Wednesday, August 5, 2015

சித்தயோகம் பயில விரும்புபவர்களுக்கு

ஐயா திரு.தமிழ்மணி வேலு அவர்கள் மதுரையில் வசிக்கிறார்.சித்தயோகம் பயில விரும்புபவர்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளார்
” தீஷை பற்றிய சந்தேகங்களை என் செல் போனில் தொடர்பு கொண்டு கேட்கலாம் ,. பதில் கூற தயாராய் உள்ளேன் .
தீஷை என்பது நான் முன்பு கூறியதுபோல் முதலில் கொடுப்பது தான்
மற்றவை எல்லாம் தீஷையின் நிலைகள் . நாம் ஒன்பது பிரிவுகளாக பிரித்து அந்த அந்த நிலைகளுக்குத் தகுந்தாற்போல் கொடுப்பது ஆகும் .
ஏன் தீஷை குருவிடம் வாங்க வேண்டும் என்றால் ஒருவர் இறைநிலை அடைவதற்கு இவர்தான் மூல காரணம் . ஒருவருடைய உடல் பொருள் ஆவியை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய சொல்லிக் கொடுப்பார் . மானச பூஜை என்ன செய்யும் யோக, ஞான மார்க்கம் என்ன செய்யும் என்று விளக்குவார் . அவர் கண்களை மூடி சீடனின் தலையில் தன் கையை வைத்து ஆசிர்வாதம் கொடுப்பது மிகப் பெரிய ஓன்று அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது . இதற்க்கு அஸ்த மஸ்த கச யோகம் என்று பெயர் .
அஸ்த்தம் என்றால் கை ,. மஸ்தகம் என்றால் சிரசு கசை என்றால் உணர்த்துவது யோகம் என்றால் சேர்ப்பது அல்லது வைப்பது , கையை சிரசின் மேல் வைப்பது அஸ்த மஸ்தக செய் யோகம் என்றும் கூறுவார் .
நல்ல குரு மட்டுமே உடல் பொருள் ஆவியை தத்தம் செய்தோருக்கு ரேசக --பூரக-- கும்பக , முறைகளை முறைப்படி கற்றுக் கொடுப்பார் .
ஸோ ஹம் மந்திரத்தால் ஜபம் செய்வதை விளக்குவார்
அவரின் கைபேசி எண் :- 09344103944.

1 comment: