுள்ள கூர்க்கி என்னும் இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டு, அலகாபாத் காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ள வீரபத்திரர் - விநாயகர் திருமேனிகளுடன் கூடிய சப்த கன்னியர் திருமேனிகள் நடனக் கோலத்துடன் இருக்கக் காண்கின்றோம். குசாணர்களது ஆட்சிக் காலம் முதல் சப்த கன்னியர் எனப்படும் சப்த மாதாக்கள் வழிபாடு தொடங்கிற்று எனக் கருதலாம். அவர்களது திருக்கோயில்களில் - சப்த மாத்திரிகைகள் சாதாரணப் பெண்கள் போன்று, இரு கரங்கள் கொண்டவர்களாய்; இரு புறமும் ஆயுதபுருடர்களுடன் கூடியதாய், அமைக்கப்பட்டன. குப்தர்கள் ஆட்சிக்காலத்தில் இவ்வழிபாடு சிறப்புப் பெற்றது. அவர்கள் காலத்தில் இந்த சப்த மாத்திரிகைகள் காவல் தெய்வமாகக் கருதி வழிபடப்பட்டனர். எனவே, ஆயுதங்கள் வாகனங்கள் அமைக்கும் வழக்குத் தொடங்கிற்று. முன்னும் - பின்னும் இருந்த காவலர் உருவங்கள் மாற்றப்பட்டு அவ்விடங்களில் வீரபத்திரர் மற்றும் விநாயகர் திருமேனிகள் எழுந்தருளுவிக்கப்பட்டன.
பல்லவர் ஆட்சிக்காலத்தில் - சப்த மாதர் வழிபாடு தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டது. பல்லவ மன்னன் இராசராச சிம்மன் கட்டிய காஞ்சிபுரம் கைலாசநாதர் கலைக்கோயிலில் சப்தமாதர்கள் திருமேனிகள் படைக்கப்பட்டன. சோழர்கள் ஆட்சியில் எழுப்பப்பட்ட கற்கோயில்களின் அட்டபரிவார மூர்த்தங்களுள் ஒன்றாக சப்த கன்னியர் திருமேனிகள் எழுந்தருளுவிக்கப்பட்டன. பாண்டியப் பேரரசர்களும், சோழர் வழக்கினையே பின்பற்றினர். மாத்ணாம் ஸகணாநாம்து ஸ்தாபநம்கத்யதே உதுநா சிவாயயேஷீ யாம்யே ஸ்யாத் க்ராமாதிஷ் வீச கோசரே; ஸெளம்யேவாதத் ப்ரசதஸ்தம் ஸ்யாந்தத்யா தீ நாஞ்ச தீரகே, உத்யா நேசவதுநே ரம்யே பர்வதேவாமநோ நமே - என்ற அஜிதாகம - அஷ்ட சத்வாரிசம் சத் படலவாக்கியத்திற்கிணங்க தமிழச் சிவாலயங்களின் தென் பாகத்திலும், க்ராமங்களின், ஈசானத்திலும், நதிகளின் கரைகளிலும், மலையடிவாரங்களிலும், சோலைகளின் நடுவிலும், சப்த கன்னியர் திருமேனிகள் இடம் பெற்றன!
சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்திரிகைகள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்படுவர். சில இடங்களில் தனித்தனித் திருமேனிகளும் கொண்டிருப்பர். நின்ற நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் வழக்கில் இல்லை. இருந்தருளும் நிலையில், இடது காலை மடித்து சுகாசன நிலையிலோ அல்லது உத்குடி ஆசன நிலையிலோ வைத்திருப்பர். வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் காணலாம். ஆகமம் மற்றும் புராணங்களில் இவர்களுக்குக் கரங்கள் பல கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக இரண்டு அல்லது நான்கு கரங்களுடனேயே இருப்பர். இரண்டு கரங்களானால் அபய வரதம் கொண்டிருப்பர்; நான்கு கரங்களானால் முன்னிரு கரங்களை அபயவரதமாகவும் பின்னிரு கரங்களில் தத்தமக்குரிய ஆயுதங்களைத் தாங்கியிருப்பர்.
தமிழகத்துச் சிவாலயங்களில் வீரேஸ்வரஸ்ச பகவான் த்ரிசூல : ச மாத்ரூணாம் அக்ரதோ பவேத்: மத்யேச மாதர: கர்த்தவ்யா: அந்தே தேஷாம் விநாயக - என்ற அம் சுமத் பேதாகமம் - 47 - ஆம் படல சூத்திரத்திற்கிணங்க; வீரபத்ரர் திருமேனி அன்னையர்க்கு முன்பும்; நடுவில் சப்த கன்னியர்களும்; அடுத்து விநாயகர் திருவுருவும் அமைக்கப்பட்டுள்ளன. கிராமியக் கோயில்களில் முதலில் கருப்பண்ணசாமி நின்ற நிலையில் இருக்க; அடுத்து சப்த கன்னியர் திருமேனிகள் எழுந்தருளுவிக்கப்படுகின்றன. தமிழகத்தின் சிவபெருமான் திருக்கோயில்களின் முதல் திருச்சுற்று - தென் திருமாளிகைத் திருப்பத்தியில் (மேடை) சப்த கன்னியர் எனப்படும் சப்த மாதர்கள் திருநிலை அமைந்திருக்கக் காணலாம். அம்மாதர் சிலைகளின் வலப்புறத்தே - வீரபத்திரர் திருவுருவும் இடப்புறத்தே - விநாயகர் திருவுருவம் அமைந்திருப்பதையும் காணலாம். வீரபத்திரர் திருமேனியை; திருக்கோயில் பூசகர்கள் தட்சிணாமூர்த்தி எனவும் கூறுவர், அது ஆகமம் அறிய வழக்கேயாகும். சப்த மாத்ருக்கள் முன்புள்ளவர் வீரபத்திரரும் அல்ல; வீரபத்ரை யாரும்; அதைப்போலவே பின்புள்ளவர் விநாயகரும் அல்ல; - விநாயகி எனப்படும் கணேசாயினி - ஆகிய விக்னேஸ்வரி ஆவாள்! இந்த வேற்றுமையைப் பூசகர்கள் கூட அறிந்திருக்க நியாயமில்லை; தத்துவம் உணர்ந்தோரே அறிவர். பொதுமக்களால் இவ்வேற்றுமையை அறிய முடியாது; அத்திருமேனிகளின் ஆடைகள் மறைத்துவிடும்; பூசகர்களும் அத்திருமேனிகளின் அபிடேகங்களின் போது ஊன்றி நோக்கினால் மட்டுமே அறியக்கூடும். மார்புப் பகுதி மட்டுமே மாறுபடும். இதர அமைப்புக்கள் ஒன்றுபோலவே இருக்கும்.
வீரபத்திரை என்ற திருமேனியும்; விநாயகி என்ற திருமேனியும்; திருக்கோயில்களில் இருக்கக் காணலாம். அதற்கான காரணத்தை பூசகர்கள் அறிந்திருக்கவில்லை; எனவே, ஆய்வாளர்கள் அறிய இயலவில்லை என்று எழுதுகின்றனர்! இறைத் திருமேனிகளாகிய; வீரபத்திரை மற்றும் விநாயகி என்ற இருவரும் சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்ருக்கள் முன்பும் - பின்பும் அமைய; தத்துவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மூர்த்தங்களாகும்! பெண் தெய்வங்களின் காவலர்களாக பெண்கள் தானே இருக்க வேண்டும் ஆண்களுக்கு அங்கு வேலை இல்லையே? அம்பிகை பராசக்தியின் காவலர்களாக ஜயா - விஜயா தானே இருக்கின்றனர். அன்னை மகாலட்சுமி கூட கருடி வாகனத்தில் தானே எழுந்தருளுகின்றாள்! சிவபெருமான் திருக்கோயில் - அஷ்ட பரிவார அமைப்பினைக் கூறும் மான சாரம்; மூலமூர்த்தி கருவறைக்குத் தெற்கில் சப்த மாதர்களை அமைக்க வேண்டும் என்று கூறும். அதையே சற்று விரிவாக - விஸ்கர்மியம் கருவறைக்கு முன் விருஷபமும் அக்னி மூலையில் அக்னி அல்லது துர்க்கையும், தெற்கில் சப்தமாதர்கள், அதற்கு வலப்புறத்தில் வீரபத்திரன், இடப்புறம் - விநாயகரையும் ஸ்தாபித்தல் வேண்டும் என்று கூறும் மேலும், சப்த மாதர்களுடன் கூடிய வீரபத்திரனை மேற்கு முகமாகவும் - விநாயகரைக் கிழக்கு நோக்கியவாறும் ஸ்தாபித்தல் வேண்டும் என்று கூறி விளக்கும் ! இம்முறைப்படியே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், சப்த கன்னியர் அமைந்திருக்கக் காணலாம்.
அந்த சப்த கன்னியர் திருமேனிகள்
ப்ராஹ் மாணீம் ப்ரம்ஹவத்குர்யாத் மகேளீம்
ஈஸ்வரீரர் பமாம்; குமார வத்ச கௌமாரீம்
விஷ்ணுவத்ச, வைஷ்ணவீம் ததா;
குரோதாந நாந்து வாராஹீம் வாம நீந்து
ஹலாயூதாம்; ஸக்ராணீம் ஸக்ரவத்குர்யாத்
சாமுண்டீம் உக்ரரூபிணீம் - என்ற சுப்ர பேதாகமம் - 42 ஆம் படல சூத்திரங்களின் படி; ப்ரம்மாணியைப் ப்ரம்மனை ஒப்பவும், மகேசியை ஈசனை ஒப்பவும், கவுமாரியை குமாரனை ஒப்பவும், வைஷ்ணவியை அரியை ஒப்பவும், வராகியை வராக முகத்துடனும், இந்திராணியை இந்திரனை ஒப்பவும், சாமுண்டியை கபால சூலத்துடனும் - திருக்கோயில்களில் எழுந்தருளுவிக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் வரத ஆபயம் கொண்ட நாற்கரத்தர். தங்கள் தலைவர்கட்குரிய நிறமும் - படையும் - கொடியும் கொண்டவர்கள். தாமரை ஆசனங்களில் அமர்ந்திருப்பர் இந்த சப்த கன்னியர் எனப்படும் சப்த மாதாக்களின் தோற்றம் பற்றிய புராணச் செய்திகளையும் காண்போம்:
1. சிவன் அந்த காசுரனுடன் போரில் ஈடுபட்ட போது; அந்த காசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து யோகேசுவரி - என்ற சக்தியைத் தோற்றுவித்தார் என்றும்; அவள் மாகேசுவரி - என்ற சக்தியை உருவாக்கினாள் என்றும்; அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் - தனது அமட்ச இந்திராணியையும் ; முருகன் - தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி - தனது அம்ச வராகியையும்; யமன் - தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர் என்று வராகபுராணம் கூறும்.
2. சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.
3. நைரிதன் என்ற அசுரனை ஒழிக்கப் பிரதம்மா யுத்தம் செய்த போது; அவருக்கு உதவி புரிவதற்காக பிற தேவர்கள் தங்களது சக்திகளை உருவாக்கி, அளித்தனர் என்று சுப்ரபேதாகமம் செப்புகின்றது.
4. அக்னி புராணம், மச்ச புராணம், தேவி புராணம் என்ற புராண நூல்களிலும், பூர்வ காரணாகமம், அம்சுமத் பேதாகமம் என்ற ஆகம நூல்களிலும்; விஸ்வகர்ம சாஸ்திரம், சில்பரத்தினம், ரூப மண்டலம், ரூபாவதாரம் என்ற சிற்ப சாஸ்த்திர நூல்களிலும்; இவர்களது உருவ அமைப்பு ஆயுதங்கள் முதலியன கூறப்படுகின்றன.
5. ஆண் தெய்வங்களின் சக்திகளான இவர்கள் தத்தமக்குரிய ஆண் தெய்வங்களின்; ஆயுதங்கள் ஆபரணங்கள் வாகனம் கொடி என்பனவற்றினைக் கொண்டு விளங்குவர்!
சிவன் திருக்கோயிலில் சப்த கன்னியர் அமைப்பு
பிராமி
மாகேசுவரி
கவுமாரி
வைஷ்ணவி
வராஹி
இந்திராணி
சாமுண்டி
வீரபத்திரை
விநாயகி
அம்பிகை திருக்கோயிலில் சப்த மாதாக்கள் அமைப்பு
பிராம்மி
மாகேஸ்வரி
கவுமாரி
நாராயணி
வாராஹி
ஐந்திரி
சாமுண்டா
அம்பிகை கருவறை.
அய்யனார் திருக்கோயிலில் கன்னிமார் பெண்டுகள் திருவுரு அமைப்பு
கருப்பணசாமி
பிராமி
மாகேசுவரி
கவுமாரி
வைஷ்ணவி
வராஹி
இந்திராணி
சாமுண்டி
பூர்ணா
அய்யனார்
புஷ்கலா
யானை
குதிரை
காளை
நாய்
சேவல்
கிராம தேவதை - குதிரை வாகன அமைப்பு
பிராமி
மாகேசுவரி
கவுமாரி
வைஷ்ணவி
வராஹி
இந்திராணி
சாமுண்டி
குதிரைமேல் கருப்பர்
நீர் நிலைக்கரை சப்த கன்னியர் அமைப்பு
கருப்பர்
பிராமி
மாகேசுவரி
கவுமாரி
வைஷ்ணவி
வராஹி
இந்திராணி
சாமுண்டி
பூர்வாங்க பூஜை
1. விநாயகர் சுலோகம் துதி:
சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்;
ப்ரசன்ன வதனம் த்யாயேத்
சர்வவிக்நோப சாந்தயே :
2. மண்ணுல கத்தினில் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்
சப்த கன்னியர் சுலோகம் துதி:
பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ் மாணீம்
1. ஈஸ் வரீரர் பமாம் மகேசீம்
குமார வத்ச கௌ மாரீம்
விஷ்ணு அம்ச வைஷ் ணவீம்
வாம நீந்து ஹலாயுத வாராஹீம்
இந்திர ரூப மாதா ஐந்தரீம்
கபால சூல ஹஸ்தாம்ச சாமுண்டீம்
த்யாயேத் சப்தமாத நமஸ் துதே.
2. மேதி புள் அலகை தோகை ஏறு <உவணம்
வேழம் என்ற கொடி ஏழுடைச்
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
துணைப் பதங்கள் தொழு வாம்
- கலிங்கத்துப்பரணி
1. பிராமி - ரூப லக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
பிரம்மனின் சக்தி பிராம்மி எனப்படுவாள். அவள் நான்கு கரங்களையும் ஒரு முகத்தையும் உடையவள். முன் இரு கரங்களை அபயவரதமாகவும், பின் இரு கரங்களில் கெண்டி - ஸ்படிக மாலைகளை உடையவள். வெண்ணிற ஆடை அணிந்தவள்; ஸ்படிக மாலையை ஆபரணமாகப் பூண்டவள். அன்னவாகனத்தின் மேல் அமர்ந்தவள்; அதையே கொடியாகவும் உடையவள். தர்ப்பைப்புல் நீரால் இல்லத்தைச் சுத்தப்படுத்துபவள்.
பிரம்மனின் அம்சமாகையால் சிருஷ்டிக்கு அதிபதியானவள்; எனவே, இவளை வணங்கினாள் குழந்தைப் பேறு கிட்டும். மேலும், உ<பாசித்தால் கலைகளின் அதிதேவதை ஆகையால் கலைஞானம் கிட்டும் கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கலாம்!
பிராம்மி சாவித்ரி பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம்
ஓம் - ஹ்ரீம் - பிராம்மி - ஆசனாயயாய நம:
ஓம் - ஹ்ரீம் - பம் - பிராம்மி - மூர்த்தியை நம:
ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்மியே நம:
2. காயத்ரி :
ஓம் - ஹம்ஸத்வஜாயை வித்மஹே;
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, ப்ராம்மி ப்ரசோதயாத்
3. த்யான ஸ்லோகம் :
சதுர்ப்புஜா விஸாலாட்சி;
தட்த காஞ்ச நசந்நிபா;
வரதாபய ஹஸ்தா ச
கமண்டல் வக்ஷ மாலிகா;
ஹம்ஸத்வஜா, ஹம்ஸாரூடா,
ஜடா மகுட தாரிணீ,
ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹரூபிணீ, நமஸ்துதே
4. மூலமந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்யை - நம:
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க
6. பூஜை :
பீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்ய - தாம்பூலம் - சமர்ப்பிக்க.
7. துதி :
ஹம்ஸயுக்த விமானஸ்தே
பிரஹ்மாணீ ரூபதாரிணி
கௌரி சாம்ப க்ஷரிகே
தேவி அம்பிகே நமோஸ்துதே
பிராம்மி சாவித்ரி - அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் பிராம்மியை நம
ஓம் பிதாமகாயை நம
ஓம் பரமேஷ்டியை நம
ஓம் பத்மஜாயை நம
ஓம் கமண்டலுதாயை நம
ஓம் காவேரிஜனகாயை நம
ஓம் கவோமுக்திதாயை நம
ஓம் காலரூபாயை நம
ஓம் கலாகாஷ்டரூபாயை நம
ஓம் சதுர்ஹஸ்தாயை நம
ஓம் சாத்வி காயை நம
ஓம் சாது மித்ராயை நம
ஓம் சந்துஷ்டமனசேயை நம
ஓம் சதுர்வக்த்ராயை நம
ஓம் அம்புஜஹஸ்தாயை நம
ஓம் சிவவிஷ்ணுப்ரியாயை நம
ஓம் ஹிரண்ய கர்ப்பாயை நம
ஓம் சிருஷ்டிகர்த்தியை நம
ஓம் சத்தியலோக நிவாயை நம
ஓம் வேததாரின்யை நம
ஓம் லோபாமுத்ரார்சியை நம
ஓம் தாத்ரேயை நம
ஓம் விதாத்ரேயை நம
ஓம் பத்மாசனாயை நம
ஓம் த்ரைலோக்யநாதாயை நம
ஓம் வராபயகராயை நம
ஓம் வித்யாதீசாயை நம
ஓம் ஜகன்னாதாயை நம
ஓம் ரவிவம்சசூபூஜ்யை நம
ஓம் திவ்யாம் பரதாயை நம
ஓம் லோக பூஜ்யாயை நம
ஓம் சத்ய ஸ்வரூபாயை நம
ஓம் சத்ய வாசே நம
ஓம் சகுணா ரூபாயை நம
ஓம் வாக தீசாயை நம
ஓம் விரிஞ்சீநேயை நம
ஓம் தேவ தேவாயை நம
ஓம் அக்ஷமாலாதராயை நம
ஓம் ஹிமாசலநிவாசிநியை நம
ஓம் சார பூதாயை நம
ஓம் காயத்ரியை நம
ஓம் பவ்யாயை நம
ஓம் த்ரிமூர்த்திரூபாயை நம
ஓம் சர்வஜ்ஞாயை நம
ஓம் தருண்யை நம
ஓம் சூபாயை நம
ஓம் த்ரிபதாயை நம
ஓம் த்ரிலோசநாயை நம
ஓம் தச ஹஸ்தாயை நம
ஓம் தசாயுதராயை நம
ஓம் த்ரிவேதரூபாயை நம
ஓம் சந்த்ர வர்ணாயை நம
ஓம் நித்யாயைப்ரஹ்மபூஜிதாயை நம
ஓம் மகா வித்யாயை நம
ஓம் ஸரஸ் வத்யை நம
ஓம் சர்வ வித்யாயை நம
ஓம் சர்வமந்த்ராயை நம
ஓம் சுத்த வஸ்த்ராயை நம
ஓம் சுத்த வித்யாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் சௌம்யாயை  நம
ஓம் ப்ரம்மலோக நிவாசிக்யை நம
ஓம் ஜல கர்ப்பாயை நம
ஓம் ஜலப்ரியாயை நம
ஓம் ஸ்வதாயை நம
ஓம் சோடச கலாயை நம
ஓம் யஞ்ஞப்ரியாயை நம
ஓம் யஞ்ஞமூர்த்தியை நம
ஓம் அக்ஷராக்ருத்யை நம
ஓம் ப்ரஹ்மமூர்த்யை நம
ஓம் சகஸ்ரபரமாம்பிகாயை நம
ஓம் விஷ்ணுஹ்ருத்காயை நம
ஓம் ஹம்ஸ ரூபாயை நம
ஓம் நிரஞ்ஜநாயை நம
ஓம் பஞ்சவர்ணமுக்யை நம
ஓம் மகாமாயாயை நம
ஓம் மகாமந்த்ரபலப்ரதாயை நம
ஓம் சர்வதந்த ரூபாயை நம
ஓம் மாயாபீஜநிவாசின்யை நம
ஓம் மாந்யாயை நம
ஓம் விசித்ராய்யை நம
ஓம் ஜகத்திதாயை நம
ஓம் சதுராயை நம
ஓம் சதமத்யாயை நம
ஓம் தசாவராயை நம
ஓம் சிருக்குஹஸ்தாயை நம
ஓம் சிருவஹஸ்தாயை நம
ஓம் கெண்டிஹஸ்தாயை நம
ஓம் அக்ஷ்ரமாலாஹஸ்தாயை நம
ஓம் வேத மாத்ரே நம
ஓம் பாலிகாயை நம
ஓம் வ்ருத்தாயை நம
ஓம் சர்வகாரணாயை நம
ஓம் சந்துஷ்டாயை நம
ஓம் சர்வேஷ்வர்யை நம
ஓம் ஆதி சக்த்யை நம
ஓம் பரமார்த்தப்ரதாயை நம
ஓம் பக்த பீஷ்டப்ரதாயை நம
ஓம் ரத்ணாபூஷணதேவியை நம
ஓம் நாத ரூபாயை நம
ஓம் ஹம்ச ரூடாயை நம
ஓம் தத்வ ஸ்வரூபாயை நம
ஓம் சச்சிதானந்த ரூபாயை நம
ஓம் சத்ய மூர்த்தியை நம
ஓம் சர்வா பீஷ்டப்பர்தாயை நம
ஓம் ஓங்கா ரூபாயை நம
ஓம் வேதஸ்வரூபாயை நம
ஓம் சாவித்ரியை நம
ஸ்ரீ பிராம்மி அஷ்ட சத ஸ்தோத்திரம் ஸம்பூர்ணா.
2. மாகேஸ்வரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
மகேசனின் அம்சமானவள் மாகேசுவரி; ஒரு முகமும் - மூன்று கண்களும் நான்கு கரங்களும் உடையவள். முன் இரு கரங்களை அபய - வரதமாகவும்; பின் இரு கரங்களில் மானையும் மழுவையும் ஏந்தி இருப்பவள். செவ்வண்ணத்தள். இடப வாகனத்தில் மேல் அமர்ந்திருப்பவள், அதையே கொடியாகவும் கொண்டவள்.
தன்னை வழிபடுவோருக்குப் போகத்தைக் கொடுப்பவள். இவள் சர்வமங்களா எனப்பெயருடையவள். ஆகையால். மக்களுக்கு சர்வ மங்களங்களையும் அருள்பவள். தர்மத்தின் திருவுருவாய் அமைந்தவள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் தருபவள். தன்னை உபாசிப்பவர்களுக்கு பொன்னும் - மெய்ப்பொருளும் - போகமும் அருள்பவள்!
மாகேஸ்வரி ரௌத்ரி பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம் :
ஓம் - ஹ்ரீம் -மாகேஸ்வரி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - மம் - மாகேஸ்வரி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஹாம் - மம் - மாகேஸ்வரியே - நம:
2. காயத்ரி :
ஓம் - வ்ருஷத்வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்
3. த்யான ஸ்லோகம் :
ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச,
மஹாதேவீம் சதுர்புஜாம்;
ஜடாகுட ஸம்யுத்தாம்,
சுக்ல வர்ணாம், சூசோபிதாம்;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்;
வ்ருஷ வாஹ ஸமாரூடாம்
வந்தே மகேஸ்வரீம் சுபாம்.
4. மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - ஹாம் -மம்- மாகேஸ்வர்யை - நம:
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.
6. பூஜை :
பீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி சமர்ப்பியாமி சொல்லி தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் சமர்ப்பிக்க.
7. துதி :
த்ரிசூல சந்த்ரா ஹிதரே
மஹா வ்ருஷப வாஹினி
மகேஸ்வரி ஸ்வரூபேண
தேவி நமோஸ்துதே
ரௌத்ரி மாகேஸ்வரி - அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் சம்பவேயை நம
ஓம் வாமதேவாயை நம
ஓம் பினாகினேயை நம
ஓம் வ்ருபாசாயை நம
ஓம் சங்கராயை நம
ஓம் கட்வாங்கினேயை நம
ஓம் ஸ்ரீகண்டாயை நம
ஓம் பக்தவச்சலாயை நம
ஓம் பவாயை நம
ஓம் சர்வாயை நம
ஓம் த்ரிநேத்ராயை நம
ஓம் த்ரிலோகேசாயை நம
ஓம் உக்ராயை நம
ஓம் கபாலிகாயை நம
ஓம் காமாஹியாயை நம
ஓம் கங்காயை நம
ஓம் க்ருபாநிதியை நம
ஓம் பீமானாய நம
ஓம் வ்ருஷபாரூபாயை நம
ஓம் யக்ஞமயாயை நம
ஓம் சோமாயை நம
ஓம் பஞ்சவக்த்ராயை நம
ஓம் சதாசிவாயை நம
ஓம் விச்வேச்வராயை நம
ஓம் பைரவியை நம
ஓம் வீரபத்திரயை நம
ஓம் கணநாதாயை நம
ஓம் புஜங்கபூசணாயை நம
ஓம் கிரிப்ரியாயை நம
ஓம் பகவதியை நம
ஓம் ம்ருத்யுஞ்சாயை நம
ஓம் ஜகத்குருயாயை நம
ஓம் ருத்ராயை நம
ஓம் பூதபீதேயை நம
ஓம் திகம்பராயை நம
ஓம் சாத்விகாயை நம
ஓம் தேவாயை நம
ஓம் பரமேஸ்வர்யை நம
ஓம் வித்யா ரூபியை நம
ஓம் ரக்ஷ்ன மாலின்னை நம
ஓம் சர்வ ஞானியை நம
ஓம் விருட்சபரூபாயை நம
ஓம் விருட்சப துவசாயை நம
ஓம் அக்ஷ்மாலாதாரியை நம
ஓம் முனிசேவாயை நம
ஓம் காமமாமின்யை நம
ஓம் சத்ய ரூபாயை நம
ஓம் கால நேத்ராயை நம
ஓம் காலஹந்த்ரேயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் கல்யாண மூர்த்தயை நம
ஓம் காலகாயை நம
ஓம் க்ருதக்ஞாயை நம
ஓம் கங்களாயை நம
ஓம் கமனீயாயை நம
ஓம் கபர்தினேயை நம
ஓம் சிவகாமியை நம
ஓம் வரதாயை நம
ஓம் வ்யோமகேசாயை நம
ஓம் விரூபாயை நம
ஓம் வித்யாநிதயை நம
ஓம் விராடிசாயை நம
ஓம் விசாலாட்யை நம
ஓம் நடனாயை நம
ஓம் அக்னி ரூபாயை நம
ஓம் விஷ்ணுரூபின்யை நம
ஓம் சுந்தராயை நமஓம் சூலஹஸ்தாயை நம
ஓம் அபயவரதகராயை நம
ஓம் பாசமுத்ராயை நம
ஓம் பரசுசூடாயை நம
ஓம் ருத்த ரூபாயை நம
ஓம் நிராவாராயை நம
ஓம் விமலாயை நம
ஓம் சர்வாத்மாயை நம
ஓம் வீராயை நம
ஓம் ஆனந்தாயை நம
ஓம் பீமாயை நம
ஓம் விஷ்ணு சகோத்ரியை நம
ஓம் சர்வாதாயை நம
ஓம் சர்வசங்கராயை நம
ஓம் ஹராயை நம
ஓம் நீலகண்டப்ரிதாயை நம
ஓம் ஆனந்தாயை நம
ஓம் பாபசம்கர்த்ராயை நம
ஓம் யந்த்ரவாகாயை நம
ஓம் தேவதேவாயை நம
ஓம் சிவப்ரியாயை நம
ஓம் சப்தகன்னிரூபாயை நம
ஓம் கருணாகராயை நம
ஓம் வேத சாராயை நம
ஓம் வேத ரூபின்யை நம
ஓம் சூர்யசந்த்ரநேத்ராயை நம
ஓம் சாந்த ரூபாயை நம
ஓம் திவ்ய காந்தாயை நம
ஓம் அக்ராயை நம
ஓம் ஏகாயை நம
ஓம் சூச்மாயை நம
ஓம் பரமேசாயை நம
ஓம் ஞானதாயை நம
ஓம் சூபஸ்வினேயை நம
ஓம் வீணாதாரிண்யை நம
ஓம் சியாமளாயை நம
ஓம் பரசு அஸ்திராயை நம
ஓம் கயலக்ஷ்காயை நம
ஓம் ரௌத்ரியை நம
ஸ்ரீ மாகேஸ்வரி அஷ்ட சத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
3. கௌமாரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் - ஸ்கந்த மாதா - குமாரரூபிணி - முருகனின் அம்சமாக அவதரித்தவள். ஒரு முகமும் இரண்டு கண்களும்- நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரண்டு கரங்களை வரத அபயமாகவும்; மேல் இரண்டு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தாங்கி இருப்பாள். நீல நிற மேனியினை உடையவள். யௌவன வயதினள். மயில் வாகனத்தின் மீது அமர்ந்திருப்பவள். கோழிக்கொடி பிடித்திருப்பவள். இரதியினை ஒத்த அழகு மேனியள். தேவர்களின் சேனாதிபதியாகிய சுப்ரமணியரின் வெற்றிக்குக் காரணமாய் இருந்தவள் இவளே. இவளை வணங்கினாள் நல்ல மகவு கிட்டும். உபாசித்தால் - வீரத்தினை அடையலாம். கார்த்திகைப் பெண்கள் ஆறுவரும இவள் ஏவலுக்குப் காத்திருப்பர். எனவே, இவளைத் தொழுது பெரும் பதவியடையலாம்!
கௌமாரி ஸ்கந்தரி - பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம் :
ஓம் - ஹ்ரீம் - கௌமாரி - ஆசனாயயாய - நம :
ஓம் - ஹ்ரீம் - கம் - கௌமாரிமூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமாரியே - நம:
2. காயத்ரி :
ஓம் - சிகித்வஜாயை வித்மஹே;
சக்தி ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்
3. த்யான ஸ்லோகம் :
சதுர்புஜா த்ரிநேத்ரா
சரக்த வஸ்த்ர சமந்விதா;
ஸர்வாபரண ஸம்யுக்தா
வாசிகா பக்த காகுடீ;
ஸத்தி குக்குட ஹஸ்தாச
வரதாபய பாணிநீ;
மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்
உதும்பர த்ருமாஸ்ரிதா
கௌமாரீ சேதி விக்யர்தா,
நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.
4. மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமார்யை - நம:
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.
பூஜை :
பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் சமர்ப்பிக்க.
7. துதி :
மயூர குக்குட வ்ருதே
பஹாசக்தி தரேனகே
கௌமாரி ரூபஸம்ஸ்தானே
அம்பிகே நமோஸ்துதே.
கௌமாரி ஸ்கந்தரி - அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் கௌமாரியை நம
ஓம் ஸ்கந்தாயை நம
ஓம் குஹாயை நம
ஓம் சண்முகாயை நம
ஓம் க்ருத்திகாயை நம
ஓம் சிகிவாகனாயை நம
ஓம் குமாராயை நம
ஓம் சேனாயை நம
ஓம் விசாகாயை நம
ஓம் கமலாசனாயை நம
ஓம் ஏகவர்ணாயை நம
ஓம் அக்னிகர்பாயை நம
ஓம் சந்த்ரவர்ணாயை நம
ஓம் கைவல்யாயை நம
ஓம் ஆனந்தாயை நம
ஓம் சுப்ரமண்யை நம
ஓம் தேவ சேனாயை நம
ஓம் சமாயை நம
ஓம் சங்ககண்டாயை நம
ஓம் ரக்ஷிகர்த்தாயை நம
ஓம் ரதி அம்சாயை நம
ஓம் ரம்ய முகாயை நம
ஓம் ரகு பூஜிதாயை நம
ஓம் வசூதாயை நம
ஓம் வடுரூபாயை நம
ஓம் வனஜாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் பத்ர மூர்த்யை நம
ஓம் பயாபகாயை நம
ஓம் பக்த நிதாயை நம
ஓம் வஸ்ரஹஸ்தாயை நம
ஓம் சூராயை நம
ஓம் விஜயாயை நம
ஓம் அநகாயை நம
ஓம் நிர்மலாயை நம
ஓம் நித்யாயை நம
ஓம் நிர்குணாயை நம
ஓம் நிர்விகராயை நம
ஓம் சத்ய வாசாயை நம
ஓம் சத்ய சந்தாயை நம
ஓம் கருணாலாயை நம
ஓம் திருலோகபதயை நம
ஓம் புஷ்டிகராயை நம
ஓம் சிரேஷ்டாயை நம
ஓம் சரண்யாயை நம
ஓம் சர்க்காயை நம
ஓம் தர்மரதாயை நம
ஓம் தக்ஷõயை நம
ஓம் பரப்ரமண்யை நம
ஓம் சௌக்கியநிலாயை நம
ஓம் பரஞ்சோதியை நம
ஓம் கிருபாநிதயை நம
ஓம் அப்ரமேயாயை நம
ஓம் ஜிதேந்திர்யாயை நம
ஓம் அக்னிகர்பாயை நம
ஓம் தேவாயை நம
ஓம் சடாநநாயை நம
ஓம் குக சகாயை நம
ஓம் லோக ரக்ஷகாயை நம
ஓம் சிந்தாயை நம
ஓம் சித்ரகாரகாயை நம
ஓம் கட்கிதராயை நம
ஓம் தநுர்தராயை நம
ஓம் ஞானகம்யாயை நம
ஓம் சர்வபூததயாயை நம
ஓம் விச்வப்பிரியாயை நம
ஓம் விச்வபுசேயை நம
ஓம் பக்தவத்சலாயை நம
ஓம் கல்ப்ப வ்ருசாயை நம
ஓம் துக்கக்னாயை நம
ஓம் வரப்பிரியாயை நம
ஓம் ஞான ரூபாயை நம
ஓம் ஞான தாத்ரே நம
ஓம் வேத ஆத்மநேயை நம
ஓம் மகா ரூபாயை நம
ஓம் பகூதராயை நம
ஓம் நிர்விகல்பாயை நம
ஓம் நிர்வ பாசாயை நம
ஓம் சிந்தையாயை நம
ஓம் சிந்மயாயை நம
ஓம் ஜீவ சாக்ஷினேயை நம
ஓம் கர்மசாக்ஷினேயை நம
ஓம் அத்வயாயை நம
ஓம் அஜய்யாயை நம
ஓம் மிதா சநாயை நம
ஓம் சுலோசனாயை நம
ஓம் அவ்யக்தாயை நம
ஓம் முக்தி ரூபாயை நம
ஓம் பராத்பரதாயை நம
ஓம் அநந்யாயை நம
ஓம் அதநவேயை நம
ஓம் அச்சேத்யாயை நம
ஓம் அசோத்யாயை நம
ஓம் நாரதமுநிதோத்ராயை நம
ஓம் விகட்டநாயை நம
ஓம் சாம்ராஜ்யபதாயை நம
ஓம் யுகாந்தகாயை நம
ஓம் அபிமராயை நம
ஓம் ஆசவேயை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் காருண்யநித்யை நம
ஓம் பீஜாயை நம
ஓம் சாச்வதாயை நம
ஓம் தேவதேயை நம
ஓம் பாரிசாதாயை நம
ஓம் யோகாயை நம
ஓம் சர்வாபரணபூசிதாயை நம
ஓம் ஸ்கந்தர்யை நம
ஸ்ரீ கௌமாரி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
4. வைஷ்ணவி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் விஷ்ணு அம்சி ; மகாலக்ஷிமியின் அவதாரம். ஒரு முகமும் - இரண்டு கண்களும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு வல - இடக் கரங்களை அபய - வரதமாக வைத்திருப்பாள். மேல் வலக்கரத்தில் சக்கரமும் - இடக்கரத்தில் சங்கும் கொண்டவள். கிருஷ்ணவதாரத்தில் - கோபி கைகளை மோகிக்க அவர் எடுத்த ரூபம் இவளுடையதே என்பர்.
விஷ்ணு ஸ்திக்கு அதிபதி, எனவே, இவள் காப்புக் கடவுள் ஆவாள். இள வயதினைத் தாண்டி - யௌவன வயதை அடைந்த பெண்கள் இவளை வழிபட்டாள், யௌவனமும் - திடகாத்திரமும் பெறுவர். இவளை உபாசித்தால் நம்மைக் காத்து - நம் மனோரதங்களைப் பூர்த்தி செய்பவள் இவள்!
வைஸ்ணவி நாராயணி - பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம் :
ஓம் - ஹ்ரீம் - வைஷ்ணவி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வைஸ்ணவி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவியை - நம:
2. காயத்ரி :
ஓம் - தார்க்ஷ்யத்வஜாயை வித்மஹே;
சக்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வைஷ்ணவி ப்ரசோதயாத்
3. த்யான ஸ்லோகம் :
ஸங்க சக்ர தராதேவீ
கிரீட மகுடாந்விதா;
ஸீஸ்தநா சாருவத
நாஸ்யாமாபா ச சுலோசநா;
பீதாம்பரதரா தேவீ
கிரீட மகுடாந்விதா;
ராஜவ்ருட்சம் ஸமாச்ரித்ய
கருட த்வஜ வாஹி நீ;
வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்,
விஷ்ணு பூஷண பூஷிதாம்.
4. மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவ்யை - நம :
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.
6. பூஜை :
பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க.
7. துதி :
சங்க சக்ர கதா சார்ங்க
க்ருஹீத பரமாயுதே
ப்ரஸீத வைஷ்ணவீ ரூபே
நாராயணீ நமோஸ்துதே.
வைஷ்ணவி நாராயணி - அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் வைஷ்ணவியை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் அரவிந்தாயை நம
ஓம் ஆதித்தாயை நம
ஓம் ஆனந்தாயை நம
ஓம் குமுதாயை நம
ஓம் கிருஷ்ணாயை நம
ஓம் கருடத்துஜாயை நம
ஓம் கோவிந்தாயை நம
ஓம் சதுர்ப்புஜாயை நம
ஓம் ஜனார்த்தனாயை நம
ஓம் தாராயை நம
ஓம் தமனாயை நம
ஓம் தாமோதராயை நம
ஓம் தீப்பமூர்த்யை நம
ஓம் நரசிம்யாயை நம
ஓம் பத்மநாயை நம
ஓம் கத்மின்யை நம
ஓம் புரந்தராயை நம
ஓம் புண்டரீவாøக்ஷ நம
ஓம் பக்தவத்சலாயை நம
ஓம் மதுசூதனாயை நம
ஓம் மகாமாயாயை நம
ஓம் மாதவாயை நம
ஓம் முகுந்தாயை நம
ஓம் யக்ஞபதயேயை நம
ஓம் ராமாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் வாமனாயை நம
ஓம் விக்ரமாயை நம
ஓம் விஷ்வக்சேனாயை நம
ஓம் வேதாயை நம
ஓம் வைகுண்டாயை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் சிவாயை நம
ஓம் சூபர்காயை நம
ஓம் சர்வேஸ்வராயை நம
ஓம் ஹிரண்யகர்பாயை நம
ஓம் வாசுதேவாயை நம
ஓம் புண்யாயை நம
ஓம் கௌஸ்துபாயை நம
ஓம் மதுராக்ருதயே நம
ஓம் அனந்தாயை நம
ஓம் வனமாலினேயை நம
ஓம் பீதவஸ்ராயை நம
ஓம் பாரிஜாதப்ரியாயை நம
ஓம் கோபாலாயை நம
ஓம் காமஜனகாயை நம
ஓம் த்வாரகர்நாகாயை நம
ஓம் ப்ருந்தாவனாயை நம
ஓம் நரநாராயணாயை நம
ஓம் அஷ்டலட்மியே நம
ஓம் பரமபுருசயை நம
ஓம் கம்சவதாயைசத்ய வாசேயை நம
ஓம் சத்யசங்கல்பாயை நம
ஓம் பரப்ப்ரமன்யை நம
ஓம் தீர்த்தபதாயை நம
ஓம் தயாநிதியை நம
ஓம் மோட்சலக்ஷிமியை நம
ஓம் பயநாசனாயை நம
ஓம் வராயை நம
ஓம் ரகுபுங்கவாயை நம
ஓம் தேஜஸ்வினேயை நம
ஓம் ரூபவதேயை நம
ஓம் கமலகாந்தாயை நம
ஓம் ராஜராஜவரப்ரதாயை நம
ஓம் நிதர்யவைபவாயை நம
ஓம் ரம்ய விக்ரகாயை நம
ஓம் லோகநாகியை நம
ஓம் யக்ஷகர்தர்வவரதாயை நம
ஓம் வரேண்யாயை நம
ஓம் பூர்ணபோதாயை நம
ஓம் சார புஷ்கரிணீதீராயை நம
ஓம் யஜ்ஞ வராகாயை நம
ஓம் ராசீவ லோசனாயை நம
ஓம் மதுசூதனாயை நம
ஓம் அச்யுதாயை நம
ஓம் தேவ பூஜிதாயை நம
ஓம் சக்ரத்ராயை நம
ஓம் சங்குஹஸ்தராயை நம
ஓம் நிர்விகல்பாயை நம
ஓம் நிராதங்காயை நம
ஓம் நிரஞ்ஜனாயை நம
ஓம் சார்ங்கபாணாயை நம
ஓம் ஊருஹஸ்தாயை நம
ஓம் தீன பந்தாயை நம
ஓம் பக்தவத்சலாயை நம
ஓம் கரந்தமகுடாயை நம
ஓம் தேவகீயாயை நம
ஓம் அயக்ரீவாயை நம
ஓம் ஜனார்த்தனாயை நம
ஓம் வனமாலின்யை நம
ஓம் அஸ்வரூடாயை நம
ஓம் கஸ்தூரி திலகாயை நம
ஓம் சேசாத்ரி காயை நம
ஓம் பராயை நம
ஓம் அனந்தசிரயாயை நம
ஓம் வாமதேவாயை நம
ஓம் பீஷ்டப்பரதாயியை நம
ஓம் கூர்மமூர்த்தியை நம
ஓம் மத்ய ரூபாயை நம
ஓம் ச்வேதகோலபராயை நம
ஓம் சௌம்ய ரூபாயை நம
ஓம் சேசாயை நம
ஓம் சர்வகாமப்ரதாயை நம
ஓம் சத்வ மூர்த்யை நம
ஓம் கருணாநிதியை நம
ஓம் நாராயணாயை நம
ஸ்ரீ நாராயணி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
5. வாராஹி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் அம்சமாக அவதரித்தவள் - வாராஹி. வராக (பன்றி) முகமும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களை அபய - வரதமாகவும்; மேல் வலக்கரத்தில் தண்டமும் - இடக்கரத்தில் கலப்பையும் கொண்டவள். கருப்பு நிறமுடைய ஆடையை உடுத்திக் கொண்டிருப்பவள். கிரீட மகுடம் தரித்து - சிம்ம வாஹனத்தில் அமர்ந்திருப்பவள்.
இவள் அசுரன், <உலகைத் தூக்கிக் கொண்டு கடலுள் ஒழிந்தபோது, வராக அவதார மெடுத்து மீட்டுக் கொண்டு வந்தவள். எனவே, இவளை வழிபட்டால், எதிரிகளை அழித்து வெற்றி அடையலாம். பெண்கள் உபாசித்தால் கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதற்குத் தீங்கு நேரும்போது, எதிர்த்து நின்று காத்தருள்வாள்!
வாராகி விஷ்ணு அம்சி - பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம் :
ஓம் - ஹ்ரீம் - வாராகி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வாராகி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம:
2. காயத்ரி :
ஓம் - மஹிசத்வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வராஹி ப்ரசோதயாத்
3. த்யான ஸ்லோகம் :
ஏக வக்த்ராம் த்விநேத்ராம்ச
சதுர்புஜ சமன் விதாம்;
க்ருஷ்ணாம்பர தராம், தேவிம்
வராஹ சக்ர ஸம்யுதாம்;
ஹசலமுஸல ஹஸ்தாம்
தாம் வரா பயகராம்புஜாம்;
ஸிம்ஹ வாஹ ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்;
ஸர் வாலங்கார ஸம்பன்னாம்,
வாராஹிம் பூஜயேத்புத
4. மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம :
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.
6. பூஜை :
பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க.
7. துதி :
க்ரூஹீதோக்ர மகாசக்ரே
தம்ஸ்ட்ரோத் த்ருத வசுந்தரே
வராஹ ரூபிணி
நாராயணி நமோஸ்துதே.
வாராஹி விஷ்ணு அம்சி - அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் வாராஹ்யை நம
ஓம் வாமந்யை நம
ஓம் வாமாயை நம
ஓம் வாசவ்யை நம
ஓம் பாலாயை நம
ஓம் பாமாயை நம
ஓம் பாசாயை நம
ஓம் பயாநகாயை நம
ஓம் தன்யாயை நம
ஓம் தராயை நம
ஓம் தபஸ்விந்யை நம
ஓம் தமாயை நம
ஓம் கர்வாயை நம
ஓம் கபாலின்யை நம
ஓம் கதாதாரிண்யை நம
ஓம் கலாரூபிண்யை நம
ஓம் மதுபாயை நம
ஓம் மங்கலாயை நம
ஓம் மருதாந்யை நம
ஓம் மகீலாயை நம
ஓம் ராதாயை நம
ஓம் ராகாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ரஜன்யை நம
ஓம் ரூஜாயை நம
ஓம் ரூபவத்யை நம
ஓம் ருத்ராண்யை நம
ஓம் ரூபலாவண்யை நம
ஓம் துர்வாசாயை நம
ஓம் துர்க்ககாயை நம
ஓம் துர்ப்ரகம்யயை நம
ஓம் துர்க்காயை நம
ஓம் குப்ஜாயை நம
ஓம் குணபாசநாயை நம
ஓம் குர்விண்யை நம
ஓம் குருதர்யை நம
ஓம் கோநாயை நம
ஓம் கோரகசாயை நம
ஓம் கோஷ்ட்யை நம
ஓம் கோசிவாயை நம
ஓம் பேருண்டாயை நம
ஓம் நிஷ்களங்காயை நம
ஓம் நிஷ்பரிக்ரகாயை நம
ஓம் நிஷ்கலாயை நம
ஓம் நீலலோகிதாயை நம
ஓம் கிருஷ்ணமூர்த்தாயை நம
ஓம் கிருஷ்ணாயை நம
ஓம் கிருஷ்ணவல்லபாயை நம
ஓம் கிருஷ்ணாம்பராயை நம
ஓம் சதுர்வேதரூபிண்யை நம
ஓம் சண்டப்ரஹரணாயை நம
ஓம் சனத்யாயை நம
ஓம் சந்தோபத்ந்யை நம
ஓம் ப்ராமிண்யை நம
ஓம் ப்ராமாயை நம
ஓம் ப்ரமண்யை நம
ஓம் ப்ரமர்யை நம
ஓம் அஜராயை நம
ஓம் அஹங்காராயை நம
ஓம் அக்நிஷ்டோமாயை நம
ஓம் அஷ்வமேதாயை நம
ஓம் விதாயாயை நம
ஓம் விபாவசேயை நம
ஓம் விநகாயை நம
ஓம் விஷ்வரூபிண்யை நம
ஓம் சபா ரூபிண்யை நம
ஓம் பக்ஷ ரூபிண்யை நம
ஓம் அகோர ரூபிண்யை நம
ஓம் த்ருடி ரூபிண்யை நம
ஓம் ரமண்யை நம
ஓம் ரங்கன்யை நம
ஓம் ரஜ்ஜன்யை நம
ஓம் ரண பண்டிதாயை நம
ஓம் வ்ருசப்ரியாயை நம
ஓம் வ்ருசாவர்தாயை நம
ஓம் வ்ருசபர்வாயை நம
ஓம் வ்ருசாக்ருத்யை நம
ஓம் நிர்குணாயை நம
ஓம் நிர்மலாயை நம
ஓம் நித்யாயை நம
ஓம் பராயை நம
ஓம் பாராயை நம
ஓம் பரமாத்னேயை நம
ஓம் பரந்தபாயை நம
ஓம் தோஷநாசின்யை நம
ஓம் வியாதிநாசின்யை நம
ஓம் விக்ரநாசின்யை நம
ஓம் பாபநாசின்யை நம
ஓம் மோகபகாயை நம
ஓம் மதாபகாயை நம
ஓம் மலா பகாயை நம
ஓம் மூர்ச்சா பகாயை  நம
ஓம் மகா கர்ப்பாயை நம
ஓம் விஷ்வ கர்ப்பாயை நம
ஓம் மாலிண்யை நம
ஓம் த்யான பராயை நம
ஓம் ரேவாயை நம
ஓம் உதும்பராயை நம
ஓம் தீர்த்தாயை நம
ஓம் பாதாலகாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் வசூதாயை நம
ஓம் வைதேஹ்யை நம
ஓம் நிராமயாயை நம
ஓம் தயாலயாயை நம
ஓம் ஆநந்தரூபாயை நம
ஓம் விஷ்ணுவல்லபாயை நம
ஓம் விஷ்ணுஅம்சியை நம
ஸ்ரீ வாராகி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
6. இந்திராணி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் இந்திரனின் சக்தி மகேந்திரி என்றும் - ஐந்திரி என்றும் அழைக்கப்படுவாள். ஒரு முகமும், நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களையும், அபயவரதமாகக் கொண்டவள். மேல் வலக்கையில் - சக்தியையும் - இடக்கையில் அம்பையும் ஆயுதமாகக் கொண்டு காட்சி கொடுப்பவள். ஆயிரம் கண்களை அகநோக்கில் உடையவள். இரத்தின கிரீடம் அணிந்திருப்பவள் யானை வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள் பொன்னிறமேனியள். இந்திரன் தேவலோக அரசன் - எனவே இவள் அரசி. அரச சம்பத்தெல்லாம் இந்த சக்தியின் அனுக்கிரகத்தால் ஏற்படுகிறது என்று லகுஸ்துதி சுலோகம் கூறும் இவளை வணங்கினால் சொத்து சுகம் சேரும் உபாசித்தால் - பதவிகளை அடையலாம்!
இந்திராணி ஐந்தரி பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம் :
ஓம் - ஹ்ரீம் - இந்திராணி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - இம் - இந்திராணி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - தம் - இம் - இந்திராணியே - நம:
2. காயத்ரி :
ஓம் - கஜத்வஜாயை வித்மஹே;
வஜ்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்
3. த்யான ஸ்லோகம் :
ஏக வக்த்ராம் த்விநேத் ராம்;
ச சதுர்புஜ ஸமன் விதாம்;
ஸ ரத்ன மகுடோபேதாம்,
ஹேமவர்ண ஸ்வரூபிணீம்;
வராபயகராம், போஜாம்,
வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்;
மாஹேந்த்ரீம் மாதரம்,
வந்தே கஜவாஹண ஸம்ஸ்த்திதாம்.
4. மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - இம் - வம் -இந்திராணியை - நம :
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.
6. பூஜை :
பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க.
7. துதி :
கிரீடினி மஹா வஜ்ரே
ஸஹஸ்ர நயனோ ஜ்வலே
வ்ருத்ர ப்ராணஹரே சைந்த்ரி
மகேந்த்ரி நமோஸ்துதே.
இந்திராணி ஐந்த்ரி - அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் இந்த்ராயை நம
ஓம் தேவேந்திராயை நம
ஓம் மகேந்த்ரியாயை நம
ஓம் ஐராவதரூடாயை நம
ஓம் சகஸ்ரநேத்ராயை நம
ஓம் சதமன்யவேயை நம
ஓம் புரந்தராயை நம
ஓம் த்ரிலோகாதிபதாயை நம
ஓம் ஸ்ரீமதே நம
ஓம் சசிநாமாயை நம
ஓம் வாஸ்தோபதாயை நம
ஓம் திக்பாலநாயகியை நம
ஓம் கர்மதேனு சமன்விதாயை நம
ஓம் வாச வாயை நம
ஓம் சத்ய வாதிநேயை நம
ஓம் சூப்ரீ தாயை நம
ஓம் வஜ்ரதேகாயை நம
ஓம் வஜ்ரஹஸ்தாயை நம
ஓம் பஷணாயை நம
ஓம் அநகாயை நம
ஓம் புலோமஜிதேயை நம
ஓம் பலிதர்ப்பக்நாயை நம
ஓம் யக்ஷ சேவ்யாயை நம
ஓம் வேதபர்வநாயை நம
ஓம் இந்த்ரப்ரியாயை நம
ஓம் வாலி ஜநகாயை நம
ஓம் புண்யாத்மநேயை நம
ஓம் விஷ்ணு பக்தாயை நம
ஓம் ருத்ர பூஜிதாயை நம
ஓம் ராஜேந்திராயை நம
ஓம் கல்பத்தருமேசாயை நம
ஓம் நமுச்சயேயை நம
ஓம் யஞ்ஞப்ரீதாயை நம
ஓம் யஞ்ஞசோசநாயை நம
ஓம் மாந்தாயயை நம
ஓம் தாந்தாயயை நம
ஓம் ருது தாம்நேயை நம
ஓம் சத்யாத்மநேயை நம
ஓம் புருஷ சூக்தாயை நம
ஓம் புண்டரீகாஷாயை நம
ஓம் பீதாம் பராயை நம
ஓம் மகா பராயை நம
ஓம் ப்ரஹ்மவித்யாயை நம
ஓம் சர்வாபரணபூசிதாயை நம
ஓம் சுப ரூபாயை நம
ஓம் சந்த்ரவர்ணாயை நம
ஓம் களாதராயை நம
ஓம் இந்த்ரரூபிண்யை நம
ஓம் இந்த்ர சக்த்யை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் லோக மாத்ரேயை நம
ஓம் சுகாசனாயை நம
ஓம் காஞ்ச நாயை நம
ஓம் புஷ்பஹராயை நம
ஓம் பதிவ்ரதாயை நம
ஓம் ஹேமாவத்யை நம
ஓம் பஹாவர்ணாயை நம
ஓம் பங்கள காரிண்யை நம
ஓம் தயாரூபிண்யை நம
ஓம் பரா தேவ்யை நம
ஓம் சித்திதாயை நம
ஓம் திவ்யாயை நம
ஓம் சத்யப்ரபாயை நம
ஓம் சத்யோசாதாயை நம
ஓம் யோகின்யை நம
ஓம் பாபநாசின்யை நம
ஓம் இந்த்ர லோகாயை நம
ஓம் சாம்ராஜ்யாயை நம
ஓம் வேத சாராயை நம
ஓம் அம்ரகாணாம்யை நம
ஓம் அணிமாயை நம
ஓம் சுப ரூபாயை நம
ஓம் புராதன்யை நம
ஓம் ஹேமபூசணாயை நம
ஓம் சர்வ நாயகியை நம
ஓம் கப காயை நம
ஓம் உச்சைஸ்வர ரூடாயை நம
ஓம் சிந்தாமணி சமாயதாயை நம
ஓம் அஹிப்ரியாயை நம
ஓம் தர்மஸ்ரீலாயை நம
ஓம் சர்வ நாயகாயை நம
ஓம் நகாராயை நம
ஓம் காஸ்யபேயாயை நம
ஓம் ஹராயை நம
ஓம் ஜயந்த்ஜநகாயை நம
ஓம் உபேந்தபூர்வசாயை நம
ஓம் மகவதேயை நம
ஓம் பர்ஜன்யாயை நம
ஓம் சூதா ஹாராயை நம
ஓம் திவ்ய ரத்ன கிரீடாயை நம
ஓம் ஸ்ரீயவர்த்தநாயை நம
ஓம் ஹரிஹராயை நம
ஓம் சண்டவிக்ரமாயை நம
ஓம் வேதாங்காயை நம
ஓம் பாகசாசநாயை நம
ஓம் அதிதிநந்தநாயை நம
ஓம் ஹவிர்போக்த்ரேயை நம
ஓம் சகல பக்ஷப்ரபேதாயை நம
ஓம் நிர்மலா சயாயை நம
ஓம் ஆகண்டலாயை நம
ஓம் மருத்வதேயை நம
ஓம் மகா மாயினேயை நம
ஓம் பூர்ண சந்த்ராயை நம
ஓம் லோகாத்யக்ஷõயை நம
ஓம் சூராத்யக்ஷõயை நம
ஓம் குணத்ரயாயை நம
ஓம் ப்ராண சக்த்யை நம
ஓம் ஐந்த்ரியாயை நம
ஸ்ரீ இந்திராணி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
7. சாமுண்டி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் ருத்ர அம்சம்; சண்ட முண்டர்களைச் சாய்ப்பதற்காக எடுத்த அவதாரம். ஒரு சிரமும், நான்கு கரமும், மூன்று நேத்திரங்களும் உடையவள். கோரைப் பற்களும், கருப்பான மேனியும் படைத்தவள். புலித்தோலை உடுத்தி - முண்ட மாலை அணிந்திருப்பாள். கீழ் வலக்கரத்தில் முத்தலைச் சூலமும், இடக்கையில் முண்டமும் கொண்டிருப்பாள். மேல் வலக்கரத்தில் கத்தியும் - இடக்கரத்தில் கபாலமும் ஏந்தியிருப்பாள். சவத்தின் மேல் அமர்ந்து, பயங்கர முகத்துடன் காட்சி நல்குவாள். இவள் வெற்றித் தேவதை, கோப ரூபிணி. எதிரிகளை வெற்றி கொள்ள எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவளை வழிபட வேண்டும். இவளை உபாசித்தால் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கட்டுப்பட்டு நடப்பர்!
சாமுண்டி பைரவி பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம் :
ஓம் - ஹ்ரீம் - சாமுண்டி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - சம் - சாமுண்டி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் - சாமுண்டியை - நம:
2. காயத்ரி :
ஓம் - பிசாச த்வஜாயை வித்மஹே;
சூல ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, காளீ ப்ரசோத யாத்
3. த்யான ஸ்லோகம் :
சதுர்புஜா த்ரிநேத்ராசரக்தவர்ண ஊர்த்வகேசிகா;
கபால சூல ஹஸ்தா;
ச வரதாபய பாணிநீ;
ஸிரோமாலா உபவீதா ச
பத்ம பீடோ பரிஸ்திதா;
வ்யாக்ர சர்மாம்பர தரா
வட வ்ருக்ஷ ஸமாச்ரிதா;
வாம பாத ஸ்திதா, ஸர்வா
ஸவ்ய பாத ப்ரலம்பிதா;
நவாமி சாமுண்டா தேவிம்
4. மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் -சாமுண்டியை - நம :
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.
6. பூஜை :
பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க.
7. துதி :
தம் ஷட் ராக ரால வதனே
சிரோமாலா விபூஷனே
சாமுண்டே முண்ட மதனே
அம்பிகே நமோஸ்துதே.
சாமுண்டி பைரவி - அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் சாமுண்டாயை நம
ஓம் மாங்கல்யாயை நம
ஓம் குலவர்த்திந்யை நம
ஓம் மேர சயங்கர்யை நம
ஓம் ப்ரஹ்ம சாரிண்யை நம
ஓம் பர்ணசந்த்ரநிதாயை நம
ஓம் அஷ்டபுஜாயை நம
ஓம் த்ரிதசபூஜிதாயை நம
ஓம் மகிசாசுநாசின்யை நம
ஓம் ஜயவிஜயாயை நம
ஓம் வரதசித்தியாயை நம
ஓம் காள்யவர்ணாயை நம
ஓம் மாம்சப்ரியாயை நம
ஓம் பாபபரிண்யை நம
ஓம் கீர்த்தியாயை நம
ஓம் பந்தநாசிந்யை நம
ஓம் மோகநாசிந்யை நம
ஓம் ம்ருத்யுநாசிந்யை நம
ஓம் பயநாசிந்யை நம
ஓம் ராஜ்யதாயை நம
ஓம் பவமோசந்யை நம
ஓம் ஆர்யாயை நம
ஓம் ஆத்யாயை நம
ஓம் த்ரிநேத்ராயை நம
ஓம் பிநாகதாரிண்யை நம
ஓம் சண்டகண்டாயை நம
ஓம் சித்தரூபாயை நம
ஓம் சர்வமக்த்ரம்யை நம
ஓம் அநந்தாயை நம
ஓம் சதாகத்யை நம
ஓம் அபர்ணாயை நம
ஓம் பாடலாவத்யை நம
ஓம் வந்துர்க்காயை நம
ஓம் மாதங்க்யை நம
ஓம் வராஹ்யை நம
ஓம் ப்ராஹ்ம்யை நம
ஓம் ஐந்தர்யை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் மகேச்வர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் இலக்ஷ்ம்யை நம
ஓம் புருஷாக்ருத்யை நம
ஓம் உதகர்சின்யை நம
ஓம் நித்யாயை நம
ஓம் புத்திதாயை நம
ஓம் நிசும்பசும்ப பகந்யை நம
ஓம் மகிசாசுரமர்திந்யை நம
ஓம் மதுகைடபஹர்ந்யை நம
ஓம் சர்வாசுர விநாசாயை நம
ஓம் ப்ரௌடாயை நம
ஓம் அப்ரௌடாயை நம
ஓம் பலப்ரதாயை நம
ஓம் மகோத்திர்யை நம
ஓம் அக்நிசுவலாயை நம
ஓம் ரௌத்ரமுக்யை நம
ஓம் முண்ட கண்டாயை நம
ஓம் பத்ர காள்யை நம
ஓம் சிவதூத்யை நம
ஓம் காத்யாயந்யை நம
ஓம் சாகம்பர்யை நம
ஓம் குண்டல்யை நம
ஓம் விச்வ ரூபிண்யை நம
ஓம் ஹ்ரீங்கார்யை நம
ஓம் அசலாயை நம
ஓம் சூஷ்மாயை நம
ஓம் சர்வவர்ணாயை நம
ஓம் மதூசித்யை நம
ஓம் ஸ்வாஹாயை நம
ஓம் த்ரிபுராந்தகாயை நம
ஓம் த்ரி சக்தியை நம
ஓம் திரைலோக்யவாசின்யை நம
ஓம் அத்ரி சூதாயை நம
ஓம் நிர்க் குணாயை நம
ஓம் காமிண்யை நம
ஓம் சர்வகர்மபலப்ரதாயை நம
ஓம் சர்வ தீர்த்தமயாயை நம
ஓம் புண்யாயை நம
ஓம் அயோகிசாயை நம
ஓம் ஆத்மரூபிண்யை நம
ஓம் சரண் அருளாயை நம
ஓம் சௌபாக்யதாயை நம
ஓம் ஆரோக்யதாயை நம
ஓம் பக்தவத்சலாயை நம
ஓம் கட்ககரத்தாயை நம
ஓம் திவ்யாம்பரதாயை நம
ஓம் நாராயண அம்சாயை நம
ஓம் பாத்ரஹஸ்தாயை நம
ஓம் குண்டல பூர்ணகாணாயை நம
ஓம் க்ருஷ்ணாயை நம
ஓம் பாச தாரிண்யை நம
ஓம் தநுர்தாரிண்யை நம
ஓம் சக்ர தாரிண்யை நம
ஓம் கண்டாதாரிண்யை நம
ஓம் கேடக பாணியேயை நம
ஓம் திரிசூலகரத்தாயை நம
ஓம் கோபரூபிண்யை நம
ஓம் ருத்ரதாண்டவாயை நம
ஓம் வாக்கிஸ்வரி அம்சியே நம
ஓம் வாகீஸ்வரியாயை நம
ஓம் ரௌத்ரி கோபாயை நம
ஓம் வைஷ்ணவி ரூபாயை நம
ஓம் ப்ரம்மசாஸ்ததாயை நம
ஓம் அபிராமியாயை நம
ஓம் ப்ரத்தியங்கராயை நம
ஓம் துர்க்காசாயாயை நம
ஓம் பைரவி அம்சாயை நம
ஓம் சண்டமுண்டசம் ஹாராயை நம
ஸ்ரீ சாமுண்டி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
8. வீரபத்திரை - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் வீரபத்திரரின் பத்தினி. காப்புக் கடவுளாய் விளங்குபவள். சப்த கன்னியருக்கு முன்பு, முதல் இருக்கையில் அமர்ந்திருப்பவள். ஒரு தலையும், நான்கு கைகளும், மூன்று கண்களும் உடையவள். முன் வலக்கரம் அபய முத்திரையிலும், இடக்கரத்தில் முத்தலைச் சூலமும் கொண்டிருப்பாள். பின் வலக்கையில் மழுவும், இடக்கையில் மானும் உள்ளவள். சுகாசனத்தில் அமர்ந்து கன்னியர் எழுவரையும் காப்பவள். இவளின் திருவுருவ அமைப்பில், மார்புப் பகுதியைக் கொண்டே வேற்றுமையினை அறிந்து கொள்ள வேண்டும். இவளை, தக்ஷிணாமூர்த்தி எனக் கருதுவோரும் உண்டு. இவளை வழிபட்டால் பயத்தினின்றும் விடுபடலாம். உபாசித்தால் நம்மைத் தீங்கினின்றும் காத்தருள்வாள்!
வீரபத்ரை பத்ரகாளி பூஜா
1. ஆசன - மூர்த்தி - மூலம் :
ஓம் - ஹ்ரீம் - வீரபத்ரை - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வீரபத்ரை மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஹ்ராம் - வம் - வீரபத்ரையை - நம:
2. காயத்ரி :
ஓம் - ஈசபூத்ராயை வித்மஹே
வீரபத்திராயை தீமஹி
தந்நோ, பத்ரஹ் ப்ரசோதயாத்.
3. த்யான ஸ்லோகம் :
கோக்ஷீராபம் ததாநம் டமருகம்,
அபயம் கட்ககேடம் கபாலம்;
ஹமஞ்ச தாநம், த்ரியை லஸிதம்,
வ்யக்ர சர்மாம், பராட்சயம்;
வேதாள ரூடமுக்ரம், கபிலசதஜடா
பத்த சீதாம்கி கட்கம்
த்யாயேது, போகீந்த்ர பூஷ்ய மநுஜ;
கணபதிம் சந்ததம் வீரபத்ரம்.
4. மூல மந்திரம் :
ஓங - வரீங - வரணூங - விங - வீரபஒரசலூய நம :
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.
6. பூஜை :
பீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப தீப நைவேத்திய தாம்பூலம் சமர்ப்பிக்க.
7. துதி :
சதுர்ப்புஜம் த்ரிநேத்ரம்ச
ஜடாமகுட மண்டிதம்;
ஸர்வாபரண ஸம்யுக்தாம்
ஸ்வேதவர்ணம் வ்ருஷத்வஜம்;
சூலம்ச அபய ஹஸ்தஞ்ச
தட்சிணேது கரத்வயம்;
கதாவரத ஹஸ்தம்ச
வாம பாஸ்வே கரத்வயம்;
வீரபத்ரை அம்ஸகீ
அம்பிகே நமோஸ்துதே.
வீரபத்திரை பத்ரகாளி அஷ்டசதஸ்தோத்ரம்
ஓம் வீரபத்திரையை நம
ஓம் பூதநாதாயை நம
ஓம் பைரவாயை நம
ஓம் சேத்ரீபாலாயை நம
ஓம் கங்காளாயை நம
ஓம் காஷ்டாயை நம
ஓம் த்ரிநேத்ராயை நம
ஓம் பகுநேத்ராயை நம
ஓம் பிங்களலோசனாயை நம
ஓம் சூலபாணியை நம
ஓம் கட்க பாணேயை நம
ஓம் தண்டஹஸ்தாயை நம
ஓம் தனதாயை நம
ஓம் நாகபாசாயை நம
ஓம் கபாலப்ருதேயை நம
ஓம் கலாநித்யை நம
ஓம் டிம் பாயை நம
ஓம் வடுகாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் திகம்பராயை நம
ஓம் சூராயை நம
ஓம் நிதீசாயை நம
ஓம் சப்ததாராயை நம
ஓம் துர்க்காயை நம
ஓம் அகோரவீரபத்ராயை நம
ஓம் அக்னி வீரபத்ராயை நம
ஓம் ருத்ர கோபமூர்த்தியை நம
ஓம் ஜ்வலநேத்ராயை நம
ஓம் ஜ்வல கேசாயை நம
ஓம் சசிசேகராயை நம
ஓம் ஜடாதாரிண்யை நம
ஓம் தக்ஷ்யக்ஞவிநாசாயை நம
ஓம் நீலகேசிகேயை நம
ஓம் கால பக்ஷõயை நம
ஓம் சரபாயை நம
ஓம் நூல்கண்டாயை நம
ஓம் பீம ரூபாயை நம
ஓம் நீல கண்டாயை நம
ஓம் புஜங்கபூஷணாயை நம
ஓம் மகாவஸ்யாயை நம
ஓம் மகா சமாயை நம
ஓம் மகா சத்யாயை நம
ஓம் ருத்ரரூபாயை நம
ஓம் வஜ்ரதம்ஷ்ராயை நம
ஓம் வக்ரதந்தாயை நம
ஓம் தரதாத்திரேயை நம
ஓம் பராக்ரமாயை நம
ஓம் வீராயை நம
ஓம் விஷகாராயை நம
ஓம் பஸ்மோதூளியை நம
ஓம் மகா பூதாயை நம
ஓம் உன்மத்தாயை நம
ஓம் மார்த்தாயை நம
ஓம் குங்குமபுஷ்பாணியை நம
ஓம் பைரவாராத்யாயை நம
ஓம் பூதபாவணாயை நம
ஓம் ப்ராக்ம்யை நம
ஓம் காமதேனவேயை நம
ஓம் மோகன்யை நம
ஓம் மாலதி மாலாயை நம
ஓம் த்ரிபுராயை நம
ஓம் தீர்த்தாயை நம
ஓம் ப்ரத்யங்கிராயை நம
ஓம் மகாமார்யை நம
ஓம் மகா க்ரோதாயை நம
ஓம் மகா மோகாயை நம
ஓம் கால ரூபாயை நம
ஓம் குமார்யை  நம
ஓம் குமுதின்யை நம
ஓம் கோராயை நம
ஓம் கோரஸ்வரூபிண்யை நம
ஓம் மோட்சதாயை நம
ஓம் தீர்க்கமுக்யை நம
ஓம் தீர்க்ககோணாயை நம
ஓம் தம பத்ந்யை நம
ஓம் தயா பராயை நம
ஓம் மனோ பாவாயை நம
ஓம் திரிபுரனபரவ்யை நம
ஓம் சோபாயை நம
ஓம் பத்ரகாளியை நம
ஓம் கராளியை நம
ஓம் கம்காளியை நம
ஓம் கல்யாண்யை நம
ஓம் நீளாளகாயை நம
ஓம் ஸ்ரீலின்யை நம
ஓம் தீர்க்க ஜிக்வாயை நம
ஓம் இரக்தபாண்யை நம
ஓம் யோகின்யை நம
ஓம் மாதங்கியை நம
ஓம் டாகிண்யை நம
ஓம் தாகிண்யை நம
ஓம் மாவிண்யை நம
ஓம் மகாரௌத்ரியை நம
ஓம் திரிபுரசுந்தர்யை நம
ஓம் சத்ரு நாசதாயை நம
ஓம் சௌபாக்யதாயை நம
ஓம் பரமேஸ்வர்யை நம
ஓம் ஓம் காரியை நம
ஓம் சர்வ சனன்யை நம
ஓம் மகா கோரியை நம
ஓம் ஸ்தம்பின்யை நம
ஓம் புவனேஸ்வர்யை நம
ஓம் ஆஷ்ட புஜாயை நம
ஓம் வீரதேவ்யை நம
ஓம் ஊர்த்வசேசன்யை நம
ஓம் சர்வசித்திப்ரதான்யை நம
ஓம் வீரபத்ரகாளியை நம
ஸ்ரீ வீரபத்திரை அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
9. விநாயகி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் விநாயகரின் அம்சமாய் அமர்ந்திருப்பவள். விக்னேஸ்வரி என்றும் பெயர் பெறுவாள். இடையூறுகளைக் களைபவள். யானைத் தலையும் அதில் கரண்ட மகுடமும் உடையவள். நான்கு கரத்தினள். முன் இருகரமும் - அபய வரதமே. பின் வலக்கரத்தில் மழுவும்; இடக்கரத்தில் பாசமும் உடையவள். இந்த பாச - ஆயுதமே இவளை அம்பிகை அம்சம் என்பதை எடுத்துக்காட்டும். இவளின் மார்புப்பகுதியே, இவளை விநாயகி என்று அடையாளம் காட்டும்; உற்று நோக்கினாலேயே - இதை உணர முடியும்; பலரும் விநாயகர் என்றே கருதுபர். சப்த கன்னியருக்கு விக்கினம் ஏற்படாமல் இருப்பதற்காக எடுத்த அவதாரம்; வழிபட்டால் - துன்பம் தொலையும் உபாசித்தால் - விக்கினம் விலகும்!
விநாயகி விக்னேஸ்வரி பூஜை
1. ஆசன ஆர்த்தி மூலம் :
ஓம் - ஹரீம் - விநாயகி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹரீம் - வம் - விநாயகி மூர்த்தியை - நம:
ஓம் - ஹரீம் - கம்- வம் - விநாகியை - நம:
2. காயத்ரி :
ஓம் - விக்னேஸ்வரியை வித்மஹே:
வக்ரதுண்டாய தீமஹி:
தந்நோ, விநாயகி ப்ரசோதயாத்
3. த்யான ஸ்லோகம் :
இலம்போதரம் ப்ருஹத்குக்ஷிம்,
நாகா நாந்து ஸமந்விதாம்;
விக்நேசம் பூர்வ வத்க்ருத்வா,
வீரபத்ரம் ஸஹைவது;
பாசாங்குசம் சூதகபித்த
ஜம்பூபலம், திலாபூப வரஞ்சஹஸ்தம்;
வந்தே ஸதகம், தருணா ருபாணம்,
ப்ரசந்த வக்த்ரம், தருணம் கணேசம்
4. மூல மந்திரம் :
ஓம் - ஹரீம் - கம் - விம் - விநாயகிய்யை - நம:
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள -  நாமாவளியைக் கொண்டு - அர்ச்சிக்க.
6. பூஜை :
பீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய தாம்பூலம் சமர்ப்பிக்க.
7. துதி :
கஜேந்த்ர வதநம் ஸாக்ஷõத்
சலத் கர்ண சு சாமரம்;
ஹேம வர்ணம் சதுர்பாஹும்
பாசாங்குசதரம் வரம்;
ஸ்வதந்தம் தட்சிணே ஹஸ்தே
சவ்யேது ஆம்ர பலம்ததா;
புஷ்கரே மோதகஞ்சைவ
தாரயந்தம் அநுஸ்மரேத்;
சப்த கன்னியர் அநித்த பீடாம்சம்
விநாயகிதேவி நமோஸ்துதே.
விநாயகி விக்னேஸ்வரி அஷ்டசத ஸ்தோத்ரம்
ஓம் விநாயகியை நம
ஓம் கஜானனாயை நம
ஓம் சூமுகாயை நம
ஓம் ப்ரமுகாயை நம
ஓம் ஞான நீபாயை நம
ஓம் புண்யக்ருதேயை நம
ஓம் அக்ர கண்யாயை நம
ஓம் அக்ர பூஜ்யாயை நம
ஓம் அக்ர காமினேயை நம
ஓம் சர்வகீர்த்யை நம
ஓம் சர்வசித்தாயை நம
ஓம் ஹேரம்பாயை நம
ஓம் மகோதராயை நம
ஓம் மகோத்கடாயை நம
ஓம் மங்கலதாயை நம
ஓம் ப்ரமோதாயை நம
ஓம் காமினேயை நம
ஓம் கபித்தப்ரியாயை நம
ஓம் ப்ரம வந்திதாயை நம
ஓம் விஷ்ணுப்ரியாயை நம
ஓம் சித்தசேவிதாயை நம
ஓம் விக்னகர்த்யை நம
ஓம் விக்னஹர்த்யை நம
ஓம் விச்வ நேத்ராயை நம
ஓம் ஸ்ரீபதபேயை நம
ஓம் வாக்பதயேயை நம
ஓம் சருங்கார்யை நம
ஓம் சாஸ்வதாயை நம
ஓம் பக்தநிதயை நம
ஓம் பாவகம்யாயை நம
ஓம் மகதேயை நம
ஓம் மகேசாயை நம
ஓம் மகிதாயை நம
ஓம் சத்யாயை நம
ஓம் சத்யபராக்ரமாயை நம
ஓம் சுபதாயை நம
ஓம் சுபாங்காயை நம
ஓம் சுபவிக்கிரகாயை நம
ஓம் வல்லபாயை நம
ஓம் வரசித்திவிநாகியை நம
ஓம் கௌரீபுத்ரியை நம
ஓம் கணேச்வராயை நம
ஓம் பூதாயை நம
ஓம் வாணீப்ரதாயை நம
ஓம் தேவாயை நம
ஓம் சிவாயை நம
ஓம் சுத்தாயை நம
ஓம் புத்திப்ரியாயை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் ஏகதந்தாயை நம
ஓம் சதுர்பாகவேயை நம
ஓம் சதுராயை நம
ஓம் லம்போதராயை நம
ஓம் சோமசூர்யாக்னியை நம
ஓம் பாசாங்குசதராயை நம
ஓம் குணாதீயாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் சக்ரிணேயை நம
ஓம் ஜடிலாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் சௌம்யாயை நம
ஓம் நாகயஞ்யோபதாயை நம
ஓம் ஸ்வயம்கூர்த்யை நம
ஓம் ஸ்தூல துண்டாயை நம
ஓம் வாகீசாயை நம
ஓம் சித்திதாயகாயை நம
ஓம் மாநசாயை நம
ஓம் விகடாயை நம
ஓம் மூஷிகாயை நம
ஓம் கணராஜாயை நம
ஓம் குப்ஜாயை நம
ஓம் சிந்தூராயை நம
ஓம் த்ரிநேத்ராயை நம
ஓம் தனதாயகாயை நம
ஓம் வாம நாயை நம
ஓம் தூம்ராயை நம
ஓம் கபிலாதியாயை நம
ஓம் மோதகப்ரியாயை நம
ஓம் மஹோத்சாயை நம
ஓம் சுகதாயை நம
ஓம் விக்நநாசின்யை நம
ஓம் மங்களப்ரதாயை நம
ஓம் கமலாசநாயை நம
ஓம் மூலாதாராயை நம
ஓம் மூலபூதரியை நம
ஓம் மூலரூபாயை நம
ஓம் லக்ஷ்ம்யை நம
ஓம் கமலாயை நம
ஓம் சித்தியாயை நம
ஓம் புத்திசித்யை நம
ஓம் முக்திசித்யை நம
ஓம் சர்வசித்யை நம
ஓம் சித்தலக்ஷ்மியை நம
ஓம் ஸ்ரீய லக்ஷ்மியை நம
ஓம் நாதரூபிண்யை நம
ஓம் நாதாதீதாயை நம
ஓம் வாண்யை நம
ஓம் நிர்குணாயை நம
ஓம் புத்தியை நம
ஓம் வைநாக்னியை நம
ஓம் வாகீஸ்வர்யை நம
ஓம் சம்பக நாசிதாயை நம
ஓம் வீணாபுஸ்தகதாரிண்யை நம
ஓம் மகாமாயாயை நம
ஓம் ப்ரம்மமூர்த்தாயை நம
ஓம் பக்தாபஷ்டப்ரதாயை நம
ஓம் பக்தவிக்னவிநாசகாயை நம
ஓம் விக்னேஷ்வர்யை நம
ஸ்ரீ விக்னேஸ்வரி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
கருப்பணசாமி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவர் பைரவர் அம்சம்; கிராமிய வழக்கில் கருப்பர் - கருப்பணன் - கருப்பண்ணன் - முனியாண்டி - சடையாண்டி - கருப்பணசாமி எனப் பலபெயர் பெறுவர். ஒரு முகமும் - இரண்டு கரங்களுமே உடையவர். வலக்கரத்தில் - கத்தி அல்லது அரிவாள் கொண்டிருப்பார். இடக்கரத்தில் - தண்டம் அல்லது கதை உமையவராக இருப்பார். முறுக்கு மீசையும் - சடாமுடியும் உடையவர். காவி உடை அணியும் வழக்குடையவர். இவர் அருகில் நாய் வாகனம் இருக்கக் காணலாம். அதுவே, இவர் பைரவர் அம்சம் என்பதை எடுத்துக்காட்டும்.
குதிரை வாகனத்தின் மேலும் அமர்ந்திருப்பார். குதிரை வாகனத்தின் அருகிலும் இருப்பார். கிராமிய காப்புக் கடவுள். இவரை வழிபட்டால் - காத்தல் அடையலாம். உபாசித்தால் - பேய் - பிசாசுகளின் - பிடியில் இருந்தும் விடுபடலாம்!
கருப்பணசுவாமி - பூஜா
1. ஆசன ஆர்த்தி மூலம் :
ஓம் - ஹ்ரூம் - கருப்பண்ணசாமி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரூம் - கம் - கருப்பணசாமி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரூம் - ஹாம் - கம் - கருப்பணசாமியே - நம:
2. காயத்ரி :
ஓம் க்ருஷ்ண வர்ணாசாய வித்மஹே;
ருத்ர புத்ராய தீமஹி;
தந்நோ பீம ப்ரசோதயாத்.
3. த்யான ஸ்லோகம் :
வ்ருத்தாயத் த்விநேத்ரம் ச
வ்யாளபத்த சூகுந்தளம்;
நீலம் பீமம் த்ரிபுண்டர வில சந்முகம்
குந்தம் தரந்தரம் வாமேச;
க்ருகரம் தக்ஷிணே கரே
ஓட்யாண பத்த கச்சம் ச;
ஸர்வா லங்கார பூஷிதம்
கருப்பணசாமி நமஸ்துதே.
4. மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரூம் - கம் - கருப்பணசாமியே நம:
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.
6. பூஜை :
பீஜங்களுடன் கூடிய - கருப்பண்ணர்
நாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி -
தூப - தீப - நைவேத்திய -
தாம்பூலம் - சமர்ப்பிக்க.
7. துதி :
ரக்தாக்ஷம் க்ருஷ்ண வஸ்த்ரஞ்ச
த்வி புஜம், மோஹணா க்ருதிம்;
கட்கம் தண்டம் அபயகர ஹஸ்தம்
சுவாமி கருப்பண்ண நமோஸ்துதே.
கருப்பண்ணசுவாமி - அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் க்ருஷ்ணவர்ணாய நம
ஓம் ரக்தாசாய நம
ஓம் நீலவஸ்த்ராய நம
ஓம் த்விபுஜாய நம
ஓம் சுந்தராய நம
ஓம் கட்க பாணியே நம
ஓம் தண்டஹஸ்தாய நம
ஓம் அலங்காரசோபிதாய நம
ஓம் குக்குட ப்ரியாய நம
ஓம் பய நிவாரகாய நம
ஓம் தயா மூர்த்தியே நம
ஓம் நிசி நாதாய நம
ஓம் ரோகஹராய நம
ஓம் மகாவிக்ரமாய நம
ஓம் த்ரிபுண்டாதாரிணே நம
ஓம் ருத்ர புத்ராய நம
ஓம் பீம அம்சரே நம
ஓம் த்விநேத்ராய நம
ஓம் புஜங்க ஆபரணங்ய நம
ஓம் புரவிரூடாய நம
ஓம் சுகாசனாய நம
ஓம் நூபுர பாதரே நம
ஓம் குங்கும திலகரே நம
ஓம் சந்தன மேனியாரே நம
ஓம் கல்லாட வஸ்தரே நம
ஓம் க்ராம பாதுகாவலரே நம
ஓம் உத்திரநோக்கரே நம
ஓம் அக்ஷ்மாலரே நம
ஓம் கஸ்தூரி ப்ரியரே நம
ஓம் சப்தகன்னி காவலரே நம
ஓம் ஸ்வான அருகுடயாயி நம
ஓம் தடாகவிருப்பரே நம
ஓம் நிம்பவ்ருஷஅமர்வாய் நம
ஓம் சடா மகுடாய நம
ஓம் காப்புக் கரத்தாய் நம
ஓம் வீரதண்டாய நம
ஓம் உக்ர முகத்தாய் நம
ஓம் வ்யாக்ரசர்மகக்சாய் நம
ஓம் போதிவ் ருஷப்ரியாய நம
ஓம் புருச விசேசாய நம
ஓம் மகாகாளாய நம
ஓம் ஏககாராய நம
ஓம் அம்ஸாய நம
ஓம் அம்ஸபநயே நம
ஓம் அரிசோபிதாய நம
ஓம் நவபூசணாய நம
ஓம் நமசிகதாய நம
ஓம் சர்வதூதாய நம
ஓம் கணபூஜிதியா நம
ஓம் தீர திவ்யாய நம
ஓம் ராஜாய நம
ஓம் ராஜியலோசநாய நம
ஓம் கந்தப்பிரியாய நம
ஓம் கெர்பகுண்டலாய நம
ஓம் கந வல்லபாய நம
ஓம் ருத்ரசோமிதாய நம
ஓம் ருத்ரவாதநாய நம
ஓம் ருத்ரவசாய நம
ஓம் வாதரூடாய நம
ஓம் யதாகோடியே நம
ஓம் யமவாங்கியே நம
ஓம் ஸ்வாதிஸ்டாய நம
ஓம் ஸ்வாமிசகாய நம
ஓம் அரிணே நம
ஓம் ஆசாய நம
ஓம் காகளாய நம
ஓம் ஆப்யநாய நம
ஓம் கெர்க்காய நம
ஓம் ஈடாகாய நம
ஓம் பூதரூபதிரதயே நம
ஓம் திரிசூலாயுததாரணாய நம
ஓம் ஸர்வ ராசநிவிதாய நம
ஓம் ஆததித்ரோதாய நம
ஓம் கெம்பீராய நம
ஓம் ஆதிபீமாவய நம
ஓம் காலநிதயே நம
ஓம் ÷க்ஷம÷க்ஷத்திராய நம
ஓம் பஸ்ம திருதயே நம
ஓம் வீரபத்ரஸ்வாமிணே நம
ஓம் அகோர ரூபிணே நம
ஓம் கலிநாசனாய நம
ஓம் கபாலினே நம
ஓம் கபர்தினே நம
ஓம் விரண்மயாய நம
ஓம் விசாம்பதயே நம
ஓம் விரூபாசாய நம
ஓம் ரத்யாய நம
ஓம் ரமணாய நம
ஓம் ரீதாரூபாய நம
ஓம் யவடாய நம
ஓம் யமதரூபாய நம
ஓம் யம் கக்காய நம
ஓம் ஸ்வசூத்ராய நம
ஓம் வாசபதீம்பிர்பவே நம
ஓம் கம்பநாசாய நம
ஓம் கருப்பரே நம
ஓம் கம் காளாய நம
ஓம் போகாய நம
ஓம் போக்யாய நம
ஓம் பரணதாய நம
ஓம் நீலவேணியே நம
ஓம் கிம்கிணிதிரதயே நம
ஓம் சண்டாய நம
ஓம் அஷ்டஆசாய நம
ஓம் உக்ராய் நம
ஓம் க்ருபாகாராய நம
ஓம் சர்வயக்ஷõய நம
ஓம் கருப்பண சுவாமினே நம
ஸ்ரீ கருப்பணசாமி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
புந பூஜை
வீரபத்திரர் சுலோகம் துதி :
1. ரௌத்ரம், ருத்ராவதாரம், சூதவக நயநம்
ஊர்த்வ கேசம், சூதம்ஷ்ட்ரம்;
பீமரூபம் கணகண வில சத்
கண்ட மாலா க்வ்ருதம்;
தக்ஷஸ்ய கர்வபங்கம், அஜமுக க்ருதம்,
வீராட்ட ஹாசோந் முகம்;
வந்தே லோகைக வீரம், த்ரிபுவநமதநம்
சியாமலம் வீர பத்ரம் - த்யாயாமி.
2. சத்துருவின் நிலைமைபெற்று தக்கன் மகம்
அடும் நாளில், தலைமை சான்ற
பத்து உருவம் பெறும் திருமால் முதலாய
பண்ணவர் தம் படிவம் யாவும்,
உய்த்து உருவுதனி வாள் கையுறு வாழ்க்கை
பெற்ற உருத்திர மூர்ததி பொற்
பத்திரை அன்புறு வீரபத்திரன் சித்
துருவினையே பரவல் செய்வோம்.
- பழைய காஞ்சிப்புராணம்.
சப்த கன்னியர் சுலோகம் துதி:
ஹம்ஸத்வஜா - ஹம்ஸாரூடா
ஜடா மகுட தாரிணீ
1. ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹ ரூபிணீ - நமஸ்துதே;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
2. வ்ருஷ வாஹ ஸமா ரூடாம்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;
மயூரத்வஜ வாஹீ, ஸ்யாத்
3. உதும்பர த்ரு மாஸ்ரிதா
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
4. வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;
ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
5. ஸர்வா லங்கார ஸம்பன் னாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;
வர அபய கராம் போஜாம்
6. வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
மகேந்த்ரீம் மா தரம் வந்தே,
கஜ வாஹண சம்ஸ்த்திதாம் - நமஸ்துதே;
சதுர் புஜா த்ரிநேத் ராச
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
7. கபால சூல ஹஸ்தா வரதாபய பாணிநீ
சாமுண்டா தேவிம் - நமஸ்துதே;
கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்
- குமர குபர சுவாமிகள்
தொகுப்பு: வன்னி விநாயகர் புத்தக நிலையம்,
-ஏ, மீனாட்சி அம்மன் கோவில், மதுரை.

புற்று நோயை தீர்க்கும் நாராயணிய மந்திர ஸ்லோகம்

புற்றுநோய் உட்பட பல நோய்களை குணப்படுத்தும் அற்புத ஸ்லோகம், ஸ்ரீமன் நாராயணீயம் பட்டத்ரி தன் நோய் தீர்க்க குருவாயூரப்பனை நோக்கிப் பாடியதுதான். நாராயணீயம், இவர் பாடி முடித்தவுடன் நோயும் தீரப் பெற்றார் என்பதும் சரித்திரம். 

காஞ்சி மகா பெரியவரிடம் பெண்ணொருத்தி தனக்குக் புற்றுநோய் இருப்பதாகச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியெல்லாம் தன்னிடம் இல்லை எனவும் அழுதிருக்கிறார். 

அப்பெண்ணை கவலைப் படாதே நாராயணீயத்திலே எட்டாவது தசகத்திலே அஸ்மின்னு ஆரம்பிக்கிற ஸ்லோகத்தை தினமும் 48 தடவை சொல்லு. இப்படியே 48 நாள் பாராயணம் பண்ணு... என்று அருளியிருக்கிறார். 

அதை ஏற்றுக் கொண்ட அப்பெண்மணி அதே போல 48 நாள் 48 தடவை பாராயணம் செய்திருக்கிறார். பிறகு அவரை சோதித்த மருத்துவர்கள் அதிசயித்துப் போனார்கள், இவ்வாறு மிகப் பலரின் உடல் உபாதைகளையும் தீர்த்த அந்த ஸ்லோகம். 

அஸ்மிந்- பராத்மந் நநு பாத்மகல்பே 
த்வமித்த- முத்தாபித- பத்மயோனி: 
அனந்த பூமா மமரோக ராசிம் 
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ 


Sunday, March 22, 2015

சப்த ரிஷிகள் காயத்திரி மந்திரங்கள் !!!

காஸ்யபர்
ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தன்னோ காஸ்யப ப்ரசோதயாத்
அத்ரி
ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தன்னோ அத்ரி ப்ரசோதயாத்
பரத்வாஜர்
ஓம் தபோரூடாய வித்மஹே
சத்ய தர்மாய தீமஹி
தன்னோ பரத்வாஜ ப்ரசோதயாத்
விஸ்வாமித்ரர்
ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜுடாய தீமஹி
தன்னோ விஸ்வாமித்ர ப்ரசோதயாத்
கவுதமர்
ஓம் மஹாயோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தன்னோ கௌதம ப்ரசோதயாத்
ஜமதக்னி
ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தன்னோ ஜமத்கனி ப்ரசோதயாத்
வசிஷ்டர்
ஓம் வேதாந்தகாய வித்மஹே
ப்ரம்ஹசுதாய தீமஹி
தன்னோ வசிஷ்ட ப்ரசோதயாத்
அதிதி தேவி
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
கஸ்யப பத்னியைச தீமஹி
தன்னோ அதிதி ப்ரசோதயாத்
அனுசூயா தேவி
ஓம் வேதாத்மன்னியை வித்மஹே
அத்ரி பத்னியை ச தீமஹி
தன்னோ அனுசூயா ப்ரசோதயாத்
சுகிலா தேவி
ஓம் மஹா சக்தியை ச வித்மஹே
பரத்வாஜ் பத்னியை ச தீமஹி
தன்னோ சுசிலா ப்ரசோதயாத்
குமுத்வதி தேவி
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஸ்வாமித்ர பத்னியை ச தீமஹி
தன்னோ குமுத்வதி ப்ரசோதயாத்
அகல்யா தேவி
ஓம் மஹா சக்தியை ச வித்மஹே
கௌதம பத்னியை ச தீமஹி
தன்னோ அஹல்யா ப்ரசோதயாத்
ரேணுகா தேவி
ஓம் ஆதி சக்தியை ச வித்மஹே
ஜாமதக்னி பத்னியை ச தீமஹி
தன்னோ ரேணுகா ப்ரசோதயாத்
அருந்ததி தேவி
(கணவன், மனைவி ஒற்றுமை பெற)
ஓம் ஞானாத்மிகாயை வித்மஹே
வசிஷ்ட பத்னியை தீமஹி
தன்னோ அருந்ததி ப்ரசோதயாத்

சித்தர்கள் காயத்திரி மந்திரங்கள் !!!

அகஸ்தியர்
(ஞானம் உண்டாக)
ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரசோதயாத்
கருவூரார்
(ஆயுள் தீர்க்கம் பெற)
ஓம் ராஜமூர்த்யா வித்மஹே
சௌபாக்ய ரத்நாய தீமஹி
தன்னோ வாதகாயை கருவூர்சித்த ப்ரசோதயாத்
காலங்கிநாதர்
ஓம் வாலை உபாசாய வித்மஹே
புவனேஸ்வரி சிஷ்யா தீமஹி
தன்னோ காலங்கிநாத ப்ரசோதயாத்
திருமூலர்
(தியான யோகம் பெற)
ஓம் ககன சித்ராய வித்மஹே
பிரம்மசொரூபிணே தீமஹி
தன்னோ திருமூலராய ப்ரசோதயாத்
பதஞ்சலி
(யோகங்கள் சித்தி அடைய)
ஓம் சிவதத்வாய வித்மஹே
யோகாந்தராய தீமஹி
தன்னோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்
புண்ணாக்கீசர்
ஓம் ஈசத்வாய ச வித்மஹே
ரணனாவாய தீமஹி
தன்னோ முக்தி புண்ணாகீ ப்ரசோதயாத்
சுந்தரானந்தர்
(சகல காரியங்களும் சித்தி பெற)
ஓம் ஸ்ரீ வல்லபாய வித்மஹே
ஸ்ரீ மீனாக்ஷி பதிவால் தீமஹி
தன்னோ சுந்தரானந்த ப்ரசோதயாத்
போகர்
ஓம் நவபாஷாவைகராய வித்மஹே
மன்மதரூபாய தீமஹி
தன்னோ பிரபஞ்ச சஞ்சார
சீனபதிர்ஷி ப்ரசோதயாத்
பைரவர்
(அஷ்ட சித்திகளை பெற)
ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே
÷க்ஷத்ர பாலாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கசிச்நாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்
ஓம் ஸ்வாநத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவஹ் ப்ரசோதயாத்
தொகுப்பு: வன்னி விநாயகர் புத்தக நிலையம்,
-ஏ, மீனாட்சி அம்மன் கோவில், மதுரை.

Sunday, March 15, 2015

சித்தர்களின் மிகவும் முக்கியமான மூல மந்திரங்க்ள்!!!

நந்தீசர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"
அகத்தியர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்...
"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"
போகர் மூல மந்திரம்...
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"
கோரக்கர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"
தேரையர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"
சுந்தரானந்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"
புலிப்பாணி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"
காக புசண்டர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"
இடைக்காடர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"
சட்டைமுனி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"
கொங்கணவர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"
சிவவாக்கியர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"
உரோமரிஷி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"
குதம்பை சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"
கருவூரார் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

Friday, March 13, 2015

வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை !!!

1. சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.
2. இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவற்றில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கிற அசுத்தங்களையும் கை, கால் முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் வெந்நீரால் தேய்த்துச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பின் வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதன்பின் கரிசலாங்கண்ணி கீரைத் தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல்தேய்த்து வாய் கழுவ வேண்டும்.
3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையி 3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.
அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.
4. காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணியவேண்டும்.
5. ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். பின், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சற்று நேரம் கடவுளை வணங்க வேண்டும்.
6. பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூடாது. மிக நிதானமாகவும் (சோம்பேறித்தனத்துடன்) உண்ணக்கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும்.
7. கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது. ஆனால், கருணைக்கிழங்கை உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றைக் குறைவாகவும் மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பைக் குறைவாகச் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்ல எண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.
8. கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் இவற்றை கறி செய்வதற்கு உபயோகப்படுத்தலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது பயன்படுத்த வேண்டும்.
9. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரான்னங்களை அடிக்கடி சாப்பிடக்கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.
10. புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
11. பருப்பு வகைகளில் துவரம்பருப்பை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம்.
12. விருந்து உணவு என்றாலும், சற்றுக் குறைவாகவே புசிக்க வேண்டும்.
13. வெந்நீரையே குடிக்கவேண்டும்.
14. மாலை வெயில் உடலில் படுமாறு சற்று உலாவ வேண்டும். காற்று அதிகமாக இருந்தால் உலாவக் கூடாது. கடும் வெயில், பனி, மழை இவை தேகத்தில் படுமாறு உலவக்கூடாது.
15. இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் தியானம் செய்யலாம். மந்திரங்கள் சொல்லிக் கடவுளை வணங்கலாம். புத்தகங்களைப் படிக்கலாம். வீட்டு விவகாரங்களைப் பற்றிப் பேசலாம்.
16. பிறகு இரவு உணவு. பகல் உட்கொண்டதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும்.
17. இரவில் கீரை, தயிர் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைச் சேர்க்கக்கூடாது. இரவில் சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.
18. இரவுச் சாப்பாடு முடிந்து இரண்டு மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
19. பெண்களுடன் உறவு கொள்ளும் நாட்களில், உறவு செய்வதற்கு அரைமணி நேரம் முன்னிருந்து உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன்பின் உறவு கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு மேல் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது | ஒரே இரவில்.
20. உடலுறவு முடிந்தபின் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு கடவுளைத் தியானம் செய்து, பின் உறங்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொள்வது அதமம். எட்டு தினங்களுக்கு ஒருமுறை என்றால் மத்திமம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.
21. படுக்கும்போது இடதுகைப் பக்கமாகவே உறங்க வேண்டும். அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்குமேல் உறங்கக்கூடாது.
22. கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.
23. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.
24. பதற்றம் மிகுந்தால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, பதற்றம் கூடாது.
25. நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறையாவது காய்ச்சிய நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு முழுக வேண்டும்.
26. புகை, கஞ்சா, கள், சாராயம் போன்றவை கூடாது.
27. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரத்துக்கு ஒருமுறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.
வள்ளலார் வழங்கியுள்ள பிரார்த்தனை
ஒருவன் பிரார்த்தனை செய்யும்போது அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் தனி ஒரு மனிதருக்கு வேண்டியவை எல்லாம் அடங்கிவிடுகின்றன. மனிதர்கள் செய்யவேண்டிய கடவுள் பிரார்த்தனை இதுதான்:
"பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட் ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய். நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே..."
நன்றி :- தமிழ் விக்கிபீடியா

வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை !!!

1. சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.
2. இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவற்றில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கிற அசுத்தங்களையும் கை, கால் முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் வெந்நீரால் தேய்த்துச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பின் வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதன்பின் கரிசலாங்கண்ணி கீரைத் தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல்தேய்த்து வாய் கழுவ வேண்டும்.
3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையி 3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.
அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.
4. காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணியவேண்டும்.
5. ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். பின், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சற்று நேரம் கடவுளை வணங்க வேண்டும்.
6. பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூடாது. மிக நிதானமாகவும் (சோம்பேறித்தனத்துடன்) உண்ணக்கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும்.
7. கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது. ஆனால், கருணைக்கிழங்கை உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றைக் குறைவாகவும் மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பைக் குறைவாகச் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்ல எண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.
8. கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் இவற்றை கறி செய்வதற்கு உபயோகப்படுத்தலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது பயன்படுத்த வேண்டும்.
9. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரான்னங்களை அடிக்கடி சாப்பிடக்கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.
10. புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
11. பருப்பு வகைகளில் துவரம்பருப்பை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம்.
12. விருந்து உணவு என்றாலும், சற்றுக் குறைவாகவே புசிக்க வேண்டும்.
13. வெந்நீரையே குடிக்கவேண்டும்.
14. மாலை வெயில் உடலில் படுமாறு சற்று உலாவ வேண்டும். காற்று அதிகமாக இருந்தால் உலாவக் கூடாது. கடும் வெயில், பனி, மழை இவை தேகத்தில் படுமாறு உலவக்கூடாது.
15. இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் தியானம் செய்யலாம். மந்திரங்கள் சொல்லிக் கடவுளை வணங்கலாம். புத்தகங்களைப் படிக்கலாம். வீட்டு விவகாரங்களைப் பற்றிப் பேசலாம்.
16. பிறகு இரவு உணவு. பகல் உட்கொண்டதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும்.
17. இரவில் கீரை, தயிர் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைச் சேர்க்கக்கூடாது. இரவில் சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.
18. இரவுச் சாப்பாடு முடிந்து இரண்டு மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
19. பெண்களுடன் உறவு கொள்ளும் நாட்களில், உறவு செய்வதற்கு அரைமணி நேரம் முன்னிருந்து உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன்பின் உறவு கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு மேல் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது | ஒரே இரவில்.
20. உடலுறவு முடிந்தபின் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு கடவுளைத் தியானம் செய்து, பின் உறங்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொள்வது அதமம். எட்டு தினங்களுக்கு ஒருமுறை என்றால் மத்திமம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.
21. படுக்கும்போது இடதுகைப் பக்கமாகவே உறங்க வேண்டும். அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்குமேல் உறங்கக்கூடாது.
22. கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.
23. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.
24. பதற்றம் மிகுந்தால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, பதற்றம் கூடாது.
25. நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறையாவது காய்ச்சிய நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு முழுக வேண்டும்.
26. புகை, கஞ்சா, கள், சாராயம் போன்றவை கூடாது.
27. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரத்துக்கு ஒருமுறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.
வள்ளலார் வழங்கியுள்ள பிரார்த்தனை
ஒருவன் பிரார்த்தனை செய்யும்போது அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் தனி ஒரு மனிதருக்கு வேண்டியவை எல்லாம் அடங்கிவிடுகின்றன. மனிதர்கள் செய்யவேண்டிய கடவுள் பிரார்த்தனை இதுதான்:
"பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட் ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய். நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே..."
நன்றி :- தமிழ் விக்கிபீடியா