Wednesday, August 26, 2015

காயத்திரி மந்திரம் என்பது வாலை தியானம்

காயத்திரி என்பது பல தேவதைகளுக்கும
ஜெபிக்க படும் மந்திரங்களாகும் . இவற்றுள்
முதன்மையானதும அனைவராலும்
அறியப்பட்டதும் , பிரம்ம ரிஷி( சித்தர்களின்
மிகஉயர்நிலை ) விசுவாமித்திரர் அருளிய
சூரிய காயத்திரியாகும் . ஆனால் இந்த
மந்திரத்தில் சூரியன் என்ற வார்த்தை எங்கும்
இல்லை . காயத்திரி என்ற வார்த்தை எங்கும்
இல்லை . இந்த மந்திரத்தை ஆழமாக
பார்ப்போம் .
காயத்திரி மந்திரம்
ஓம் பூர் புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய
தீமஹி
தியோ யோந: பரசோதயாத்
இந்த சம்ஸ்கிருதத ஸ்லோகத்திற்கு தமிழ்
பொருள்
ஓம் என்ற பிரனவமாகவும் , பூ புவ ஸுவ
என்ற வியகிருதி யாகவும்(அகார, உகார மகார
சக்திவடிவாகவும் ), இருக்கின்ற யார்
நம்முடைய புத்தியை தூண்டுகிறாரோ,
அனைததுமாய் இருப்பவரான அந்த
இறைவனின் சிறந்த ஒளிவடிவை
தியானிப்போம் .
விளக்கம்
o ஓஎன்ற புள்ளியாகிய இறைவன் ஓம்என்ற
பிரணவமாக பெரு வெடிப்பானான் . இந்த
பிரணவம் அகார உகார மகார என்ற சக்தியாக
விரிவானது . இந்த ஓங்காரம் விரிவடைந்து
அகார உகார , மகர நாத விந்து சக்தியானது . .
இது பஞ்ச வித்தாக , பஞ்ச பூதமாக
விரிவானது . பஞ்ச பூதங்கள் நால்வகை
யோனி எழுவகை பிறப்பாக இப்பிர பஞ்சமாக
விரிவானது . இந்த பஞ்சபூத இறை சக்தி
நமது புத்தியை செயல் படவைக்கிறது . .
இந்த இறை சக்திபல்ல வடிவாக இந்த
பிரபஞ்சதில் உள்ளது அவற்றுள் மிக சிறந்த
வடிவான ஒலிவடிவத்தில் இறைவனை
தியானிப்போம் . இந்த விளக்கத்தில்
காயத்திரியும் இல்லை சூரியனும் இல்லை
.
வேதாந்த விளக்கம் : காயத்திரி வந்தவிதம் .
. . இந்தமந்திரம் இறைவன் பிரபஞ்சமாக
உருவெடுத்ததர்க்கு மும் “பூ புவ ஸுவ “
என்ற சக்தி வடிவாக இருந்தான் என்கிறது.
அதுவே வியாகிருது. . அந்த சக்தி வடிவிற்கு
ஆதி சக்தியாக தெய்வமாக வேதாந்திகள்
உருவக படுத்தினர் . இந்த ஆதி சக்தி,சிவன்
விஷ்ணு , பிரம்மா ஆகியவர் களுக்கு சக்தி
வழங்கியது . அதனால் இவர்கள் அழித்தல் ,
காத்தல்,படைத்தல் ஆகிய தொழில்
செய்கின்றனர் . இதனால் பிரபஞ்சம
இயங்குகிறது . இந்த ஆதி சக்தி= சவிது
அல்லது சவிதா = காயத்திரி என்று பெயர்
பெற்றது . . இந்த காயத்திரி பிரபன்ச்சமாக
விரிநது . ஒளி வடிவானது . இறைவன் காயத்ரி
என்ற சக்தியாக இறைவனின் பல வடிவுகளில்
சிறந்த ஒளிவடிவில் இருக்கிறான் இறைவனை
ஒளிவடிவில் தியானிப்போம் .. இறைவனை
ஒளிவடிவில் தியானிக்க இந்த மந்திரம்
சொல்கிறது . நமக்கு பிரகாசமான ஒளியை
தருவது சூரியன் என்று கருதி இதை சூரிய
காயத்திரி என்று அழைகிறார்கள் . இதன்
பொருள் புரியாதவர்கள் காயத்திரி என்பது
சூரிய தியானம் என்று பொருள் செய்கிறார்கள்
இம் மந்திரத்தில் சித்தர்களின் வாலை
வந்தவிதம் .
போகர் ஜனனசகரம் என்ற நூலில் பாடல் 7 லில்
பிரபன்ச்சத்தில் இறைவன் வாலையாக
பரஞ்சோதியாக . இருப்பதாக சொல்கிறார்
. உறைகிறேன் ஆதி சித்தன் ஒருவனப்பா
ஒருவனுமே வல்லவட பரமமப்பிரமம்
போகர் ஜனனசாகரம் பாடல் 3
.
சிருஷ்டித்த கலையதுதா நெத்தனையோ
சொல்லும்
திரண்டதொரு விபரமது தெரிய சொல்லும் .
மட்டித கலை யதுதான் னைமூன்றப்பா
வதிகார மோகமதால் சிருஷ்டித்தேனே
வட்டித்த கலையதுதான் வாலையாகி
வந்ததட முகம் ஐந்து கையும் பத்தாய்
எட்டித்த உனக்கும் எனக்கும் மூலமப்பா
ஏகபரஞ் சோதியடா எண்ணிக் கொள்ளே
போகர் ஜனனசாகரம் பாடல் 7
பொருள் விளக்கம் .
ஆதியில் ஆதி சித்தன் என்ற இறைவன் ( oo
ஒ=ஓம் ) ஒருவன் உண்டு. அவன் பர பிரமம் .
அவன் ஓம் என்ற பிரணவமாக சக்தியை
படைதான்( சக்தி=சவிது = காயத்திரி =
வாலை) அதன் சக்தி மூவைந்து (“பூ புவ
ஸுவ) கலை அளவு . இந்த சக்தி என்ற
கலைதான் வாலை. இந்த வாலை ஐந்து
முகமாக பஞ்சபூதமாகவும் பத்து கைகள் என்ற
தச வாயுக்களாகவும் இருக்கிறது . இந்த
வாலை தான் எனக்கும் உனக்கும் மூலமான
பரஞ் ஜோதிஆகிய இறைவன்
பர பிரம்மம் என்ற ஆதி சித்தன், சக்திவடிவில்
வாலை என்ற ஒளியாக பரஞ்ஜோதி யாக
உள்ளான் . இந்த வாலை , பஞ்சபூதமாக
இப்பிரபன்ச்சமாக உருவானது . . ஆக இறைவன்
வாலை என்ற ஒளிவடிவாக பிரபஞ்சவெளியில்
இருக்கிறான் . அதாவது பிரபஞ்சம
உருவாவதில் இறைவனின் முதல் நிலை சக்தி
=சவிது=காயத்திரி = வாலை = ஒளி
. இந்த இறைவனை மௌன யோகத்தில்
( உயர்நிலை வாசி யோகம் ) பர வெளியில்
காணலாம் .
இது பிரபஞ்சவாலை இதை சித்தர்கள்
உண்மனிதாய் என்பார்கள் . பரவெளியில்
இறைவனை ஒளிவடிவில் காண்பது ஒருவகை
முக்தி .
எனவே காயத்திரி மந்திரம், இறைவனை வாலை
தியானம் என்ற ஒளிவடிவில் தியானம் செய்ய
சொல்கிறது . இது சித்தர்கள் கோட்பாடு .
விசுவாமித்திர சித்தனால் சொல்லப்பட்டது .
.
இந்த பிரபஞ்ச வலை மனிதனுக்கு உள்ளே
ஒளியாக , இறைவனாக உள்ளாது . இதை
வாலை பெண் என்றும மனோன்மனிதாய்
என்றும் சித்தர்கள் பரிபாசையாக
சொல்லுவார்கள் . இதை பூரணம் என்றும்
சொல்லுவார்கள் சித்தர்கள் வணங்குவது
அல்லது தியானிப்பது நம்முள் ஒளிவடிவில்
இருக்கும் இறைவன் . .வாசி யோகத்தில்
நம்முள் வாலை என்ற ஒளிவடிவில்இருக்கும்
இறைவனை தியானிப்போம் காண்போம் .
இதுவும் முக்க்தியில் ஒருவகை .
குருசமர்ப்பணம்.

1 comment:

  1. You didn't mention the author of this article (Raja Krishnamoorthi)..
    http://www.siddharyogam.com/

    ReplyDelete