Monday, August 31, 2015

ஆயிரத்து 550 ரூபாயில் திருப்பதி தரிசனம் ! IRCTC வழங்கும் சூப்பர் சேவை !!!


ஆயிரத்து 550 ரூபாயில் திருப்பதி தரிசனம் ! IRCTC வழங்கும் சூப்பர் சேவை !!!
உங்கள் குடும்பத்தினர் 12 பேர் அல்லது நண்பர்கள், உறவினர்கள் 12 பேர் சென்னையில் இருந்து திருப்பதி திருமலைக்குச் சென்றுவிட்டு வரவேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? ரயில் பயணம் அல்லது பேருந்துப் பயணம் ஆகியவற்றுக்கு புக் செய்யவேண்டும். அதற்கு முன்னர் தரிசனத்துக்கு புக் செய்ய வேண்டும். ரயிலில் போனால் அங்கிருந்து திருமலைக்குப் பஸ் பிடித்துப் போகவேண்டும் என மலைக்க வைக்கும் பலவற்றை மனதில் போட்டு குழப்பிக்கொண்டிருக்க சரி அடுத்த முறை போய்க்கொள்ளலாம் என தள்ளிப்போடும் சம்பவமும் நடக்கும்.
இதற்கெல்லாம் சிம்பிளாக ஒரு தீர்வைத் தருகிறது இந்திய ரயில்வேயின் சுற்றுலாக் கழகம். (Indian Railway Catering and Tourism Corporation) 12 பேர் சேர்ந்தாகிவிட்டது அடுத்து என்ன செய்யலாம்.
சிம்பிள்..IRCTC சுற்றுலாக்கழகத்தின் சென்னை எண் 90031 40681 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு 12 பேர் இந்த தேதியில் சென்று வர விரும்புகிறோம் என்று சொன்னவுடன் அடுத்தது புக்கிங் ஃபார்மாலிட்டிஸ் இருக்கும்.
ஒருவருக்கு 1550 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். குளிர்சாதன வசதி கொண்ட ஒரு டெம்போ டிராவலர் உங்கள் 12 பேரையும் ஏற்றிக்கொண்டு உதாரணத்திற்கு சென்னையில் காலை 5 மணிக்கு புறப்படுகிறது என்றால் ஆந்திர எல்லையில் சுமார் 7 மணிக்கு ஒரு சின்ன பிரேக். அதில் டீயோ, காஃபியோ குடித்துவிட்டு வேனில் ஏறி உட்கார்ந்தால் போதும் சரியாக 8.30 மணிக்கு கீழ் திருப்பதியில் ஒரு ஓட்டலில் காலை தரமான உணவு. இட்லி, குட்டி கல்தோசை, பொங்கல், வடை என ருசியான உணவு.
அதையடுத்து மலைக்கு அழைத்துச்செல்லும் IRCTC சுமார் 11 மணிக்கு எல்லாம் 300 ரூபாய் கட்டண வழியில் உங்களை தரிசனம் செய்ய அனுப்பும். அளவான கூட்டமாக இருந்தால் 1 மணிக்கெல்லாம் தரிசனத்தை முடித்துக்கொண்டு உடனடியாக கீழ்த் திருப்பதி வந்தபின் அதே ஓட்டலில் மதிய உணவு.
முடி காணிக்கை செலுத்தவும் IRCTC பணியாளர்களே நேரடியாக அழைத்துச்சென்று காணிக்கை செலுத்த விரைந்து ஏற்பாடுகள் செய்கின்றனர். முடித்தவுடன் அடுத்ததாக அலர்மேலு மங்காபுரம். அங்கு தரிசனம் முடித்தவுடன் புறப்பட்டால் 7 அல்லது 7.30 மணிக்கு உங்களை சென்னையில் இறக்கி விட்டுவிடுவார்கள்.
காலை உணவு, மதிய உணவு, 300 ரூபாய் தரிசன கட்டணம் ஆகியவையும் 1550க்குள் அடங்கும்.மேலும், தரிசன கட்டணத்துக்கு உண்டான லட்டுக்களுக்காக நீங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை IRCTC பணியாளர்கள் அதை வாங்கி வைத்திருந்து தரிசனம் முடித்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது உங்கள் கைகளில் கொடுத்துவிடுகின்றனர். . சரி தரிசனம் முடிய நேரம் ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமே தேவையில்லை. தரிசனம் முடியும்வரை அந்த வேன் காத்திருந்து சென்னையில் இறக்கிவிடும்வரை IRCTC உங்களுடனே பயணிக்கிறது.
பாதுகாப்பான பயணம், சிக்கனம், டென்சன் இல்லாத ஒரு திருப்(ப)தி டிரிப் என அசத்துகிறது IRCTC.
இதுபற்றிய விவரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட ஐஆர்டிசியின் ரவீந்திரன் திருப்பதி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் எந்த சுற்றுலாத்தலத்திற்கும் இதே போல சிறப்பு ஏற்பாடுகளை செய்து தர IRCTC காத்திருப்பதாகக் கூறினார்...!!

விநாயகரின் மூல மந்திரம் !!!

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.
அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது.
கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.
கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும்.அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று. மாசி மாதம் வரும் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையன்று(தகுந்த ஜோதிடரை அணுகி உரிய நாளை அறிக) துவங்கி ஓராண்டு சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.இதனை செவ்வாய்க் கிரக அதிபதி பின்பற்றினார்.
உச்சிஷ்ட கணபதி மந்திரம்
ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா
வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.
கடன் தீர கணபதி மந்திரம்
ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா
கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.(நமது நாட்டின் கடன் தீர யாராவது இதைச் செய்யலாமே!!!)
மஹாஹஸ்தி விநாயகர்
பெரிய்ய்ய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.
அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.
ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
மஹாஹஸ்தி தக்ஷ்ணேன
வாஞ்சா கல்பலதா கணபதி
நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.
பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் கஏஈ லஹ்ரீம்
தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத்
ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா
http://sssjna.blogspot.in/2014/02/blog-post_8154.html

Saturday, August 29, 2015

பித்ரு வழிபாடு கேள்வி - பதில்



1. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடு எது?
பித்ரு வழிபாடு
2. பித்ரு வழிபாடு என்றால் என்ன?
இறந்த நம் முன்னோர்களை வழிபாடு செய்வதே பித்ரு வழிபாடு ஆகும்.
3. பித்ரு வழிபாடு செய்வதன் முக்கியத்துவம் என்ன?
எல்லா வழிபாடுகளுக்கும் முதன்மையானது பித்ரு வழிபாடு ஆகும். பித்ரு வழிபாடு முடிந்த பின்னரே மற்ற வழிபாடுகள் நடைபெற வேண்டும்.
4. பித்ரு வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும்?
நம் நலனில் அக்கறை கொண்ட பித்ருக்கள் பசியில்லாமல் ஒளியுலகில் இன்புற்றிருக்க பித்ரு வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்.
5. பித்ரு வழிபாட்டை யாரெல்லாம் செய்யலாம்?
இனம், மதம், மொழி, சாதி வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் பித்ரு வழிபாடு செய்யலாம்.
6. பித்ரு வழிபாட்டை தந்தை உயிரோடு இருக்கும் போது செய்யலாமா?
தாராளமாக செய்யலாம். இறந்த முன்னோர்கள் தன் பசியாற நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக நம் தாத்தா அவரது மகன் உணவளித்தால் தான் சாப்பிடுவாரா? இல்லையே. அவரது பேரப்பிள்ளைகள் நாம் உணவளித்தாலும் சாப்பிடுவார்.
7. பித்ரு வழிபாட்டை பெண்கள் செய்யலாமா?
தாராளமாக செய்யலாம். அமாவாசை முடிவதற்குள் ராமன் பித்ரு வழிபாடு செய்ய இயலவில்லை. அதற்குள் சீதாதேவி பித்ரு வழிபாட்டை செய்து முடித்தார். ராமன் மீண்டும் பித்ரு வழிபாடு செய்ய தொடங்க தசரதர் அசரீரீயாக தாம் சீதாதேவி கொடுத்த எள் நீரால் பசியாறி விட்டதாக கூறினாராம். இதனை ராமாயணம் உறுதி கூறுகிறது.
8. பித்ரு வழிபாட்டை எங்கே செய்வது சிறப்பு?
கோவில்கள், நதிக்கரைகள், குளக்கரைகள், கடற்கரைகள், புண்ணிய தீர்த்தங்கள், ஜீவ சமாதிகள் ஆகிய இடங்களில் செய்யலாம்.
9. பித்ரு வழிபாட்டை செய்ய சிறப்பான இடம் எது?
இவ்வுலகில் பித்ரு வழிபாடு செய்ய எத்தனையோ இடங்கள் இருப்பினும் திருவண்ணாமலையில் செய்யும் பித்ரு வழிபாடு 1000 மடங்கு பலன் தரக்கூடியது. பித்ரு வழிபாடு செய்ய திருவண்ணாமலையை விட சிறந்த இடம் உலகில் இல்லை. அண்ணாமலையாரே வல்லாள மகாராசருக்கு பித்ரு கடன் தீர்த்த இடமான பள்ளிகொண்டாப்பட்டு (திருவண்ணாமலையிலிருந்து 5 கிமீ தொலைவில்) என்னும் ஊர் மிகவும் சிறப்பானது. அண்ணாமலையாரே பித்ரு கடன் தீர்த்த இடத்தை விட சிறப்பான இடம் உலகில் இருக்க முடியாது. இது அகத்தியர் வாக்கு.
10. பித்ரு வழிபாட்டை எப்போது செய்யலாம்?
மாதப்பிறப்பு, அயன பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண காலங்கள், அமாவாசை திதி ஆகிய காலங்களில் பித்ரு வழிபாட்டை செய்யலாம். கோவில் தலங்களில் செய்யும் பொது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். கோவில் தலங்களுக்கு காலவரையறை இல்லை.
11. பித்ரு வழிபாட்டில் இடம் பெற வேண்டிய பொருட்கள் யாவை?
தர்ப்பை, சுத்தமான நீர், கருப்பு எள் (ஆண்களுக்கு), வெள்ளை எள் (பெண்களுக்கு), ருத்திராட்சம், சங்கு ஆகியன.
12. பித்ரு வழிபாட்டில் எந்த மந்திரங்களை பயன்படுத்த வேண்டும்?
வடமொழி அல்லது தமிழ் மந்திரங்களை பயன்படுத்தலாம். தமிழ் மந்திரங்கள் மிகவும் சிறப்பானவை. ஏனெனில் தமிழே மந்திரமொழி ஆகும்.
13. பித்ரு வழிபாடு முடிந்தவுடன் செய்ய வேண்டிய முக்கிய செயல் என்ன?
அன்னதானம் செய்ய வேண்டும்.
14. பித்ரு வழிபாட்டின் பயன்கள் யாவை?
திருமணம், வேலை கிடைத்தல், குழந்தை பாக்கியம், செல்வ செழிப்பு, குடும்ப முன்னேற்றம் இன்னும் பல.
15. பித்ரு வழிபாடு செய்யாவிடில் ஏற்படும் துன்பங்கள் யாவை?
பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபம் உண்டாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!
ஓம் றீங் அண்ணாமலையே போற்றி…!!!
Posted by Senthil Kumar
http://aanmeegachudar.blogspot.in/

குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை !!!



1. பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிட நன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே
2. சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன் குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்த கண்க ளிச்சை கொள்ளு கின்றனவே
3. பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே
4. பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே
5. எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
கண்யே செங்குழவீ யென்றன் கண்க ணாடழகே
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோபிறிது
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ
6. முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ
7. ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்து கொள்ள
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ
8. பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ
9. கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே
10. மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ
நீங்கள் மேலே காண்பது வேற்குழவி வேட்கை பதிகம் ஆகும். இதை நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும் இருக்கலாம். ஆனால் இதன் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.
குழந்தையில்லா தம்பதிகள் இருவரும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 9 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.
நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். எங்கு சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே எடுத்து செல்லாம். முருகன் அருள் கூடவே வந்து நிற்கும்.
தினமும் 1 முறை பாராயணம் செய்யவும். புத்திர தோஷம் நீங்கி குலம் தழைக்கும். குலத்திற்கே பெருமை சேர்க்கும் புத்திரர்கள் தோன்றுவார்கள். நல்ல மக்கட்பேறு பெற்று நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
ஓம் சரவணபவ
ஓம் சிவ சிவ ஓம்

சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்



சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே. இதற்கு காரணம் நமது கர்மவினைகளே. கர்மவினைகளை அழிக்க பல எளிய வழிகள் உண்டு. கர்மவினைகளை அழிக்கும் செயலே இயற்கைக்கு மாறான ஒன்றாகும். நாம் பிறந்த இந்த பூமியானது ஒரு கர்ம பூமி. இதில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே. இந்த கர்மவினைகள் இரண்டாகும். அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும். நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் விதியை மதியால் வெல்லலாம். ஆம் மதி என்பது இங்கே முதலில் சந்திரனையும் பின்பு அதே சொல் நமது அறிவையும் குறிக்கிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்பது திண்ணம். சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருப்பது என்பது நல்ல நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஷட்பல நிர்ணயம் என்றொரு கணக்கீடு இருக்கிறது. அதன் படி சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் விதியை மதியால் வெல்லுவார்.
மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை. இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.
முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி). இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர். பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64 சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும். தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள். இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம்.
தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர். தென் திசையை நோக்குபவர். இவரை வழிபடுவது மிகவும் எளிது. இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே. இவரை வழிபட மனம் அமைதி பெறும். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே. மனநிம்மதியை தருபவரும் இவரே.
“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”
மேற்கண்ட மந்திரம் தட்சணாமூர்த்தியின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. தட்சணாமூர்த்தியின் முன்பு எவ்வித தோஷமும், பாவமும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.
கடைசியாக வருபவர் கர்மவினைகளை தன் பார்வையாலே எரிக்கும் வல்லமை கொண்ட பைரவர் ஆவார். இவரே சிவத்தலத்தில் இறுதி சிவ வடிவம் ஆவார். பைரவர்களுள் சொர்ணபைரவரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். மற்ற அனைத்து பைரவ வடிவங்கள் கோவிலிலோ அல்லது காடுகளிலோ அல்லது மலைகளிலோ வைத்து வழிபடத்தக்கன. பைரவ வடிவம் சிவ வழிபாட்டில் ஏற்படும் கர்மவினை பாதிப்புகளை நீக்க வல்ல வடிவம் ஆகும். பைரவரை தொடர்ந்து வழிபடுவதால் மட்டுமே நாம் செய்யும் சிவ வழிபாட்டின் பலனை அடையமுடியும். பைரவரே நவக்கோள்களின் அதிபதி ஆவார். சிவ வழிபாட்டின் பலனை நமக்கு தருமாறு நவக்கோள்களுக்கு ஆணையிடும் தலைவரும் பைரவரே ஆவார். இவரை வழிபடாமல் இருந்தால் நமக்கு சிவ வழிபாட்டின் பலன் கிடைக்காது.பைரவரே காலத்தையும், காலனையும் வென்றவர். காலகாலர் என்ற பெயரை கொண்டவரும் பைரவரே ஆவார். தெற்கு திசை நோக்கும் பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
பைரவர் சிவபெருமானின் கோபமே உருவான ருத்ர வடிவம். பைரவர் நம்மை நவக்கோள்களின் பாதிப்பிலிருந்து காப்பார். கர்மவினைகளை வேரோடு சாய்ப்பார். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். சிவ வழிபாட்டின் இறுதி நிலையே பைரவர் வழிபாடு ஆகும். எத்தனையோ பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே பைரவர் வழிபாடு செய்கின்றனர். முதலில் காலபைரவரை வழிபாடு செய்யும் அனைவரும் படிப்படியாக சொர்ணபைரவர் வழிபாடும் செய்வார்கள். பின்பு இரண்டு வழிபாடுகளும் தொடர்ந்து செய்வார்கள். இறுதியில் சொர்ணபைரவர் வழிபாடு மட்டும் செய்வார்கள். இது தான் பைரவர் வழிபாட்டின் ரகசியம் ஆகும். தன் கர்ம வினைகளை முற்றிலும் நீக்கி பிறவியில்லா பெருநிலையை அடைய தகுதி படைத்தவர்களே பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்கிறார்கள். கர்மவினைகளை அழித்து முக்தியை அடைகிறார்கள். பைரவரை வழிபாடு செய்வது மிகவும் எளிது.
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ணபைரவாய ஹும் பட் ஸ்வாஹா”
மேற்கண்ட மந்திரம் சொர்ணபைரவரின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். (ஆம் தட்சணாமூர்த்தி சந்நிதியில் தான் செபிக்க வேண்டும்). பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. சொர்ணபைரவரின் அருள் கிட்டினால் சகல தோஷங்களும், பாவங்களும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.
தென்திசை நோக்கும் கடவுள்கள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.
சந்திரனை சூடிய மற்ற கடவுள்கள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.
மந்திர செபம் செய்ய ஏற்ற இடங்கள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
http://aanmeegachudar.blogspot.in/2013/11/blog-post_18.html

மரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி?



மரணத்தை அண்மித்தவர்கள் உடலில் என்னென்ன
அறிகுறிகள் காணப்படும் என்று சித்தர்கள்
சொன்னவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
"நாக்குச் சிவந்து முன்பிறந்த
நன்னீரி னிறம்போல் சிவந்திருக்கும்
தேக்கிக் காயும் தாகமுண்டு
தெளிந்தே வேர்வு சிகமென்னே
ஊக்கி உடலும் நொந்திருக்கும்
உலகோர் அறிய உரைத்தோம்
நாம் பாக்குத் தின்னும் துவர்
வாய் பரிந்தே நாளும் ஏலேன்னே"
- அகத்தியர் நயன விதி -
நாக்கு சிவத்து மூளைக் கட்டுக்கள் முள்போலத்
தோன்றி இரத்தம் போலச் சிவந்திருக்கும்,
காய்ச்சல் குறையாமல் தகிக்கும்,
அளவுக்கதிகமான தாகம் இருக்கும், உடல்
வியர்க்கும் , உடல் முழுதும் வலிப்பது போல்
இருக்கும் , பாக்கு தின்பது போல நாக்கில்
துவர்ப்புச்சுவை தெரியும், இந்த அறிகுறிகள்
தெரிந்தால் ஏழு நாளில் உயிர் துறப்பார்கள்
என்று உலகத்தவர்கள் தெரிந்துகொள்ள
சொல்கிறேன்.
"சிவேத சிவக்கச் சுரமுண்டாம்
சிதற வேர்வை மறுமையுண்டு
நீத நாக்கு பசுத்து முள்ளு
நிறைந்தே வெடித்து ரோகமுண்டாம்
ஓதத்தத் தொண்டை நேரிகுரலாம்
ஒளிசெர்நாளும் பதினைந்தாம்
நாதப் பண்சொல் மொழிமடவாய்
நாடிக் கொள்வாய் நாள்குறியே"
- அகத்தியர் நயன விதி -
உடல் சிவந்து காணப்படும் சுரம் உண்டாகி ,
வியர்வை பெருகும், நாக்கு நிறம் மாறி முள்
போல் முளைகள்
நிறைந்து வெடித்து காணப்பட்டு அதிக
வேதனை தரும், தொண்டை இறுகி குரல்
மாறிவிடும், நாத மொழி பேசும் பெண்ணே இந்த
அறிகுறிகள் கண்டால் பதினைந்து நாளில்
மரணம் என்று அறிந்து கொள்.
"எண்ணியஅவத்தை சொல்வேன்
இனியகை மார்பும் மூக்கும்
நண்ணிய செவியினோடு
நலம்பெற குளிர்ந்து காட்டி
திண்ணமா உச்சி யங்கி
யாயிடிச் சிலேத்தும மோடி
மண்ணினிக் கடிகை ஐந்தில்
மரணமேன்றறிந்து சொல்லே"
- அகத்தியர் நயன விதி -
கை, மார்பு, மூக்கு, காது, முதலான
உறுப்புக்கள் குளிர்ந்து காணப்படும்,
உச்சந்தலையில் இடி இடிப்பது போல
வலி ஏற்படும், சிலேத்தும நாடி மிகுந்து ஓடும்
இவ்வகை அறிகுறிகள் காணப்பட்டால் இந்தப்
புவியில் ஐந்து நாழிகையில் மரணம்
என்று அறிந்துகொள்.
"அறிந்தபின் மமர்ந்து வாத
சிலேத்தும மதிக மாகில்
நிறைந்தோர் வார்த்தை தானும்
நேர்பட வெடிப்பாய் பேசும்
சிறந்திடு முகம்வெளுத்து
மார்ப்பது குடில்போல் சென்றால்
மறந்தனார்க்கடி கைதொண்ணுறா
மளவிலே மரண மெய்யே"
- அகத்தியர் நயன விதி -
பித்த நாடி அடங்கி வாத சிலேத்தும நாடிகள்
அதிகரிக்குமானால், நல்ல மொழிகளைப் பேசும்
நிலையில் இருப்பவர் வார்த்தைகள்
சீற்றத்தோடு அதாவது கோபமானவையாக
இருக்கும், முகம் வெளுக்கும், மார்பானது குழல்
போல் குறுகும், இத்தகு அறிகுறிகள்
தோன்றினால் தொண்ணூறு நாழிகையில் மரணம்
என்று அறிந்துகொள்.

Thursday, August 27, 2015

கேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்!

ஸ்ரீமன் நாராயணீயம் பட்டத்ரி தன் நோய் தீர்க்க குருவாயூரப்பனை நோக்கிப் பாடியது. நாராயணீயம் பாடி முடித்தவுடன் நோயும் தீரப் பெற்றார் என்பதும் சரித்திரம். இவர் மட்டுமல்லாமல் இன்னும் பலபேரும் இது போல நாராயணீயத்தைப் பாராயணம் செய்து நோய் தீரப் பெற்று இருக்கிறார்கள். பட்டத்ரியின் வாக்கு அந்த அளவிற்கு தெய்வீகம் மிகுந்த சத்திய வாக்காக உள்ளது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவமே சாட்சி.
காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்த்ர சேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு பெண் கண் கலங்கி அழுதிருக்கிறார். தனக்குக் கேன்ஸர் நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியெல்லாம் தன்னிடம் இல்லை எனவும் அழுதிருக்கிறார்.
கருணையுள்ளம் கொண்ட மகான் அப்பெண்ணை ஆசீர்வதித்து கவலைப் படாதே. நாராயணீயத்திலே எட்டாவது தசகத்திலே அஸ்மின் னு ஆரம்பிக்கிற ஸ்லோகத்தை தினமும் 48 தடவை சொல்லு. இப்படியே 48 நாள் பாராயணம் பண்ணு... என்று அருளியிருக்கிறார்.
தெய்வத்தின் குரலாக அதை ஏற்றுக் கொண்ட அப்பெண்மணி அதே போல 48 நாள் 48 தடவை பாராயணம் செய்திருக்கிறார். பிறகு அவரை சோதித்த மருத்துவர்கள் அதிசயித்துப் போனார்கள், இவ்வாறு மிகப் பலரின் உடல் உபாதைகளையும் தீர்த்த அந்த ஸ்லோகம்.
அஸ்மிந்- பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த- முத்தாபித- பத்மயோனி:
அனந்த பூமா மமரோக ராசிம்
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ
(இன்றுகாலை மதுரையிலிருந்து அன்பர் ஒருவர்,புற்றுநோயால் அவதிப்படும் தன்மனைவியை குணப்படுத்தும் ஆன்மீக வ்ழிபாடு எதுவும் உள்ளதா என்று கேட்டார்.தேடிப்பிடித்து இந்த சுலோகத்தை பகிர்ந்துள்ளேன்.நோயாளிகள் நம்பிக்கையுடன் 48 நாட்கள் இதனை பாரயணம் செய்து நோய் நீங்கலாம்.
அன்புடன் -டாக்டர்.பாஸ்கர் ஜெயராமன் )

Wednesday, August 26, 2015

காயத்திரி மந்திரம் என்பது வாலை தியானம்

காயத்திரி என்பது பல தேவதைகளுக்கும
ஜெபிக்க படும் மந்திரங்களாகும் . இவற்றுள்
முதன்மையானதும அனைவராலும்
அறியப்பட்டதும் , பிரம்ம ரிஷி( சித்தர்களின்
மிகஉயர்நிலை ) விசுவாமித்திரர் அருளிய
சூரிய காயத்திரியாகும் . ஆனால் இந்த
மந்திரத்தில் சூரியன் என்ற வார்த்தை எங்கும்
இல்லை . காயத்திரி என்ற வார்த்தை எங்கும்
இல்லை . இந்த மந்திரத்தை ஆழமாக
பார்ப்போம் .
காயத்திரி மந்திரம்
ஓம் பூர் புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய
தீமஹி
தியோ யோந: பரசோதயாத்
இந்த சம்ஸ்கிருதத ஸ்லோகத்திற்கு தமிழ்
பொருள்
ஓம் என்ற பிரனவமாகவும் , பூ புவ ஸுவ
என்ற வியகிருதி யாகவும்(அகார, உகார மகார
சக்திவடிவாகவும் ), இருக்கின்ற யார்
நம்முடைய புத்தியை தூண்டுகிறாரோ,
அனைததுமாய் இருப்பவரான அந்த
இறைவனின் சிறந்த ஒளிவடிவை
தியானிப்போம் .
விளக்கம்
o ஓஎன்ற புள்ளியாகிய இறைவன் ஓம்என்ற
பிரணவமாக பெரு வெடிப்பானான் . இந்த
பிரணவம் அகார உகார மகார என்ற சக்தியாக
விரிவானது . இந்த ஓங்காரம் விரிவடைந்து
அகார உகார , மகர நாத விந்து சக்தியானது . .
இது பஞ்ச வித்தாக , பஞ்ச பூதமாக
விரிவானது . பஞ்ச பூதங்கள் நால்வகை
யோனி எழுவகை பிறப்பாக இப்பிர பஞ்சமாக
விரிவானது . இந்த பஞ்சபூத இறை சக்தி
நமது புத்தியை செயல் படவைக்கிறது . .
இந்த இறை சக்திபல்ல வடிவாக இந்த
பிரபஞ்சதில் உள்ளது அவற்றுள் மிக சிறந்த
வடிவான ஒலிவடிவத்தில் இறைவனை
தியானிப்போம் . இந்த விளக்கத்தில்
காயத்திரியும் இல்லை சூரியனும் இல்லை
.
வேதாந்த விளக்கம் : காயத்திரி வந்தவிதம் .
. . இந்தமந்திரம் இறைவன் பிரபஞ்சமாக
உருவெடுத்ததர்க்கு மும் “பூ புவ ஸுவ “
என்ற சக்தி வடிவாக இருந்தான் என்கிறது.
அதுவே வியாகிருது. . அந்த சக்தி வடிவிற்கு
ஆதி சக்தியாக தெய்வமாக வேதாந்திகள்
உருவக படுத்தினர் . இந்த ஆதி சக்தி,சிவன்
விஷ்ணு , பிரம்மா ஆகியவர் களுக்கு சக்தி
வழங்கியது . அதனால் இவர்கள் அழித்தல் ,
காத்தல்,படைத்தல் ஆகிய தொழில்
செய்கின்றனர் . இதனால் பிரபஞ்சம
இயங்குகிறது . இந்த ஆதி சக்தி= சவிது
அல்லது சவிதா = காயத்திரி என்று பெயர்
பெற்றது . . இந்த காயத்திரி பிரபன்ச்சமாக
விரிநது . ஒளி வடிவானது . இறைவன் காயத்ரி
என்ற சக்தியாக இறைவனின் பல வடிவுகளில்
சிறந்த ஒளிவடிவில் இருக்கிறான் இறைவனை
ஒளிவடிவில் தியானிப்போம் .. இறைவனை
ஒளிவடிவில் தியானிக்க இந்த மந்திரம்
சொல்கிறது . நமக்கு பிரகாசமான ஒளியை
தருவது சூரியன் என்று கருதி இதை சூரிய
காயத்திரி என்று அழைகிறார்கள் . இதன்
பொருள் புரியாதவர்கள் காயத்திரி என்பது
சூரிய தியானம் என்று பொருள் செய்கிறார்கள்
இம் மந்திரத்தில் சித்தர்களின் வாலை
வந்தவிதம் .
போகர் ஜனனசகரம் என்ற நூலில் பாடல் 7 லில்
பிரபன்ச்சத்தில் இறைவன் வாலையாக
பரஞ்சோதியாக . இருப்பதாக சொல்கிறார்
. உறைகிறேன் ஆதி சித்தன் ஒருவனப்பா
ஒருவனுமே வல்லவட பரமமப்பிரமம்
போகர் ஜனனசாகரம் பாடல் 3
.
சிருஷ்டித்த கலையதுதா நெத்தனையோ
சொல்லும்
திரண்டதொரு விபரமது தெரிய சொல்லும் .
மட்டித கலை யதுதான் னைமூன்றப்பா
வதிகார மோகமதால் சிருஷ்டித்தேனே
வட்டித்த கலையதுதான் வாலையாகி
வந்ததட முகம் ஐந்து கையும் பத்தாய்
எட்டித்த உனக்கும் எனக்கும் மூலமப்பா
ஏகபரஞ் சோதியடா எண்ணிக் கொள்ளே
போகர் ஜனனசாகரம் பாடல் 7
பொருள் விளக்கம் .
ஆதியில் ஆதி சித்தன் என்ற இறைவன் ( oo
ஒ=ஓம் ) ஒருவன் உண்டு. அவன் பர பிரமம் .
அவன் ஓம் என்ற பிரணவமாக சக்தியை
படைதான்( சக்தி=சவிது = காயத்திரி =
வாலை) அதன் சக்தி மூவைந்து (“பூ புவ
ஸுவ) கலை அளவு . இந்த சக்தி என்ற
கலைதான் வாலை. இந்த வாலை ஐந்து
முகமாக பஞ்சபூதமாகவும் பத்து கைகள் என்ற
தச வாயுக்களாகவும் இருக்கிறது . இந்த
வாலை தான் எனக்கும் உனக்கும் மூலமான
பரஞ் ஜோதிஆகிய இறைவன்
பர பிரம்மம் என்ற ஆதி சித்தன், சக்திவடிவில்
வாலை என்ற ஒளியாக பரஞ்ஜோதி யாக
உள்ளான் . இந்த வாலை , பஞ்சபூதமாக
இப்பிரபன்ச்சமாக உருவானது . . ஆக இறைவன்
வாலை என்ற ஒளிவடிவாக பிரபஞ்சவெளியில்
இருக்கிறான் . அதாவது பிரபஞ்சம
உருவாவதில் இறைவனின் முதல் நிலை சக்தி
=சவிது=காயத்திரி = வாலை = ஒளி
. இந்த இறைவனை மௌன யோகத்தில்
( உயர்நிலை வாசி யோகம் ) பர வெளியில்
காணலாம் .
இது பிரபஞ்சவாலை இதை சித்தர்கள்
உண்மனிதாய் என்பார்கள் . பரவெளியில்
இறைவனை ஒளிவடிவில் காண்பது ஒருவகை
முக்தி .
எனவே காயத்திரி மந்திரம், இறைவனை வாலை
தியானம் என்ற ஒளிவடிவில் தியானம் செய்ய
சொல்கிறது . இது சித்தர்கள் கோட்பாடு .
விசுவாமித்திர சித்தனால் சொல்லப்பட்டது .
.
இந்த பிரபஞ்ச வலை மனிதனுக்கு உள்ளே
ஒளியாக , இறைவனாக உள்ளாது . இதை
வாலை பெண் என்றும மனோன்மனிதாய்
என்றும் சித்தர்கள் பரிபாசையாக
சொல்லுவார்கள் . இதை பூரணம் என்றும்
சொல்லுவார்கள் சித்தர்கள் வணங்குவது
அல்லது தியானிப்பது நம்முள் ஒளிவடிவில்
இருக்கும் இறைவன் . .வாசி யோகத்தில்
நம்முள் வாலை என்ற ஒளிவடிவில்இருக்கும்
இறைவனை தியானிப்போம் காண்போம் .
இதுவும் முக்க்தியில் ஒருவகை .
குருசமர்ப்பணம்.

Tuesday, August 25, 2015

சிவலிங்கத்தின் அர்த்தம்....!!!



ஒவ்வரு குருவும் ஒவ்வரு விதமாக சிவலிங்கத்தின் அர்த்தம் கூறுவார்கள் .
நாம் வாசியோகத்தின் மூலமாக விந்துவை சக்கரங்களின் வழியாக சுழிமுனைக்கு ஏற்றி அது நாசி துவாரம் வழியாக உள்நாக்கில் இறங்கும் . இந்த இறங்கும் திரவமே ரசமணி ஆகும் . எப்படி ஆவுடயார் பாகத்தில் லிங்கபாகத்தை மருந்து சாத்தி இணைத்து பின்பு சிவபெருமானாக பார்க்கிறோமோ ,அதை போலவே இந்த திரவமானது உள்நாக்கின் வலியாக இறங்கி பெருநாக்குடன் இணைகிறது .அப்போது நாம் சிவனாகவே மாறுகிறோம் .இதுவே வாசியோகத்தின் இறுதிகட்டம் .
எப்படி சிவலிங்கம் மூன்று பாகமாகபிரிக்கப்படுகிறதோ அதாவது மேல் பக்கம் சிவன் ,நடுபக்கம் விஷ்ணு ,அடிப்பக்கம் பிரம்மா .என்று சிவலிங்கத்தை கூறுவர் .அதை போலவே நம்முடைய மூலாதாரம் பல உயிர்களை உண்டாக்கும் சக்தி உடையது அதனால் பிரம்மா என்றும், திருவேணி சங்கமம் என்று சொல்லப்படும் மார்புபகுதியில் நம் உடலை காக்கின்ற இதயம் இருப்பதால் நம்மை காக்கின்ற விஷ்ணு இருக்கும் இடமாக கருதுகிறோம் . உடலின் முக்கியமான இடமான மூளை இருப்பதாலும் ,வாசியோகத்தின் முடிவிடம் என்பதாலும் முக்கன்னனான சிவபெருமனை தலை பாகத்திற்க்கு வைத்துள்ளோம் . அதனால் தான் கபாலம் வலியாக உயிர் பிரிந்தால் முக்தி என்று புராணம் கூறுகிறது . நன்றாக பாருங்கள் நமது பெருநாக்கு ஆவுடையார் பாகம் போலவும் ,சிருநாக்கு லிங்கபாகம் போலவும் இருப்பதை காணலாம் .இதை என்று நாம் இணைக்கிறமோ அன்று நாம் சிவனாகவே மாறிவிடுவோம் . மற்ற படி ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இணைந்ததே சிவலிங்கம் என்றுகூறுவர் .அது தவறு.
ஆதியும்அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாகிய இறைவன், உயிர்கள்( ஆன்மாக்கள் ) உய்வு பெற வேண்டும் என்பதற்காக மூன்று விதமான வடிவங்களை எடுத்துக்கொண்டு வந்து, நமக்கு அருள்செய்கின்றான்.
அவ் வடிவங்கள்,
அருவம் - சிவம் - அதிசூக்குமம் - கண்ணுக்கு புலனாகாது- >இது நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
உருவம் - மகேசுவரன் - தூலம் - கண்ணுக்குப் புலப்படும்-இது சகளத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
அருவுருவம் - சதாசிவன் - சூக்குமம் - வடிவம் இல்லை-இது சகள நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
இதில் அருவம் - கண்ணுக்கு புலனாகாது, உருவம் - உமா மகேசுவரர், தட்சிணா மூர்த்தி, நடராசர்– போன்றவை. இந்த உருவத் திருமேனிகள் அறுபத்து நான்கு ( 64 ) வகையாக உள்ளதாகஆகமங்கள் கூறுகின்றன,
அதிலும் சிறப்பாக இருபத்தி ஐந்து(25)வடிவங்கள்-மகேசுவர மூர்த்தங்கள் என்றுசொல்லப்படுகின்றன.
மூன்றாவதாக இருக்கக் கூடிய அருவுருவத் திருமேனியே -சிவலிங்கம் எனப்படும்.
" இலிங்கம்" - என்பதற்கு குறி என்பது பொருள்," குறி " - என்றால் = ஒரு அடையாளம்
ஆக காண முடியாத இறைவனை காணுவதற்கான அடையாளமேசிவலிங்கம் எனப்படும்.
சிவலிங்கம்= சிவ + லிம் + கம்
சிவம் – இறைவர்லிம் - அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்கும் இடம், கம் -ஒடுங்கிய அப்பொருள்கள் ( சராசரங்கள் ) மீண்டும் தோன்றும் இடம்,
ஆக அண்ட சராசரங்களையும் படைத்தும் அழித்தும்அருளவும்வல்ல வடிவமே சிவலிங்கம் எனப்படும், சிவலிங்கத்தின்அடிப்பாகம் - நாற்கோண வடிவினதாய் இருக்கும் -இது பிரம தத்துவம்
சிவலிங்கத்தின் நடுப்பாகம் - எண்கோண வடிவினதாய்இருக்கும் -இது விஷ்னு தத்துவம் ( இது ஆவுடை எனப்படும் )
சிவலிங்கத்தின் மேல் பாகம் - நீண்ட வட்ட வடிவினதாய்இருக்கும் -இது சிவ தத்துவம் ( இது பாணம் எனப்படும் )
இந்த பாணத்தின் அடிப் பாகத்தில் - உருத்திரனும், இந்த பாணத்தின் நடுப் பாகத்தில் - ஈசுவரனும்,
இந்த பாணத்தின் மேல் பாகத்தில் - சதாசிவனும்,இருக்கிறார்கள்.
இந்த சிவலிங்கம் என்பது இரண்டு வகைப்படும், அவை,
1. பரார்த்தலிங்கம்-( திருக்கோயில்களில் அனைவரும் வழிபடத் தக்க வகையிலே கருவறையில்எழுந்தருளியிருப்பது )
2. ஆன்மார்த்தலிங்கம் அல்லது இஷ்ட லிங்கம்-( விரும்புகின்ற அன்பர்கள் முறையான தீக்கை பெற்றுஇல்லத்தில் வைத்து பூசிப்பது )
விஞ்ஞானிகள் அணுவை ( எலக்ட்ரான் ) ஆராய்ச்சி செய்தபோது,அந்த அணுவானது பச்சை நிறமான ஒரு வட்ட வடிவமாகவும்,அதன் மீது ஒரு சோதியுமாக காட்சி தந்ததாககுறிப்பிட்டுள்ளார்கள்,இந்தபச்சை வடிவம் ஆவுடையாகவும் + அதன் மீதிருந்த சோதி இலிங்கமாகவும் காட்சியளித்ததுஎன்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி பூர்வமான உண்மை.இத்தகையை அற்புதமான இலிங்கவடிவத்தை, தமது ஞானக் கண்ணால் கண்டதெய்வச் சேக்கிழார் பெருமான்பெரிய புராணத்தில் ,
..
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
நாணாது நேடிய மால் நான்முகனும் காண நடுச்
சேணாரும் தழல் பிழம்பாய் தோன்றியது தெளிந்தாராய்.
- எம்பிரான் சாக்கிய நாயனார் புராணம் : 8
என்று குறிப்பிட்டு அருளியிருப்பதை சிந்தித்து வியக்கலாம்.
ஆக நம்பொருட்டு இறைவன் எடுத்து அருளார்ந்த நிலையிலே திருக்கோயில்களில்வீற்றிருக்கும் இலிங்கத் திருமேனியை தரிசிப்போம்.. உய்வு பெறுவோம்.