Thursday, December 18, 2014

அனைத்து சித்தர்களின் ஆசி பெற……!!!

அனைத்து சித்தர்களின் ஆசி பெறஓம் சிங் ரங் அங் சிங் சர்வ சித்தர்களே போற்றி!!! குறைந்த பட்சம் 108 முறை இதை நினைத்து தியானம் செய்யுங்கள்.
இந்த மந்திரத்தை உங்களுக்கு விருப்பமான சித்தரை நினைத்தும் தியானம் செய்யலாம்
ஓம் சிங் ரங் அங் சிங் கோரக்கர் சித்தரே போற்றி!!!

மூலாதாரம் பற்றி சித்தர் போகர் !!!!

ஆறு ஆதாரங்களில் ஒன்றான மூலாதாரம் , முதுகு தண்டுக்கு கீழ் உள்ளது. அதன் அமைப்பை போகர் சித்தர் தனது போகர் 7000 என்ற நூலில் இப்படி கூறுகிறார்.
போகர் 7000
காணவே மூலம் அஃது அண்டம் போலக்
காரணமாய்த் திரிகோண மாக நிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளைய மாகும்
புறம்பாக இதழ் அதுவும் நாலுமாகும்
நாணவே நாற்கமலத்து அட்சரங்கள்
நலமான வ-ச-ஷ-ஸவ்வு மாகும்
மூணவே மூக்கோணத்து உள்ஒளி ஓங்கார
முயற்சியாய் அதற்குள்ளே அகாரம் ஆமே – போகர் 7000
மூலாதாரமானது ஒரு வட்டம் போல் இருக்குமாம் அதன் நடுவில் முக்கோணம் ஒன்று இருக்குமாம் அதன் மேலே ஒரு வளையமும், அதனை சுற்றிலும் நான்கு இதழ்களும் இருக்குமாம். அந்த இதழ்களில் வ-ச-ஷ-ஸ என்ற நான்கு எழுத்துக்கள் இருக்குமாம். அதன் ஒரு புறத்தில் ‘உ’ காரமும் மறுபுறத்தில் ‘அ’ காரமும் இருக்குமாம்.
அகாரத்தின் மேலாகக் கணேசர் நிற்பர்
அதிலே ஓர் கோணத்தில் உகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாம் சக்தி நிற்பாள்
ஒடுங்கியதோர் முனை ஒன்றில் கதவிப் பூவாய்ப்
புகாரமாய் முகங்கீழ்க்குண் டலியாம் சக்தி
பெண்பாம்பு போல் சுருட்டிச் சீறிக் கொண்டு
சுகாரமாய் சுழிமுனை ஊடுருவி நிற்பாள்
துரியாதீதம் என்ற அவத்தை தானே. - போகர் 7000
அகாரத்தில் மேலே கணேசர் நிற்பாராம் அதன் மற்றொரு புறமான உகாரத்தின் மேல் வல்லபை என்ற சக்தி நிற்பாளாம் இதில் வாழைப் பூவை போல் கீழ்நோக்கி ஒன்று விரிந்திருக்கும். அதில் பெண் பாம்பு போல் குண்டலினி சக்தி சுருட்டிக் கொண்டு சுழிமுனையில் ஊடுருவி சீறிக் கொண்டு இருப்பாளாம்
அவத்தைதனக் கிருப்பிடம்மும் மூலமாகும்
அழகான கதலிப்பூ எட்டி தழாய் நிற்கும்
நவத்தைக்கு நந்தி அதன் வாயில் நிற்பார்
நற்சிவமரம் சிகார மல்லோ கோடி பானு
அவத்தைக்கு வாய் திறவாள் மலரால் மூடும்
மைந்தனே எட்டு இதழில் எட்டு சத்தி
பவத்தைக்குச் சக்தி எட்டின் பேர் ஏது என்றால்
பாங்கான அணிமவும் லகிமாத் தானே – போகர் 7000
இதுவே மூலதாரத்தின் இருப்பிடமாகுமாம் முக்கோணத்தின் கீழ் முனையில் உள்ள வாழைப் பூ போன்ற அமைப்பு எட்டு இதழ்களை கொண்டது. அந்த எட்டு இதழ்கள் ஒவ்வொன்றிலும் எட்டு விதாமான சக்திகள் அடங்கிஇருக்குமாம் அதன் நடுவே நந்தி நிற்பாராம். நந்திக்கு பிறகு கோடி சூரிய பிரகாசத்துடன் நற்சிவமும் இருக்குமாம்.
தானான மகிவாவும் கரிமா வோடு
தங்கும்ஈ சத்துவமும் வசித்து வமாகும்.
பூனான பிராத்திபிரா காம்யத் தோடு
புகழ்எட்டுத் தேவதையும் தளத்தில் நின்றே
ஏனான இதழாலே மூடிக் கொள்வார்
ஏற்றமாம் நந்தியைத் தான் காணொட்டாமல் - போகர் 7000
அந்த எட்டு சக்திகள், அணிமா, லகிமா, மகிமா, கலிமா, ஈசத்துவம்,வசித்துவம்,பிராப்தி மற்றும் பிராகாமியம்மாகும் அந்த அட்டமா சக்திகளுக்கான தேவர்கள் அங்கு நின்று நந்தியை பார்க்க விடாமால் எட்டு இதழ்களால் மூடிக் கொள்வார்களாம். இதுவே மூலாதாரத்தின் அமைப்பாக போகர் சித்தர் கூறுகிறார்.
மூலாதாரத்தை எப்படி விழிக்கச்செய்வது என்று போகர் கூறியிருக்கிறார் !!!!
இந்த பதிவில் அதை பார்ப்போம். இதில் எனக்கு எந்த அனுபவமும் கிடையாது நான் படித்ததை பகிர்கிறேன். இந்த நிலைகளை அடைவது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல..
வானான வஸ்துவைநீ பானம் பண்ணி
வங்ஙென்று வாங்கியுமே கும்பித்தூதே - போகர் 7000 – 14
வஸ்துவை பானம் பண்ணி வங்கென்று கும்பித்து மூச்சை மேலும் செலுத்து

ஊதினால்என் வாசத்து இலகி ரியாலே
உலாவுவார் இதழ் எல்லாம் திறந்து விட்டுப்
போதினால் ஆயிசொன்ன ஏவல் கேட்பார்
புகுந்து பார் நந்தி கண்டால் யோகமாகும்
வாதினால் பத்தான வருடத் துக்கும்
வாசலையே திறவாமல் மூடிக் கொள்வார்
ஏதினால் இதற்குள்ளே வாசி மாட்டே
இடத்தோடில் வங்ஙென்ன உள்ளே வாங்கே – போகர் 7000 – 15
அப்படி ஊதினால் எட்டு சக்திகளும் இதழ்களை திறந்துவிடுமாம். அந்த எட்டு சக்திக்கான தேவர்கள் வெளியே வந்து உலாவுவார்கள் என்கிறார். நம் ஏவல்களையும் செய்வார்கள் என்று சொல்கிறார். எட்டு இதழ்களையும் திறந்தவுடன் நந்தி தெரிவாராம். அவரை கண்டதும் யோகம் வாய்க்கும் என்கிறார். இது நிகழவேண்டும் என்றால் இடைவிடாமல் சாதகம் செய்ய வேண்டும் பத்து வருடங்கள் கூட செய்ய வேண்டியது வருமாம்
.பின் இடது நாசியில் வங் என்று மூச்சை வாங்கு.
வாங்கியே நந்தி தனில் யங்ஙென்று கும்பி
வலத்தோடில் சிங்ஙென்று உள்ளாக வாங்கித்
தாங்கியே யங்ஙென்று இருத்திக் கும்பி
தளமான தெருவாறும் வெளியாய்க் காணும்
ஓங்கியே மாணிக்க ஒளிபோல் தோன்றும்
உத்தமனே மூலத்தின் உண்மை காணும்
தேங்கியே வல்லபையாம் சத்தி தாணும்
சிறந்திருப்பாள் பச்சைநிற மாகத் தானே - போகர் 7000 – 16
முச்சை உள்வாங்கி நந்தியை நினைத்து யங் என்று கும்பித்துப்பார் வலுது நாசியில் மூச்சை விடும்போது சிங் என்று மூச்சை உள்ளே வாங்கி யங் என்று மூச்சை கும்பிப்பாயாக (கும்பகம் – சிறிது நேரம் மூச்சை நிறுத்துவது) . இப்படி செய்யும்போது ஆறு ஆதாரங்களுக்கும் வழித்தோன்றுமாம். மாணிக்க ஒளிப்போல் தோன்றுமாம் மூலத்தின் உணமையும் தெரியுமாம். பச்சை நிறமாக வலை தாய் சக்தி காட்சித்தருவாள் என்கிறார்.
பச்சைநிற வல்லபையைப் பணிந்து போற்று
பாங்கான ஆறுக்கும் பருவம் சொல்வாள்
மொச்சையாம் மூலமது சித்தி ஆனால்
மூவுலகும் சஞ்சரித்துத் திரிய வாகும்
கச்சைநிறக் காயமுமே கனிந்து மின்னும்
கசடு அகன்றே ஆறுதலங்கண்ணில் தோன்றும்
துச்சைநிற வாதம்சொன் னபடி கேட்கும்
துரியததின் சூட்சம் எல்லாம் தோன்றும் பாரே. - போகர் 7000 – 17
பச்சை நிற வாலை தாயை பணிந்து போற்று, ஆறு ஆதாரங்களையும் கடப்பதற்கு உரிய காலத்தை உனக்கு உணர்த்துவாள் என்கிறார். மூலம் என்ற முதல் படி சித்தியாகி விட்டாலே மூவலகங்களிலும் சென்று திரியலாம் என்கிறார். உடல் கனிந்து மின்னுமாம். உடலில் படிந்துள்ள அனைத்து அழுக்குகளும் அகன்று ஆறு ஆதாரங்களும் கண்களுக்கு காட்சியளிக்கும் என்கிறார். துரியத்தின் சூட்சமம் எல்லாம் தெரியும் எனகிறார். தூரியம் என்பது தலை உச்சியில் உள்ள ஓம் சக்கரம்.
மூச்சுபயிற்சி மூலமாக மூலாதாரத்தை விழிக்க செய்யும் முறையை இங்கு போகர் கூறுகிறார். நல்ல குருவை தேர்ந்தெடுத்து அதாவது இந்த மூச்சுபயிற்சியில் நன்கு தேர்ந்தவர்களின் மூலம் கற்று கொள்வதே சிறந்தது. மூச்சுபயிற்சி செய்பவர்கள் அனைவருக்கும் இது வாய்க்கும் என்றும் சொல்லமுடியாது ஆனால் உங்கள் உடல் நல்ல ஆரோக்கியம் அடையும். ஒழுக்கத்துடனும் தன்நலம் இன்றி வாழ்பவர்களுக்கு இது கண்டிப்பாக வாய்க்கும்
http://www.tamilkadal.com/

Monday, December 15, 2014

உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்‍ 2

வருண முத்திரை
பெருவிரல் நுனியையும் கடைசி விரல் நுனியையும் இணைக்கையில் வருண முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
உடலின் நீர்சமநிலை மாறுமானால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளை இந்த முத்திரை தடுக்கிறது என்று சொல்கிறார்கள். இரத்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கவும், தோல் சுருக்கத்தைப் போக்கவும் கூட இந்த வருண முத்திரை உதவுகிறது என்கிறார்கள்.
சூன்ய முத்திரை
கையின் நடுவிரலை பெருவிரலின் அடியில் உள்ள மேட்டில் வைத்து அந்த விரலைப் பெருவிரலால் லேசாக அழுத்தியபடி வைத்துக் கொள்ளும் போது சூன்ய முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும்.
இந்த முத்திரை முக்கியமாக காது வலியையும், மற்ற காது சம்பந்தமான குறைபாடுகளையும் போக்க உதவுகிறது.
ப்ராண முத்திரை
கையின் மோதிர விரலையும், கடைசி விரலையும் மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியைப் பெரு விரல் நுனியால் தொடும் போது ப்ராண முத்திரை உருவாகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்டபடியே இருத்தல் வேண்டும்.
இந்த முத்திரை கண்பார்வைக் கோளாறையும், மற்ற கண் சம்பந்தமான வியாதிகளையும் குறைக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், களைப்பை நீக்கவும் கூட இந்த ப்ராண முத்திரை பயன்படுகிறது என்கிறார்கள்.
நன்றி : N.Ganeshan


Thursday, December 11, 2014

பிராணயாமம் செய்ய தொடங்கும் முன் கவனிக்க வேண்டியது !!!

பிராணன், உயிர் ஆற்றல் எனப்படும். இதை ஒழுங்குபடுத்துவதே பிராணயாமம். பிராணயாமம் என்பது வெறும் சுவாசம் அல்ல. சுவாச முறை (மூச்சை உள்ளிழுத்தல், வெளிவிடுதல், நிறுத்திக் கொள்ளுதல்) உயிராற்றலை தன்னிடத்து கொண்டிருக்கவில்லை.
பிராணயாமம் சுவாசத்தை ஒழுங்குபடுத்துகிறது. அத்துடன் புலன்களையும், மனத்தையும் செம்மைப்படுத்துகிறது. பிராணயாமத்தினால் நாம் உடலை ஆரோக்கியமானதாகவும், வலுவுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ளலாம். பிராணயாமத்தினால் உடலில் தேங்கிக்கிடக்கும் அதிகப்படியான கொழுப்பு கரைக்கப்படுகிறது. பிராணயாமத்தில் ஈடுபடுபவர்கள் சளி, இருமல் போன்ற நோய்களிலிருந்து விடுபடுவார்கள்.
பிராணயாமத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகத்தில் நல்ல தேஜஸ் தோன்றும். பிராணயாமப் பயிற்சினால், நுரையீரல் முழுவதும் போதிய பிராணவாயுவை பெறுகிறது. அதற்கு கிடைக்கும் ரத்த்தின் அளவும், தரமும் அதிகமாகிறது. உடலின் எல்லாத்திசுக்களுக்கும், செல்களுக்கும் ஏராளமான சுத்தரத்தமும், நிணநீரும் கிடைக்கின்றன.
உயிர்களின் வளர்ச்சியை பிராணயாமம் துரிதப்படுத்துகிறது. பிராணயாமப் பயிற்சிகளை செய்வதற்கு குறிப்பிட்ட யோக ஆசன நிலைகள் சிறந்தவை. எல்லா பிராணயாமப் பயிற்சிகளையும் ஏதாவது ஒரு உட்கார்ந்திருக்கும் நிலையில் தான் பயிற்சி செய்ய வேண்டும்.
அப்போது முதுகு, கழுத்து, தலை ஆகியவை நேராக இருக்க வேண்டும். பிராணயாமம் செய்யும் முன் உடலையும், உள்ளத்தையும் அமைதியாக வைத்திருக்க உதவும் சவாசனத்தை செய்து பிறகே பிராணயாமத்தை தொடங்க வேண்டும்.
யோகசானங்கள் செய்வதற்கு பலவித கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆனாலும் சவாசனம் என்ற சாந்தி ஆசனத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு எந்த கட்டுப்பாடுகளுகளும் இல்லை. குறிப்பாக நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சவாசனத்தை செய்வதன் மூலம் நோயின் வலியையும், மனக்குழப்பத்தையும் தணித்துக் கொள்ளலாம். மிகச்சிறந்த ஆசனம் இது.
சுவாச சுத்தி என்ற நாடிசுத்தி !!!

பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே. சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.
அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது. நிதானமும், அமைதியும் வேண்டும்.
காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும். இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும்.
இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன. இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன.
இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது. மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.


Friday, December 5, 2014

உண்மையில் சர்க்கரை என்பது ஒரு நோய் அல்ல.

ஆனால் எந்த நோய்க்கும் மூல காரணம் தெரியாத ஆங்கில மருத்துவம்
ஒவ்வொரு நோய்க்கும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைக்கிறது.
நாமும் சற்றும் சிந்திக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.
முதலில் சர்க்கரை என்பது நோய் அல்ல என்றால்
உடலில் ஏன் சர்க்கரை அதிகரிக்கிறது என்ற கேள்வி வரும்.
சர்க்கரை என்பது நாம் உண்ட உணவு நன்கு செரிமானம் ஆகி
அதில் இருந்து நமக்கு கிடைக்கும் எரிபொருள் ஆகும்.
இதனை குளுகோஸ் என்றும் சொல்கிறோம்
.இந்த குளுகோஸ் நாம் உண்ட உணவில் இருந்து நமக்கு கிடைத்தது என்றும்,
அதுதான் நமது உடலுக்கு சக்தியும் என்பதில் தெளிவாக இருப்போம்.
இவ்வாறு நாம் உண்ட உணவில் இருந்து கிடைத்த ,நமக்கு சக்தி கொடுக்கும்
இந்த குளுக்கோஸை நமது உடலின் அனைத்து செல்களுக்கும்
இரத்தம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இப்படி எடுத்து செல்லப்பட்ட குளுக்கோஸ்
உடலின் தேவைக்கு போக மீதி இருந்தால்
அதனை கிளைகோஜன் ஆக மாற்றி கல்லீரல் சேமித்து வைத்துக்கொள்ளும்.
நன்றாக கவனியுங்கள்,
தசை,தசை நார் ஆகியவைளை பராமரிப்பதும் கல்லீரலின் பல வேலைகளில் ஒன்று.
கல்லீரல் இந்த கிளைகோஜனை தனது பராமரிப்பில் இருக்கும் தசை மற்றும் தசை நார்களில்
கொண்டு சேமிக்க்த்து வைக்கிறது.
பின்பு எப்போதாவது உங்கள் உடலுக்கு தேவைப்படும் சமயத்தில்
அந்த கிளைகொஜன் மீண்டும் சர்க்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு பயன்படுத்தபடுகிறது.
இதில் அதிக சர்க்கரை உடலால் எப்படி பயன்படுத்தப்படுகிறது என பார்த்தோம். மேலும் பார்ப்போம்.
இங்கே ஆங்கில மருத்துவம் சொல்லும் சராசரி என்பது மிகவும் தவறானது.
அதன் அடிப்படையில் செல்வது என்பது உடலை பல பாதிப்புகளுக்கு ஆளாக்கிவிடும்.
அதைப்பற்றியும் நாம் இப்போது பார்ப்போம்
அதாவது இரத்ததில் சர்க்கரையின் அளவு இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்பது ஏன்?
என்ற கேள்வியை எழுப்பினால் அங்கே பதில் இருக்காது.
அவர்களுக்குத்தான் எந்த நோய்க்கும் காரணாம் தெரியாது,
அதை குணப்படுத்தவும் முடியாதே.
ஒரு மனிதரை போல் இன்னொருவர் இருப்பது என்பது நடக்காது.
உயரம், நிறம், உருவம், தன்மை,பருமன் என எதுவுமே ஒருவரைபோல் ஒருவர்
அச்சு அசலாக இருக்க முடியாத சூழலில்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மட்டும்
எப்படி ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கவேண்டும் என்பது?
நாம் காலையில், இட்லி சாப்பிட்டால்
அதில் இருந்து நமக்கு கிடைக்கும் சர்க்கரையின் அளவும்,
சப்பாத்தி சாப்பிட்டால்
அதில் இருந்து நமக்கு கிடைக்கும் சர்க்கரையின் அளவும்
, சர்க்கரை பொங்கல் சாப்பிட்டால்
நமக்கு கிடைக்கும் சர்க்கரையின் அளவும் மாறுபடுகிறது அல்லவா?
அப்படி இருக்க
ஒவ்வொரு மனிதனும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப
அவர்கள் உண்ணும் உணவும், அளவும் மாறுபடும் என்பது உண்மைதானே.
அவ்வாறு இருக்க சர்க்கரை மட்டும்
அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை
எப்படி ஒரே அளவாக இருக்க முடியும்?
ஆக இரத்ததில் சர்க்கரையின் அளவு
இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று ஏதும் கட்டுப்படு கிடையாது.
உடலின் தேவையை பொறுத்து சர்க்கரையின் அளவு மாறுபடும் என்பதே உண்மை.
உங்களுக்கு தேவைப்படும் சர்க்கரையின் அளவௌ உங்கள் உடல் தீர்மானம் செய்து
, நீங்கள் உண்ட உணவில் இருந்து சர்க்கரையை தயாரித்துக்கொள்ளும்.
அதை நீங்கள் கட்டுப்படுத்தினால்
உங்கள் உடலுக்கு தேவையான அளவு சர்க்கரை கிடைக்காமல்
உடல் பலவீனம் அடையும்
.இதனை நீங்கள் சர்க்கரைக்கு தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு வருபவர்களிடம் பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.
ஆங்கில மருந்துகள் பக்கவிளைவுகள் உடையது ,
நான் சித்தா , மூலிகை மருந்துகளைதானே எடுத்துக்கொள்கிறேன் என்றாலும்
இரத்ததில் உள்ள,உடல் தனக்கு தேவை என்று தயாரித்துவைத்திருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தினால் நிச்சயம் உடல் பலகீனம் அடையும்.
மனதில் பயம், படபடப்பு எற்படும் போது
உங்கள் சிறுநீரகத்தில் உள்ள அட்ரீனல் சுரப்பியில் இருந்து,அட்ரீனலின் வெளிப்படும்
என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
அப்போது கணையம் அதன் இன்சுலினை நிறுத்திவிடும்.
மீண்டும் உங்கள் மனநிலை இயல்பு நிலைக்கு மாறும்போது
கணையம் மீண்டும் இன்சுலினை கொடுக்க ஆரம்பிக்கும்.
இபோதும் சர்க்கரையின் அளவு அதிகமாக காண்பிக்கும்.
இது நிரந்தரமான நிலை இல்லை.
தற்காலிகமானதே.
உடலில் எந்தமாதிரியான தொந்திரவுகள் எற்பட்டாலும்
உடலே அதை சரி செய்துகொள்ளும்.
அந்த சுழலில் உடலின் பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்ய
இரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்
. காரணம் சர்க்கரை என்பது உடலின் செல்களுக்கான சக்தி என்று பார்த்தோமே.
பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்ய தேவையான சர்க்கரையை
உடல் உற்பத்தி செய்யும்.
அதை எந்த நோய்க்கும் மூலகாரணாம் தெரியாத ஆங்கில மருத்துவம்
சர்க்கரை என்று பயமுறுத்தி
அதை கட்டுப்படுத்தி
நம்மை மேலும் மேலும் பலகீனம் அடைய செய்கிறது
என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.
சரிங்க சார் ,
நீங்க சொல்வது சரி.
ஆனால் அதிகமாக சிறுநீர் கழிகிறதே?
இங்கேதான் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.
உடல் தனக்கு தேவை இல்லாதவற்றை உடலில் வைத்துக்கொள்ளாது.
நல்லவைகளை தன்னுள் வைத்துக்கொள்ளும்.
இந்த தன்மையான உடல் எப்படி அதிகமாக இருந்த குளுக்கோஸை கிளைகோஜனாக மாற்றி தன்னுள் சேகரித்துவைத்ததோ ,
அதனை அவசர காலங்களில் பயன்படுத்திக்கொள்கிறதோ
அதுபோல, இதே குளுகோஸின் தரத்தை அறிந்து
அதை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
குளுக்கோளில் தரமா?
என்றால் , ஆம். தரம் என்று ஒன்று உண்டு.
நமது உடலில் சக்தி குறையும்போது அதனை ஈடு செய்ய
உடலானது நமக்கு பசி என்ற உணர்வை கொடுக்கிறது.
அந்த சமயத்தில் நாம் உடலுக்கு நல்ல உணவுகளை கொடுத்து,
வாயால் நன்றாக அரைத்து
உமிழ்நீருடன் கலந்து
வயிற்றுக்குள் அனுப்பினால், அ
ங்கே அதை செரிமானம் செய்யும்
மற்ற திரவங்களும் கலந்து
நன்றாக செரிமானம் நடந்து
அதில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரை
தரமான குளுக்கோஸ்.
இதனை உடல் ஏற்றுக்கொள்ள,
தரத்தை நிர்ணயம் செய்ய
கணையம் இன்சுலினை உற்பத்தி செய்கிறது.
இந்த குளுக்கோஸ் உடல் முழுதும் எடுத்து செல்லப்பட்டு
பயன்படுத்தப்படுகிறது
.மீதமானவை கிளைகோஜனாக மாற்றப்பட்டு
உடலில் சேகரிக்கிறது.
அதேபோல் முறையான பசி இல்லாத போது
, நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, நன்றாக வாயில் அரைக்கப்படாமல்
, நன்கு உமிழ்நீருடன் நன்றாக கலக்காமல்
வயிற்றுக்குள் அனுப்பப்படும்போது
அங்கே, செரிமாண சுரபிகளில் இருந்து கிடைக்கும் சுரப்புகளும் கிடைக்காமல்
உருவாகும் குளுக்கோஸ்
தரம் குறைந்த குளுக்கோஸ்
. இதனால் உடலுக்கு தீங்கு என்பதால்
உடலே அதனை சிறுநீர்மூலம் வெளியேற்றுகிறது.
இதற்கும் நாம் பயம் கொள்ள வேண்டியது இல்லை.
ஆனால் இவ்வாறு தரம் குறைந்த குளுக்கோஸ்
நமது உடலில் இருந்து வெளியேரும் போது
உடலுக்கு சரியான குளுகோஸ் கிடைக்காமல் பலவினம் அடையும்.
அதனால் ஏற்படும் தொந்திரவுகளுக்கு
நாம் அலோபதியை நாடும்போதும்
அவர்கள் சர்க்கரையின் அளவை பார்த்து
அதை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில்
மருந்துகளை கொடுத்து
உடல் வெளியேற்றும் கழிவான தரம் குறைந்த குளுக்கோஸை
உடலிலேயே தங்க செய்கிறது.
இது மேலும் உடல் பலவீனம் அடையும்.
அதுபோல் இந்த மருந்துகள்
கணையத்தை தட்டிதட்டி
அதில் இருந்து இன்சுலினை வலுக்கட்டாயமாக எடுப்பதால்,
கணையம் நிரந்தரமாக செயலிழக்கிறது.
இதுவரை தேவைக்கு ஏற்ப இன்சுலினை வழங்கிவந்த கணையம்
பாதிக்கபட்டபின் ,
இன்சுலின் ஆனது ஊசிமூலம் கொடுக்கப்படுகிறது.
இது மிண்டும் நமது உடலின் உறுப்புகளை பதம்பார்க்கிறது.
முதலில் உடலின் தேவைக்காக
அதிகரிக்கும் சர்க்கரையை மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்துகிறோம்.
அதனால் உடலுக்கு தேவைப்படும் சக்தி கிடைகாமல்
நமது உடலும், உடல் உறுப்புகளும் பலவீனம் அடைந்து
தொடர்ந்து உடல் மோசமாகும்.
தேவை இல்லை என்ற கழிவை உடலில் இருந்து உடல் வெளியேற்றுவதையும்
உடலில் தங்கச்செய்து மீண்டும் உடலை பலவினப்படுத்துவதும் தவறு.
சரி என்ன செய்ய?
எப்போது பசி எடுக்கிறதோ
,அப்போது உங்கள் மனதிற்கு பிடித்த உணவுகளை
நன்றாக ருசித்து,
மென்று,
உமிழ்நீருடன் கலந்து
சாப்பிடுங்கள்.
தாகம் எடுக்கும்போது
நன்றாக சப்பி உதடும்,நாக்கும் நனையுமாறு நீர் பருகுங்கள்.
உடல் ஓய்வுகேட்கும்போது ஓய்வும்,
தூக்கம் கேட்கும்போது தூக்கமும் கொடுங்கள்.
உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அன்புடன்
பொன்.தங்கராஜ்
நன்றி
Healer Baskar anatomictherapy

காயத்ரி மந்திரத்தின் மகிமை

வேதங்களின் தாயே காயத்ரி. பசுவின் பாலை விடச் சிறந்த உணவு கிடையாது. அதுபோல காயத்ரி மந்திரத்தை விடச் சிறந்த மந்திரம் வேறில்லை. காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை சவிதா. விஸ்வாமித்திரரே ரிஷி. அதிகாலைப் பொழுதில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். நீராடியபின் ஜெபிப்பது சிறப்பு.
முடியாவிட்டால் பல்தேய்த்து கால், கைகளை சுத்தம் செய்துவிட்டு சொல்லத் தொடங்கலாம்.
இந்த மந்திரத்தை தெளிவாகவும், தவறின்றியும் உச்சரிப்பது சிறப்பு. முடியாவிட்டால், இதன் பொருளை மனப்பாடமாக்கிக் கொண்டு தொடர்ந்து சொல்லி வரலாம்.
இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தால் நம் மனத்தூய்மை பெருகும். மனம், வலிமை பெறும். ஞாபக சக்தி அபரிமிதமாகும்.
காயத்ரி சொல்லும்போது எந்தவொரு இஷ்ட தெய்வத்தையும் மனதில் தியானிக்கலாம். காயத்ரி பெண் தேவதை என்பதால் சக்தி வழிபாட்டுக்குரியதாக பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் யாராக இருந்தாலும், நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை ஜெபித்து வந்தால் நன்மை பல பெறலாம்.
“ஓம் பூர்புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நஹ் ப்ரசோதயாத்”
- ஐந்து முக தெய்வமான அன்னை காயத்ரியை வணங்க நாம் பயன்படுத்தும் மந்திரம் இது.
பொருள்
`எல்லா பாவங்களையும், அறியாமையையும் போக்குகிறவரும், வணங்குவதற்குரியவரும், இவ்வுலகத்தைப் படைத்த கடவுளையும், அவரது புகழையும் தியானிப்போமாக. அவர் நம் புத்தியை வழிநடத்துவாராக’ என்பதுதான், இதன் பொருள்.
http://saanthai.blogspot.in/

Thursday, November 20, 2014

வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?

வேண்டாம் இந்தச் சூதாட்டம்’
என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச்
செய்யவில்லை?கிருஷ்ணன்
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம்
முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து,
தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர்
உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென
நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம்
கேட்டதில்லை. துவாபரயுகத்தில்,
தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்,
உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த
அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும்,
நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.ஆனால்,
நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.
ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும்
ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க
நினைக்கிறேன்" என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,
சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக்
கவனித்து வந்த உத்தவருக்கு, சொல் ஒன்றும்,
செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள்,
புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான
காரண, காரியங்களைத் தெரிந்து கொள்ள
விரும்பினார். "பெருமானே! நீ வாழச் சொன்ன
வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ
நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற
பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப்
புரியாத விஷயங்கள் பல உண்டு.
அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய
ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?"
என்றார் உத்தவர்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில்
எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ
பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள்
ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும்
நன்கறிந்த ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்’
என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்பட,
முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம்
அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை?போக
ட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம்
அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,
வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை. தருமன்
செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்;
தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத்
தண்டனையாக,
அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ
சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை.
'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்
வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும்
திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான்
துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக
சக்தியால், அந்த பொய்யான பகடைக் காய்கள்
தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம். அதையும்
செய்யவில்லை. மாறாக, திரௌபதியின்
துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும்
நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில்
தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’
என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான்
ஒருவன், குலமகள் சிகையைப்
பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர்
முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த
பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது?
எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?
ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த
நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ
செய்தது தருமமா?';'; என்று கண்ணீர் மல்கக்
கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று;
மகாபாரதம் படித்துவிட்டு நாம்
அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.
நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம்
கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம்
உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம
நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம்
தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன்
தோற்றான்" என்றான் கண்ணன். உத்தவர் ஏதும்
புரியாது திகைத்து நிற்க, கண்ணன்
தொடர்ந்தான்.
"துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது.
ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும்,
ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான்
வைக்கிறேன். என் மாமா சகுனி,
பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான்
துரியோதனன். அது விவேகம்.தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,
'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என்
சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்'
என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும்
நானும் சூதாடியிருந்தால், யார்
ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும்
எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக்
காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,
அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான்
போட முடியாதா? போகட்டும். தருமன்
என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள
மறந்துவிட்டான்
என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால்,
அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும்
தவறையும் செய்தான். 'ஐயோ! விதிவசத்தால்
சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த
விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும்
தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும்
சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க
வேண்டும்’ என்றுவேண்டிக் கொண்டான்.
என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு,
அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான்
அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான
்.யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக்
கூப்பிட
மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில்
காத்துக்கொண்டு நின்றேன்.பீமனையும்,
அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும்
வைத்து இழந்தபோது, அவர்களும்
துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள்
கதியை எண்ணி நொந்து கொண்டும்
இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட
மறந்துவிட்டார்களே!
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன்
சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக்
கூப்பிட்டாளா? இல்லை. அவளும்
தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து,
வாதங்கள்செய்து கொண்டிருந்தாளே ஒழிய,
என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..
துச்சாதனன் துகிலுரித்த போதும்
தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி...
அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல்
கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய
மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான்
எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும்
சென்றேன். அவள் மானத்தைக் காக்க
வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன
தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
"அருமையான விளக்கம் கண்ணா!
அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை.
உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"
என்றார் உத்தவர்.
"கேள்" என்றான் கண்ணன்.
"அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ
வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட,
ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ
வரமாட்டாயா?" புன்னகைத்தான் கண்ணன்.
"உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம
வினைப்படி அமைகிறது. நான்
அதை நடத்துவதும் இல்லை; அதில்
குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும்
'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில்
நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.
"நன்றாயிருக்கிறது கிருஷ்ணா!
அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள்
செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக்
கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத்
தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக்
குவித்து, துன்பங்களை அனுபவித்துக்
கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?"
என்றார் உத்தவர்.
"உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின்
உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள்.
நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள்
உணரும் போது, உங்களால்
தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச்
செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்
போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச்
செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள்
நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத்
தெரியாமல் சூதாடலாம் என்று தருமன்
நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.
நான் சாட்சி பூதமாக எப்போதும்,
எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன்
உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும்
அல்லவா?" என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில்
ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்!
எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப் பூஜிப்பதும்,
பிரார்த்தனை செய்வதும்,
அவனை உதவிக்கு அழைக்கும் ஓர்
உணர்வுதானே! "அவனின்றி ஓர் அணுவும்
அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில்
நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?
அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற
முடியும்? இந்த தத்துவத்தைதான்
பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச்
செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன்
இடத்தில் தானே நின்று அவனுக்காகப்
போராடவில்லை

Wednesday, November 19, 2014

கடவுளை தாயாகக் கருதுங்கள்

ராஜாஜி
* இறைவனின் தரிசனம் சாஸ்திரம் படித்தால் மட்டும் கிடைத்துவிடாது. ஆண்டவன் அருள் இருந்தால் தான் அது கிடைக்கும். அதற்கு மனம் கரைந்து உருகவேண்டும். பக்தியால் மனம் பழுக்க வேண்டும்.
* காலையில் எழும்போது, கொஞ்சம் தியானம் செய்துவிட்டு எழுங்கள். எந்த நிலையில் வேண்டுமானாலும் தியானம் கைகூடும். அதற்கு வேண்டியது உளப்பூர்வமான பக்தி மட்டுமே.
* ""இறைவா! என் உள்ளத்தை காத்தருள்வாயாக. நீ கோயில் கொள்ளத் தகுந்த இடமாக மனத்தூய்மையுடன் இருக்க அருள்புரிவாயாக!'' என்று மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்.
* கடவுளைத் தந்தையாக, தாயாக, எஜமானாக, குழந்தை யாக எப்படி வேண்டுமானாலும் கருதி வழிபாடு செய்யலாம். தாயாகக் கருதி வழிபாடு செய்வது மிகவும் உத்தமமானது.
* இரவு தூங்கச் செல்லும்முன், ""இன்று நான் செய்த குற்றங்கள் இத்துடன் தீர்ந்து போகட்டும். இனிமேல் நான் இந்த குற்றத்தைச் செய்ய மாட்டேன்,'' என்று உள்ளம் உருகி வேண்டினால், இறைவன் நிச்சயம் மன்னிப்பான்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்...


4. சர்வ சக்தி வாய்ந்த கடவுளுடைய அருள் வந்தடையும் போது ஒவ்வொருவனும் தன் குற்றத்தைக் காண்பான். இதனை அறிந்து நீ வீணாகத் தர்க்கம் செய்யாதே.
5. இறைவன் திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு மயிர்க்கூச்செடுத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுமோ அவனுக்கு அது தான் கடைசிப் பிறவி.
6. படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகினுள் நுழையக் கூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக் கூடாது.
7. சம்சார வாழ்க்கையில் இருந்தால் என்ன? அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணம் செய்து அவனிடம் சரணமடைந்து விடு. அதன் பிறகு உனக்கு எவ்விதக் கஷ்டமும் இருக்காது. யாவும் அவனது அருளாலே நடை பெறுகிறது என்பதை அறிவாய்.
8. காந்த ஊசி எப்போதும் வடக்குத் திசையையே காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போக மாட்டான்.
9. வீடு கட்டும் போது சாரம் அவசியம். ஆனால் வீடு கட்டி முடித்து விட்டால் சாரத்தைத் தேடுபவர் யாருமில்லை. அது போல ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. பின்னர் அவசியமில்லை.
10. ஒருவர் சிரமப்பட்டு விறகும், பிறவும் தேடி நெருப்பு உண்டாக்குகின்றார். அதன் உதவியால் பலர் குளிர் காய்கின்றனர். அது போல மிகவும் சிரமப்பட்டுத் தவம் செய்து இறைவனை அடைந்த மகான்களோடு பழகுவதால் பலர் இறைவனிடத்தில் சுலபமாக மனத்தை வைக்க முடிகிறது.
கபிலன் @ http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=70582.0

Sunday, November 16, 2014

108 சிவன் போற்றி !!!!

ஓம் அப்பா போற்றி 
ஓம் அரனே போற்றி
ஓம் அரசே போற்றி
ஓம் அமுதே போற்றி
ஓம் அழகே போற்றி
ஓம் அத்தா போற்றி
ஓம் அற்புதா போற்றி
ஓம் அறிவா போற்றி
ஓம் அம்பலா போற்றி
ஓம் அரியோய் போற்றி
ஓம் அருந்தவா போற்றி
ஓம் அணுவே போற்றி
ஓம் அண்டா போற்றி
ஓம் ஆதியே போற்றி
ஓம் ஆறங்கா போற்றி
ஓம் ஆரமுதே போற்றி
ஓம் ஆரணா போற்றி
ஓம் ஆலவாயா போற்றி
ஓம் ஆரூரா போற்றி
ஓம் இறைவா போற்றி
ஓம் இடபா போற்றி
ஓம் இன்பா போற்றி
ஓம் ஈசா போற்றி
ஓம் உடையாய் போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் உயிரே போற்றி
ஓம் ஊழியே போற்றி
ஓம் எண்ணே போற்றி
ஓம் எழுத்தே போற்றி
ஓம் எண்குணா போற்றி
ஓம் எழிலா போற்றி
ஓம் எளியா போற்றி
ஓம் ஏகா போற்றி
ஓம் ஏழிசையே போற்றி
ஓம் ஏகாந்தா போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் ஒருவனே போற்றி
ஓம் ஒப்பிலா போற்றி
ஓம் ஒளியே போற்றி
ஓம் ஒலியே போற்றி
ஓம் ஓங்காரா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் கதிரே போற்றி
ஓம் கனியே போற்றி
ஓம் கலையே போற்றி
ஓம் காருண்யா போற்றி
ஓம் குறியே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் குணமே போற்றி
ஓம் கூத்தா போற்றி
ஓம் கடையே போற்றி
ஓம் சங்கரா போற்றி
ஓம் சதுரா போற்றி
ஓம் சதாசிவா போற்றி
ஓம் சிவமே போற்றி
ஓம் சிறமே போற்றி
ஓம் சித்தமே போற்றி
ஓம் சீரா போற்றி
ஓம் சுடரே போற்றி
ஓம் சுந்தரா போற்றி
ஓம் செல்வா போற்றி
ஓம் செங்கணா போற்றி
ஓம் செம்பொணா போற்றி
ஓம் சொல்லே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞானமே போற்றி
ஓம் தமிழே போற்றி
ஓம் தத்துவா போற்றி
ஓம் தலைவா போற்றி
ஓம் தந்தையே போற்றி
ஓம் தாயே போற்றி
ஓம் தாண்டவா போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திசையே போற்றி
ஓம் திரிசூலா போற்றி
ஓம் துணையே போற்றி
ஓம் தெளிவே போற்றி
ஓம் தேவ தேவா போற்றி
ஓம் தோழா போற்றி
ஓம் நமசிவாயா போற்றி
ஓம் நண்பா போற்றி
ஓம் நஞ்சுண்டா போற்றி
ஓம் நன்மறையா போற்றி
ஓம் நிறைவா போற்றி
ஓம் நினைவே போற்றி
ஓம் நீலகண்டா போற்றி
ஓம் நெறியே போற்றி
ஓம் பண்ணே போற்றி
ஓம் பித்தா போற்றி
ஓம் புனிதா போற்றி
ஓம் புராணா போற்றி
ஓம் பெரியோய் போற்றி
ஓம் பொருளே போற்றி
ஓம் பொங்கரவா போற்றி
ஓம் மணியே போற்றி
ஓம் மதிசூடியே போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் மலையே போற்றி
ஓம் மஞ்சா போற்றி
ஓம் மணாளா போற்றி
ஓம் மெய்யே போற்றி
ஓம் முகிலே போற்றி
ஓம் முத்தா போற்றி
ஓம் முதல்வா போற்றி
ஓம் வாழ்வே போற்றி
ஓம் வைப்பே போற்றி
ஓம் சிவபிரானே போற்றி ! போற்றி!

Tuesday, November 11, 2014

பஞ்சாட்சரம் மூன்று விதம்

மூன்று வித பஞ்சாட்சரம்
ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய
சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம
காரணபஞ்சாட்சரம் - சிவ சிவ
ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய
நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை
ந – நிலத்தைக் குறிக்கிறது,
ம – நீரைக் குறிக்கிறது,
சி – நெருப்பைக் குறிக்கிறது,
வ – காற்றைக் குறிக்கிறது,
ய – ஆகாயத்தைக் குறிக்கிறது
ந - கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி
ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, கருப்பு நிறம், அத்திரி மகரிஷி
சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி
வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி
ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது, சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி
சூட்சும பஞ்சாட்சரம்
சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.
அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”
“சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”
திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”
“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...”
காரண பஞ்சாட்சரம்
சிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.
“சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவ கதி தானே”

விநாயகர் மந்திரத்தை திரும்ப திரும்ப ஜபித்தால்!!!!

பிருகு முனிவர், மன்னர் படும் துன்பத்தை பார்த்து கலங்கி, “அரசே நான் கூறும் விநாயகர்
மந்திரத்தை திரும்ப திரும்ப ஜபித்தால் இந்த உருவம் நீங்கி .பழையபடி நல்ல சுந்தரமான அம்சத்தை பெறுவீர்கள்.” என்றார்.
அந்த மந்திரம் –
ஓம் சுமுகாய நம
ஓம் ஏக தந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்கினராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்பகன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வாய நம!
பிருகு முனிவர் கூறிய இந்த அற்புத விநாயகர் மந்திரத்தை அப்படியே சொன்னார் சோமகாந்த மன்னர். இதை பல தடவை நம்பிக்கையுடன் சொல்லி வந்தார்.
என்ன ஆச்சரியம்… மன்னரின் உடலில் இருந்து இத்தனை வருடம் ஆட்டி படைத்த நோய் சில வாரங்களிலேயே படிபடியாக நீங்கி பழைய சுந்தரமான உருவத்தை பெற்றார்.
உடலில் ஏதாவது ஆறாத காயமோ அல்லது உடலில் ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தாலும், இந்த விநாயகர் மந்திரத்தை கூறினால் பாதகம் இல்லாமல் நல்லபடியாகவே குணம் ஆகும்

Saturday, November 8, 2014

தினசரி வாழ்வில் நான்கு படிகள்

நான்கு வகை சாக்கிரம்.
ஒவ்வொருவரும் தினம் தினம் கீழ்கண்ட நான்கு நிலைகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி சிந்திக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதைப் பற்றி சற்று புரிந்து கொண்டாள் வாசி, சிவ யோகம் போன்ற வற்றை புரிந்து கொள்ளுவது மிகவும் எளிது.
நனவு
ஞானேந்திரம் 5
கர்மேந்திரம். 5
காற்று 10
அந்தக்கரணம் 4
புருடன் 1
ஆக 25 தத்துவங்கள் தொழில் படுதல்.
சொப்பனம். கனவு .
காற்று 10
அந்தக்கரணம் 4
புருடன் 1
ஆக 15 தத்துவங்கள் தொழில் படுதல்.
உறக்கம், சுழுத்தி.
அந்தக்கரணம் 4
புருடன் 1
ஆக 5 தத்துவங்கள் தொ ழில் படுதல்
துரியம்
புருடன் 1
ஆக ஒரு தத்துவமட்டும் தொழில் படுதல்
ஒரு பாதையுமின்றி தானாயிருப்பது பிரமம். பிரமம் மாயையாகிய அவித்தையிற் பிரதிபலித்த போது சீவன். சீவன் அவித்தையிற் கூடிய போது சுழுத்தி. சுழுத்தி அந்தகரனத்தில் கூடில் சொப்பனம். சொப்பனம் ஐந்து இந்திரியத்தில் கூடில் சாக்கிரம். சாக்கிரம் 96 தத்துவங்களுடன் கூடில் விவகாரம்.
இது மனித வாழ்க்கையின் தொடக்கம், நிலைப்பு, மறைவாகும்.
ஒரு மனிதன் வாசி யோகம் என்ற மடை மாற்றம் செய்தால், கடவுள் நிலை அடையலாம். அதற்கிடையில் எல்லா ஆற்றல்களையும் அடையலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
http://siddharulagam.blogspot.in/