Sunday, December 20, 2015

சித்தர்களின் மூல மந்திரங்கள் !!!

நந்தீசர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"
அகத்தியர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்...
"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"
போகர் மூல மந்திரம்...
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"
கோரக்கர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"
தேரையர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"
சுந்தரானந்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"
புலிப்பாணி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"
காக புசண்டர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"
இடைக்காடர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"
சட்டைமுனி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"
கொங்கணவர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"
சிவவாக்கியர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"
உரோமரிஷி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"
குதம்பை சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"
கருவூரார் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"
-----
ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக
ஓம் சப்தநாதாய வித்மஹே
சப்தவேதாய தீமஹி
தந்நோ சப்தகந்தலிங்க சித்புருஷ ப்ரசோதயாத்
-----
ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி
ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்.
ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி
ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்.
ஸ்ரீபதஞ்சலி காயத்ரி
ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்.
ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி
ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்.
ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி
ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி ப்ரசோதயாத்.
ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி
ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்.
ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி
ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்.
ஸ்ரீசிவவாக்கியர் சித்தர் ப்ரசோதயாத்
ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்.
ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி
ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்.
ஸ்ரீதன்வந்திரி காயத்ரி
ஓம் ஆதி வைத்யாய வித்மஹே
ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்.

Monday, December 14, 2015

பொதுவாக,தியானம் செய்கின்றவர்கள்,அவர்கள் செய்கின்ற தியானம் சித்தியாக என்னென்ன செய்தால் பலன்கள் விரைவில் தெரியும்?

{ சித்தர்களின் அனுபவத்திலிருந்து }
1.ஒரே நேரத்தில் ,தினசரி தியானம் செய்ய
வேண்டும்.
2.அதிகாலை நேரத்தில் செய்ய
வேண்டும்.
3.முடிந்த போதெல்லாம்
மௌனத்தை கடைபிடிக்க வேண்டும்.
4.அதிகளவு உணவு சாப்பிடாமல் ,தன் உடல்
மற்றும்
மன உழைப்புக்கு போதுமான உணவு மட்டும்
உண்ண வேண்டும்.
5.மனம் விட்டுசந்தோஷமாக பக்தியுடன்
பாடலாம்,அல்லது
ஒய்வு நேரங்களில் மனதுக்கு பிடித்த
பாடல்களை கேட்கலாம்.
6.சித்தர்களின்பாடல்களை பாடலாம் அல்லது
படிக்கலாம்.
7.அடுத்தவர்க்கு பயன்படும்
நற்காரியங்களை,சுயநலம் இன்றி,பிரதிபலன்
பாராது செய்யலாம்.
8.யாரிடமும்
பேசாது,ஒய்வு நேரங்களில் காலார,மனதார
நடந்து செல்லலாம்.
9.தினசரி என்னநடந்தாலும் அது இறைவன்
செயல் என என்னி
பழகி வந்தால் அதிசயமான நிகழ்வுகளை
காணலாம்.
10.சும்மா இருக்கும்போது,கண்களை மூடி,
ஓடுகின்ற மூச்சின் மீது
மட்டும் கவனத்தை வைத்து ,அமர்ந்து
தியானிக்கலாம்.
11.கனவுகளை தினசரி
குறிப்பு எடுத்து வைக்கலாம்.
12.காலைஎழுந்தவுடன் முதலில் தமது வலது
உள்ளங்கையை பார்த்து,அதில் தமது
குருநாதரோ,அல்லது தமது வழிபடு
தெய்வமோ இருந்து அருள்வதாக நினைந்து
பிராத்தனையுடன் தினசரி பொழுதை
தொடங்கலாம்.
13.சாயா தரிசனம் தினசரி
பயிற்சி செய்யலாம்.
14.பௌர்ணமி யன்று
முடிந்த நீண்ட நேரம் கடற்கரை,உயரமான
மலை,அல்லது அமைதியான
ஆலயங்கள்,சித்தர்களின் இருப்பிடங்கள்
அல்லது தனியறையில் இரவு பகல் தியானம்
செய்யலாம.

Sunday, December 13, 2015

வள்ளலார் ஞான மூலிகை !

வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை !
காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும்.
சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும்.
ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம்
அருளியுள்ளார்.
வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக
காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).

நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம் !!!

நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள். ஆனால், ஏதோ தடங்கல், இடைஞ்சல் என்று தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள்.
அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி
ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள்.
"பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!
தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால்
தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!
நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின்
துன்பத்தைப் போக்குபவனே!
லட்சுமி நரசிம்மனே!

Friday, December 11, 2015

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் !!!

பித்தராக திரிந்த சித்தர்
திருவாவூரில் பிறந்தால் முக்தி,காசியில் இறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அகங்காரத்தை அழித்துவிட்டால் நம்முள்ளே ஆன்ம ஒலி பிரகாசிக்கும் என்ற தத்துவத்திற்கு விளக்கமாக ஓங்கி நிற்கிறது அண்ணாமலை எனும் ஞான மலை. இப்புனித மண்ணில் நடமாடிய சித்தர்கள், ஞானிகள் தான் எத்தனை எத்தனை! சிலர் மோன தவத்தில் முழ்கியிருப்பர், சிலர் பித்தரைப்போல அலைந்து திரிவர். இவர்களின் நடவடிக்கைகள்தான் வேறு. அவர்தம் ஞான செல்வம் ஒன்றேதான். இப்படி பித்தரைப்போல திரிந்த ஆத்ம ஞானி தான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்.
காஞ்சி ஸ்ரீ காமாட்சியை ஆராதிப்பதர்காக சில உபாசனா முறைகளை தோற்றுவித்த ஸ்ரீ ஆதிசங்கரர், அவற்றை சரிவர நடத்தி வருவதற்காக நர்மதா நதிக்கரையிலிருந்து முப்பது தேவி உபாசகர்களை அவர்களது குடும்பத்தோடு காஞ்சிபுரத்தில் குடியமர்த்தினார். அவர்கள் ஸ்ரீ காமாட்சி தேவியை குல தெய்வமாகக்கொண்டு ஸ்ரீவித்யை எனும் உபாசனா மார்கத்தைப்பரப்பி வந்தனர். அவர்களுக்கு காமகோடி வம்சம் எனப்பெயர் ஏற்பட்டது. இந்த வம்சத்தில் வந்தவர்கள் வேத,சாஸ்திரங்களில் மிகச்சிறந்த பண்டிதர்கள்.
காலப்போக்கில் கலியின் கொடுமையால் இந்தப்பரம்பரை சிறிது சிறிதாக மறைந்து, மூன்று நான்கு குடும்பங்களே எஞ்சி நின்றன. இவர்கள் தங்கள் முன்னோர் வாழ்ந்து காட்டிய முறையில் மனம் தளராமல் பிடிப்புடன் வாழ்ந்தனர். இவர்களில் பலர் ஜோதிட சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்று விளங்கியதால் ஸ்ரீ வரதராஜர் கோயிலில் இவர்களுக்கு பஞ்சாங்கம் வாசிக்கும் உரிமையும் அதற்க்கான மானியமும் அளிக்கப்பட்டிருந்தன.
இந்த மரபில் வந்த வரதராஜன்-மரகதம் தம்பதிக்கு, ஸ்ரீ காமாட்சியின் அருளால் 1890 ம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ம் நாள் சனிக்கிழமை ஹஸ்த நட்சத்திரம் கூடிய மங்கள நாளில் கண்ணன் போன்ற ஓர் ஆண் மகவு உதித்தது. குல தெய்வமான வேங்கடாச்சலப்பதிக்கு உரிய அவரது திருநாமமான சேஷாத்திரி என்ற பெயர் அக்குழந்தைக்கு சூட்டப்பட்டது
பராசக்தி அளித்த ஞானப்பிள்ளை என்பதால் சிறு வயதிலேயே சேஷாத்திரி தெய்வ வழிபாடும் இறை பக்தியும் இயற்கையாகவே வந்து விட்டது. தாய் மரகதம் அக்குழந்தைக்கு நான்கு வயது நிரம்பும்முன்னரே கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம், மூகபஞ்சசதி, குருஸ்துதி போன்ற தோத்திரங்களை கற்றுக்கொடுத்தாள்
தங்கக்கை
ஒரு நாள் தாயின் இடுப்பில் அமர்ந்து குழந்தை சேஷாத்திரி வரதராஜபெருமாள் ஆலயத்திற்கு சென்றாள் திருவிழா என்பதால் தெரு முழுக்க கடைகள் முளைத்திருந்தன. ஒரு வியாபாரி வெண்கலத்தால் ஆன தவழும் கிருஷ்ணர் பொம்மைகளை விற்றுக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த சேஷாத்திரி தனக்கு ஒரு கிருஷ்ணர் பொம்மை வேண்டும் என அடம் பிடித்தார்.அன்னை அதில் விருப்பமில்லாததால் தொடர்ந்து நடந்தாள். குழந்தையின் அழகில் மயங்கிய அந்த வியாபாரி அம்மா! குழந்தை கிருஷ்ணனைப்போல் இருக்கு.நீங்க காசு தர வேண்டாம். நானே ஒரு பொம்மை தருகிறேன். எடுத்துக்கொள்ளுங்கள் என்றான். உற்சாகமாக சேஷாத்திரி, தானே ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டார்.
அவர் கை பட்டதுதான் தாமதம். வியாபாரி கொண்டுவந்த அத்தனை பொம்மைகளும் விற்றுத்தீர்ந்தன! மறுநாள் கோயிலுக்கு சென்ற போது அந்த வியாபாரி, கண்களில் நீர் வழிய அந்த அன்னை காலில் விழுந்து கும்பிட்டபின் அம்மா, வழக்கமாக இங்கு நூறு பொம்மை கூட விற்காது. உங்க குழந்தை தொட்டதால் நேற்று ஆயிரம் பொம்மைகளும் விற்றுப்போச்சு என்று சொன்ன அவன் `இது தங்கக்கை, தங்கக்கை` என்று கூறியவாறு குழந்தையின் கைகளைப்பற்றி கண்களில் ஒற்றிக்கொண்டான். இது ஊர் முழுவதும் பரவி எல்லோரும் `தங்கக்கை சேஷாத்திரி` என்றே அழைக்க ஆரம்பித்தனர்.
ஏழாவது வயதில் சேஷாத்திரிக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டது.வேத பாடசாலையில் சேர்ந்து வேத அத்யாயனம் செய்ததுடன் தர்க்கம், வியாகரணம் (இலக்கணம்) எல்லாம் பயின்றபின், தன பாட்டனாராகிய காமகோடி சாஸ்திரிகளிடம் மந்திர சாஸ்திரத்தையும் கற்றுணர்ந்தார். இந்த சூழ்நிலையில் சேஷாத்திரியின் தந்தை வரதராஜர் திடீரென காலமாகி விட்டார்.
சந்நியாச யோகம்
கணவனை இழந்த மரகதம், மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினாள் கணவரின் சகோதரி வெங்கலக்ஷ்மியின்மகள் காகினியை, சேஷாத்திரிக்கு மணமுடிக்க விருப்பம்கொண்டு, இதுபற்றி தன மைத்துனரும் சிறந்த ஜோதிடருமான ராமசாமியிடம் பேசினாள். ஆனால் ராமசாமி ஜோதிடர் சொன்ன தகவல் அவளை ஆற்றோன்னாத்துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. சேஷாத்திரியின் ஜாதகத்தில் சந்நியாச யோகம் இருக்கிறது. திருமண பந்தம் அவனுக்கு கிடையவே கிடையாது என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார் ஜோதிடர். அதிலிருந்து வாழ்க்கையே வெறுத்துப்போன மரகதம், பிடிவாதமாக உபவாசம் இருந்து உடலை வருத்தினாள் இறுதியில் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தை உச்சரித்தவாறே, அவளது உயிர் பிரிந்தது. பெற்றவளையும் பறிகொடுத்த சேஷாத்திரி, எப்போதும் பூஜை அறையே கதியாக கிடந்தார். காலை சந்தியாவந்தனம் முடிந்து பூஜை அறைக்குள் புகுந்துவிட்டால் கதவை தாழிட்டுக்கொண்டு பகல் இரண்டு மணிக்குத்தான் வெளியே வருவார். தன சித்தப்பா ராமசாமியின் பராமரிப்பில் இருந்த அவர் வீட்டில் தங்காமல் கோயில், குளம் என சுற்றத்தொடங்கினார். சில சமயம் நாட்கணக்கில் வீட்டுக்கு வரவே மாட்டார். அழுக்குத்துணி, எண்ணை காணாத தலைமுடி, தாடி வளர்ந்த முகம், நெற்றியில் பளீரென துலங்கும் குங்குமம் இதுவே பால சேஷாத்திரியின் வடிவம். அவர் முகத்தில் அலாதியான தேஜஸ் ஒளி விடத்தொடங்கியது.
தெருவில் யாராவது பெண்கள் போனால் அவர்கள் காலில் விழுந்து வணங்குவார். சூரியனையே பார்த்துக்கொண்டு நிர்ப்பார். அடக்கடி நீராடுவார் வாயில் எதோ மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருப்பார். கேட்டால் கர்மம் தொலைய வேண்டாமா? அதற்காகப்பண்ணுகிறேன் என்பார். `காமோ கார்ஷீத் மன்யுர கார்ஷீத் -காமக்கரோதி நாஹம் கரோமி ` என்ற மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்து விட்டதாக சொல்லுவார்.
மயான ஜபம்
இதெல்லாம் போதாதென்று, இரவு நேரத்தில் தனியாக எங்கோ சென்று வந்தார் எங்கே செல்கிறார் என்றே புரியவில்லை. விடிந்ததும் தான் வீடு திரும்புவார். பத்து நாட்கள் கழித்து அதற்க்கு விடை கிடைத்தது. வெளியில் தொல்லை அதிகமாக இருந்ததால் இரவு முழுவதும் மயானத்தில் அமர்ந்து துர்கா சூக்தம் ஜபம் செய்கிறார் என்று தெரிந்தது.. சிறிய தந்தை இதுபற்றி ஆச்சேபித்தபோது `மயானம் ருத்திர பூமி அங்கு ஜபம் செய்தால் ஈஸ்வரன் சீக்கிரம் பலன் தருவார். வெளியில் ஆயிரம் தடவை ஜபித்துப்பெரும் பலனை மயானத்தில் ஒரே தரம் ஜபித்து பெற்று விடலாம் `என பதிலளித்தார் சேஷாத்திரி.
இந்த நிலையில் சேஷாத்திரி ஸ்ரீ பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் சந்நியாச தீட்சை பெற்றுக்கொண்டார். அவரது தீட்சா நாமம் என்னவென்றே தெரியவில்லை. இன்று வரை அவர் சேஷாத்திரி சுவாமிகள் என்றே அழைக்கப்படுகிறார். அதன் பின் வீட்டுக்கே செல்லாமல், ஜீவன் முக்தராக ஞானப்பித்தராக, தன்னை உணர்ந்து பிரும்மானந்தக்கடலில் நீந்தி திளைத்தவராய் சுற்றி அலைந்து கொண்டிருந்தார்.
மாயமாக மறைந்தார்
அன்று சேஷாத்திரியின் தந்தையாருக்கு திதி. இதற்காக, அவரது சிறிய தந்தை எங்கெங்கோ தேடி தெருவில் எங்கோ திரிந்துகொண்டிருந்த சேஷாத்திரியை கண்டுபிடித்து, நான்கைந்து பேர் உதவியுடன் அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு தூக்கி வந்தார். `நான் சந்நியாசி கர்மம் எல்லாம் தொலைத்தவன் எனக்கு திதி கொடுக்கும் கடமை கிடையாது` என சேஷாத்திரி கூறியது யார் காதிலும் விழவில்லை. அவர் ஓடி விடாமல் தடுக்க ஒரு அறைக்குள் அடைத்து வெளியே பூட்டிவிட்டனர்.
மதியம் சுமார் இரண்டு மணி இருக்கும். சிரார்த்தம் முடிந்து, வலம் வந்து மூதாதையர் ஆசியை பெற வேண்டும். அதற்காக சேஷாத்திரியை அழைத்துவர அவரது சிறியதந்தை, அறைக்கதவை திறந்தார். வைதீகர்களும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தனர். அறைக்குள் நுழைந்த சிறியதந்தை, சேஷாத்திரியை தேடினார். உள்ளே அவரைக்காணவில்லை! பூட்டிய அறையிலிருந்து யோகசித்தர் சேஷாத்திரி மாயமாக மறைந்து விட்டார். இச்செய்தி ஒரே நொடியில் ஊரெங்கும் பரவி விட்டது. அந்த அற்புத நிகழ்ச்சியை பற்றி அனைவரும் அலுக்காமல் பேசினர்.
அதன்பின் சேஷாத்திரி காஞ்சி வாசத்தை முடித்துக்கொண்டார். கால் நடையாகவே பல ஊர்கள் வழியாக, நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலையை வந்தடைந்தார்.
அண்ணாமலையே கதி
திருவண்ணாமலையை வந்தடைந்த சேஷாத்திரி சுவாமிகள் அதன்பின் அங்கிருந்து எங்கும் செல்லவில்லை. அங்கேயே பல இடங்களில் பித்தனைப்போல சுற்றிக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டி.சவரம் செய்யப்படாத முகம். கிடைத்ததை சாப்பிடுவார். சாப்பிடாமலும் இருப்பார். யாராவது புதிய வேட்டி கட்டி விட்டால், அடுத்த ஒரு மணியில் அது கந்தயாகி விட்டிருக்கும். குளக்கரை, குப்பைமேடு, எதோ ஒரு வீட்டின் திண்ணை, இப்படி எங்கு வேண்டுமானாலும் படுப்பார். பெரும்பாலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கம்பத்து இளையனார் கோயிலில் தான் அமர்ந்து இருப்பார் இதுதவிர, அன்ன சத்திரம், சடைச்சி ஆச்சியம்மாள் வீடு, சாதுமடம், சின்ன குருக்கள் வீடு, ஓயாமடம் போன்ற இடங்களிலும் அடிக்கடி தென்படுவார் 1889 ம் ஆண்டு தனது 19 ம் வயதில் அண்ணாமலைக்கு வந்த சுவாமிகள் நாற்ப்பது ஆண்டு காலம் அந்த புனித மண்ணில் `பைத்தியம்` போல உலவிவிட்டு தன பூத உடலை நீத்தார். அவர் அண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல தீராத வியாதிகளும் மகானின் பார்வை பட்டதுமே பறந்தோடின. வாய் பேச முடியாதவர்கள் பேசினர். எமன் வாயில் சிக்கியவர்களைக்கூட மகான் மீட்டு இருக்கிறார்
ஸ்ரீ ரமணருடன் தொடர்பு
ஸ்ரீ ரமண பகவான் பாலப்பருவத்தில் அண்ணாமலையார் ஆலயம் ஆயிரம் கால் மண்டபத்தில் பாதாள லிங்கம் அருகே ஆழ்ந்த சமாதியில் இருந்தபோது, சில விளையாட்டு சிறுவர்கள் அவர்மீது சிறு கற்களை வீசி தொந்தரவு கொடுத்தனர். அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த சேஷாத்திரி சுவாமிகள் சிறுவர்களை சத்தம் போட்டு விரட்டினார். அச்சமயம் அங்கு வந்த வெங்கடாசலம் என்பவர் சேஷாத்திரி சுவாமிகளை என்ன எது என்று விசாரித்த போது சுவாமிகள் `உள்ள போய் பாரு. சின்ன சாமி உட்கார்ந்து இருக்கு`.என்று கூறியவாறே ஓடிவிட்டார். வெங்கடாசலம் உள்ளே எட்டிப்பார்த்தபோது அரை இருட்டில் ஒரு உருவம் அமர்ந்திருப்பதைக்கண்டு அலறி நிறைய பேர்களை அழைத்து வந்த போதுதான் மோனத்தவத்தில் இருந்த பகவான் ரமணரை வெளிஉலகம் கண்டுகொண்டது. சேஷாத்திரி அம்பாளின் மறு வடிவம் என்றால், அவரால் `சின்ன சுவாமி` என அழைக்கப்பட்ட ஸ்ரீ ரமணர் முருகப்பெருமானே என்றும் கொள்ளலாம். ஸ்ரீ ரமணரின் பக்தர்கள் தன்னிடம் வந்தால் அவர்களுக்கு மகிழ்ச்சியோடு உபதேசங்கள் செய்வார் சுவாமி.
இந்த இரு `ஞான மலைகளும்` நேருக்குநேர் பெசிக்கொண்டவை வாசுதேவ சாஸ்திரி என்ற பக்தர் பார்க்கும் பாக்கியத்தைப்பெற்றார். விருபாக்ஷி குகையில் தங்கியிருந்தபோது ரமணரை ஒரு முறை சேஷாத்திரி சுவாமிகள் சந்திக்க வந்தார். ரமணரை சற்றுநேரம் உற்று நோக்கிய சுவாமிகள் அவரை சுட்டிக்காட்டி `இது என்ன நினைக்கிறது என்று தெரியவில்லையே` என்றார். ரமணர்தான் மௌனகுருவாயிற்றே! ஏதும் பேசாமல் இருந்தார். சேஷாத்திரி விடாமல் `அருணாச்சலேஸ்வரரை வணங்கினால் நற்கதி கிடைக்கும்` என்றார். ரமணர் தன மௌனத்தை கலைத்து `வணங்குகிறவன் யார்? வணங்கப்படுகிரவன் யார்?` என்று கேட்டார். சேஷாத்திரி பலமாக சிரித்துக்கொண்டே `அதுதானே சரியா புரியலே` என்றார். பிறகு ரமண பகவான் அத்வைத தத்வம் பற்றி ஒரு மணி நேரம் பேசினார். எல்லாவற்றையும் கேட்ட சேஷாத்திரி,`அது என்னமோ, இதெல்லாம் எனக்கு புரியவே இல்லை. எனக்கு பக்திதான் தெரியும். நான் சுவாமிக்கு நமஸ்காரம் பண்ட்றேன்` என்று சொல்லிவிட்டு அண்ணாமலை சிகரத்தை நோக்கி பதினைந்து முறை கீழே விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு போய்விட்டார்.
திருப்புகழ் சுவாமிகள்
அர்த்தநாரி என்ற இயற்பெயர் கொண்ட திருப்புகழ் சுவாமிகள் முருகன் அருள் நிரம்பப்பெற்றவர். அவர் தன வடநாட்டு யாத்திரையை முடித்துக்கொண்டு திருவண்ணாமலை வந்து ரமண மகரிஷிக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவரை நோக்கிய ரமணர் `மலையிலிருந்து கீழே இறங்கி போங்கள்` என உத்தரவிட்டார். தான் என்ன தவறு செய்தோம் என்று கலங்கிய திருப்புகழ் சுவாமிகள் குருவின் கட்டளைக்குப்பணிந்து மலையை விட்டு கீழே இறங்கினார். மலை அடிவாரத்தில் ஒரு குட்டையில் படுத்திருந்த எருமை மாட்டை கட்டி அணைத்துக்கொண்டு சேஷாத்திரியும் படுத்திருந்தார். திருப்புகழ் சுவாமியை கண்டதும் ஓடிபோய் அவரை கட்டி தழுவினார் சேஷாத்திரி. கீழே அமர்ந்து அவரை தன்மடிமீது இருத்திக்கொண்டார். திருப்புகழ் சுவாமிகளை தன சீடராக ஏற்று சிவ மானச பூஜா என்ற சுலோகத்தை உபதேசமாக வழங்கினார். பின்னர் `நீ திருப்புகழுக்காகவே பிறந்தவன். அந்த மகா மந்திரமே போதும். நீ வள்ளி மலையில் வாசம் செய்துகொண்டிரு` என அருளினார முருகனின் அம்சமான ரமண பகவான் திருப்புகழைப்பரப்புவதர்காக பிறந்த வள்ளிமலை சுவாமிகளை சேஷாத்திரி சுவாமிகளிடம் அனுப்பி வைத்தது எத்தகயப்பொருத்தம்!
சூட்சும திருஷ்ட்டி
சேஷாத்திரி சுவாமிகள் கண்ணிலிருந்து எதுவும் தப்ப முடியாது. நமக்கு புலப்படாத சூட்சும உருவங்கள்கூட அவருக்கு தெரியும். ஒரு முறை காஞ்சியில் சிறிய தந்தையோடு இருந்தபோது, சுவாமிகள் தன சிற்றப்பாவுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். திடீரென பாதியில் எண்ணெய் தேய்ப்பதை நிறுத்திவிட்டு முற்றத்தில் நின்று திறந்த வெளியில் ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்தார். பிறகு எதையோ கைதட்டி தாளம் போட்டு கேட்டார். சிறிய தந்தை வியப்பு மேலிட `என்ன பார்த்தாய்? எதற்கு தாளம் போட்டாய்?` என்று கேட்டார். சுவாமிகள் `ஆகாயத்தில் கந்தர்வர்கள் பாடியவாறே செல்கிறார்கள். அவர்களைத்தான் பார்த்தேன்` என்றார். பைத்தியம் முற்றிவிட்டது என்று நினைத்த சிறிய தந்தை `அப்படியா? என்ன ராகத்தில் பாடினார்கள்?` எனக்கேட்டார் கிண்டலாக. சுவாமிகள் சற்றும் தயங்காமல் `பிலஹரி ராகம்` என்றார். தீவிர தவம் காரணமாக ஆகாயத்தில் நடமாடும் யக்ஷ, கந்தர்வர்களை கூட பார்க்கும் சக்தியை பெற்று இருந்தார் சுவாமிகள் என்பதற்கு இது ஒரு உதாரணம். மற்றொன்றும் உண்டு. அண்ணாமலையில் சுவாமிகள் பித்தராக திரிந்துகொண்டிருந்த சமயம். ஒரு நாள் பகல் 11 மணி இருக்கும். சுவாமி திடீரென வான வெளியை நோக்கி `விட்டோபா போரானே! ஜோரா போரானே! ஆஹா! ஆஹா! எத்தனை ஜோதி!` என உரக்க கூவினார். அருகில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. ஒரு சிலர் என்ன சாமி சொன்றீங்க என்று கேட்டபோது சுவாமிகள் ஒரு திசையை சுட்டிக்காட்டி `அதோபார் விட்டோபா கணஜோரா போரான் பார்! நல்லா பார்!` என்று திரும்ப திரும்ப கூறினார். அனால் அவர்கள் பார்த்த போது சூரியன் தான் சுள் என்று முகத்தில் அடித்தது. எதோ சொல்கிறார் என மக்கள் கலைந்து சென்றனர். சற்று நேரத்தில் திருவண்ணாமலை அருகே உள்ள போளூரில் இருந்த ஸ்ரீ விட்டோபா சுவாமிகள் முக்தி அடைந்து விட்டார் என்ற தகவல் வந்து சேர்ந்தது. புண்ணிய ஆத்மாக்கள். இறந்தபின் பிரும்மலோகம் செல்லும் அர்ச்சிராதி மார்கத்தை கூட பார்க்கும் சக்தி சேஷாத்திரி சுவாமிக்கு இருந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது.
சுவாமிகள் ஒல்லியான தேகத்துடன் இருந்தாலும் அவரது பலம் அசாத்தியமானது. ஒரே இடத்தில் பல மணி நேரம் எழும்பி எழும்பி குதித்துக்கொண்டிருப்பார். நாமெல்லாம் அப்படி செய்தால் கால் ஒடிந்து விடும் சிவப்பு எறும்புகள் கூட்டமாக செல்லும் இடத்தில் பல மணி நேரம் படுத்திருப்பார். ஒரு சமயம் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் நுழைந்து ஆசிட் கலந்த ஒரு மருந்தை பாட்டிலோடு குடித்துவிட்டார். கடும் விஷமாகிய அந்த மருந்த ஏதும் செய்யவில்லை!
பிறந்தவர் எவரும் இறக்கத்தானே வேண்டும்! எத்தகைய மகான் என்றாலும் இயற்கையின் இந்த நியதியை மீற இயலுமா? சேஷாத்திரி சுவாமிகளுக்கும் இறுதி நாள் நெருங்கியது. அவருக்கும் அது தெரியும். ஒரு நாள் காய்ச்சல் என்று படுத்தவர் பிறகு எழுந்திருக்கவே இல்லை. 1929 ம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ம் நாள் சேஷாத்திரி சுவாமிகள் தனது பூத உடலை நீத்தார். அவரது இறுதி சடங்கில் ரமண மகரிஷி கலந்து கொண்டது குறிப்பிட தக்கது. சேஷாத்திரி சுவாமிகளின் அதிஷ்டானம் ரமணாஷ்ரமத்தை ஒட்டியே அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் தங்க அனைத்து வசதிகளும் உள்ளன. சுவாமிகளின் உடல் மறைந்தாலும் ஆன்மா இன்றும் உயிர்ப்புடன் இருந்துகொண்டுதான் உள்ளது!
ஆதாரம்: `அபிநவ சுகபிரும்மம்` பிரும்மஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் எழுதிய `ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் சரித்திரம்`. இந்நூலாசிரியர் சுவாமிகள் வாழ்ந்தபோதே அவருடன் நெருங்கிப்பழகி, அவரது நடவடிக்கைகளை கவனிக்கும் பாக்கியம் பெற்றவர். ஸ்ரீ சுவாமிகள் விதேக முக்தி அடைந்தபோது சாஸ்திரியார் அருகில் இருந்தார்.

Thursday, December 10, 2015

உங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்!!!

ஒருவரது பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோயில் சார்ந்த பகுதியில் அல்லது வீடுகளில் அல்லது பொது இடங்களில் தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும். அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு, ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும். இப்படிச் செய்து அந்த மரத்தை பேணி பாதுகாத்து வர அம்மரக்கன்று வளர, வளர அதை நட்டவரின் வாழ்க்கையும் மலரும்.
அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும். அம்மரக்கன்று பூத்து, காய்க்கும்போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும். அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும். கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.
கண் திருஷ்டிக்கு தாவர பரிகாரம் !!!
---------------------------------------------------
கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என பொருள் படும் ஒருவர் அழகாக ஒரு வீட்டை கட்டியிருக்கிறார் என்றால் அந்த தெருவில் செல்லும் எல்லோரும் அந்த வீட்டையே உற்று நோக்குவர்.
இதை வீட்டை கண் வைக்கிறார்கள் என கிராமத்தில் சொல்வதுண்டு அப்பொழுது திருஷ்டியை போக்க என்ன செய்ய வேண்டுமென்றால் அவர்களுடைய ஒட்டுமொத்த கண்பார்வையும் படுமாறு அங்கு ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்க கூடிய குணம் உண்டு. அதனால் வீட்டு வாசலில் அழகான ரோஜா செடிகளை பிறர் பார்வையில் படுமாறு வாங்கி வைக்கலாம். தொங்கும் தோட்டங்களை அமைக்கலாம்.
தாவரங்களுக்கு கடும் கண் பார்வையை ஈர்க்கும் சக்தி உள்ளதால் இது போல ரோஜா செடி வளர்ப்பது, தோட்டங்கள் அமைப்பது மூலமாக வீட்டுக்கு ஏற்படும் தீய தோஷங்களை போக்கலாம்.
---------------------------------------------------------------------
உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரியுமா?....
மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...
நட்சத்திரம்:
* அஸ்வதி ஈட்டி மரம்
* பரணி நெல்லி மரம்
* கார்த்திகை அத்திமரம்
* ரோகிணி நாவல்மரம்
* மிருகசீரிடம் கருங்காலி மரம்
* திருவாதிரை செங்கருங்காலி மரம்
* புனர்பூசம் மூங்கில் மரம்
* பூசம் அரசமரம்
* ஆயில்யம் புன்னை மரம்
* மகம் ஆலமரம்
* பூரம் பலா மரம்
* உத்திரம் அலரி மரம்
* அஸ்தம் அத்தி மரம்
* சித்திரை வில்வ மரம்
* சுவாதி மருத மரம்
* விசாகம் விலா மரம்
* அனுஷம் மகிழ மரம்
* கேட்டை பராய் மரம்
* மூலம் மராமரம்
* பூராடம் வஞ்சி மரம்
* உத்திராடம் பலா மரம்
* திருவோணம் எருக்க மரம்
* அவிட்டம் வன்னி மரம்
* சதயம் கடம்பு மரம்
* பூரட்டாதி தேமமரம்
* உத்திரட்டாதி வேம்பு மரம்
* ரேவதி இலுப்பை மரம்
ராசிகள்
* மேஷம் செஞ்சந்தனம் மரம்
* ரிஷபம் அத்தி மரம்
* மிதுனம் பலா மரம்
* கடகம் புரசு மரம்
* சிம்மம் குங்குமப்பூ மரம்
* கன்னி மா மரம்
* துலாம் மகிழ மரம்
* விருச்சிகம் கருங்காலி மரம்
* தனுசு அரச மரம்
* மகரம் ஈட்டி மரம்
* கும்பம் வன்னி மரம்
* மீனம் புன்னை மரம்
இந்த மரங்களை, ஈரோடு அருகேயுள்ள லக்காபுரம்புதுõர் லட்சுமி நாராயணர் கோயில், சென்னை திருவொற்றியூர் வடிவுடை நாயகி அம்மன் கோயி ல், மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆகிய இடங்களில் வணங்கலாம்.

Tuesday, December 8, 2015

சிதம்பர ரகசியம்

-கண்ணாக்கு மூக்கு செவி ஞானக் கூட்டத்தில்
பண்ணாக்கு வைத்த பழம் பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கினூடே அகண்ட வொளி காட்டி
பண்ணாக்கி நம்மைப் பதித்தவரே...
என்பதில் நந்திகேசவர் பெரிய நாக்காக
இருக்கிறார். அதற்கு புறத்திலுள்ள கண்ட
ஸ்தானத்தில் அண்ணாக்கு இருக்கிறது.
அதுவே அகாரமாகும். அதற்கு தூக்கிய பாதம்,
குஞ்சிதபாதம், திருவடி என்ற பெயர்களும்
உண்டு. அந்த அண்ணாக்குக்கு மேலே ஒரு
நாக்கு இருக்கிறது. அதற்கு பேர் உண்ணாக்கு.
அது உகாரம் ஆகும். அந்த அண்ணாக்கு
உண்ணாக்கு என்ற இரண்டும் தராசுமுனை
போல நிற்கிறது. சுவாமி இடது பாதம்
அண்ணாக்கு மேலே ஊன்றி, வலது பாதம்
புருவ நுனியிலிலே நிற்கிறது. இந்த வலது
பாதம் ஆடியபாதம், நற்றாள் ஆகும். அந்த
அண்ணாக்கு இருக்கப்பட்ட இடத்திலே
மனோன்மணி சக்தி வாசம் செய்கிறாள்.
உண்ணாக்குக்கு மேலே புருவமத்தியிலே
சதாசிவம் வாசம் செய்கிறார்...
சதாசிவனும் மனோன்மணியும் இருக்கப்பட்ட
இடமே சத்தம் பிறந்த இடம். அதுதான்
முச்சந்திகள் கூடும் இடமாகிய அகாரமும்
உகாரமும் தராசுமுனையாய் நிற்கும்.
இவ்விரண்டுக்கும் நடுவே மனோன்மணியும்
சதாசிவனும் நிற்கிறார்கள்.
இந்த இடமே இன்பதுன்பம் இல்லாத இடம்.
தீட்டு திடுக்கு அற்ற இடம். சகலமும்
விளையாடப்பட்ட இடமாகும். தூக்கிய
பாதத்தில் அணிந்த வீரகண்டா மணியும் பாதச்
சிலம்பும் சதங்கையும் அவ்விடத்திலே
ஒலிக்கும். அப்படி ஓசை உண்டான பின்பு
சதாசிவமும் மனோன்மணியும் தரிசனமாகும்.
பிறகு ஒரு சோதி தோன்றும், அச்சோதியில்
லயப்பட்டால் வெகுகாலம் ஒருவர் சீவித்து
வாழலாம்...
இன்னும் விளக்க வேண்டுமானால்,நம் உடலில்
உண்ணாக்கு மேலே உச்சிக்கு கீழேயுள்ள
பாதை வலம்புரி சங்கென்று அழைக்கப்படும்.இ
ந்த வலம்புரியில் இருகாது குறுக்கிடும்
பகுதியில் ஒரு கிணறு உள்ளது.இந்த
கிணற்றை நாதஉணவுதரும் தருமச்சாலை
என்ற நற்சத்திரங்கள் என்றும் கூறுவர்.இந்த
தருமச்சாலையிலே என்றும் வற்றாத
சக்திநாதனுக்கள் அக்கினியாக கொழுமிக்
கிடக்கின்றன.இந்த நாதனுக்களின்
ஊற்றுக்கண்ணாக மயிராண்டி எனும்
பிடரிக்கண்ணும் இந்த கிணற்றின்
மேல்மூடியாக மூக்காண்டி என்ற
புருவமத்தியின் உட்வாசலான குதம்
இருக்கிறது.
மேலும் இந்த வலம்புரியே மரணந்
தங்குந்தலமென்றும் கேள்வி
உதயஸ்தானமென்றும் நாதாக்களின்
அபிப்ராயம்.ஆகவே எவனொருவன்
வலம்புரியிலுள்ள நாதாந்தக் கிணற்றில்
நாதத்தை எழுப்புகின்றானோ அவனை எமன்
நெருங்கமாட்டான்.மீறி தவறான
எண்ணங்களினால் ஏற்படும் போக்குவரத்து
செலவினால் கிணற்றில் நாதத்திற்கு பதிலாக
கபமாக மரணத்தின் அஸ்திவாரம்
போடப்படுகிறது.
வள்ளலார் கூறிய சுத்த சன்மார்க்க அனுபவம்
கண்டத்திற்கு மேல் ஏன்?? என்பதும்,
ஞானமூலிகையான கரிசாலையும்
தூதுவளையும் பயன்பாடு எதற்கு என்பதும்,
மேல் ஆதாரங்களை பற்றியும், உடுக்கை,
சூலத்தின் வடிவங்கள் எதற்கு என்பதை
படத்தைக் கொண்டு படித்தால்
புரிந்துகொள்ளலாம். அண்ணாக்கை
உண்ணாக்கை பற்றி எழுதாத சித்தர்களே
இல்லை. இதன் அடிப்படை கொண்டே
வாசியோகம் பழகப்படுகிறது. ஊதறிந்து
ஊதுபவனே சித்தன் என்று அகத்தியர்
ஞானத்தில் கூறிப்பிட்டதும் இதுவே ஆகும்.
பாரடா மனந்தனை உண்ணாக்கின் நேராய்ப்
பத்தியே அண்டமதைப் பார்க்கும்போது
ஆரடா வாசியுந்தான் பிடரிமார்க்கம்
ஆகாசப் பிரமத்தில் அடங்கிப்போகும்
நேரடா நிருவிகற்ப சமாதியாச்சு
நித்யபிர்மச்சாரி என்று பேருண்டாச்சு
வீரடா சிலம்பொலியுங் காதிற்கேட்கும்
வேலெடுத்து வீதிசுத்தி வருகலாச்சு.
வீரடா அண்ணாக்கின் நேரே மைந்தா
மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.
மேலே உள்ள பாடல்கள் சுப்பிரமணியர்(அகத்தி­
யருக்கு உபதேசித்தது) மற்றும் காகபுசண்டர்
ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டது.
இப்பாடல்களை உங்கள் அனுபவத்தில்
கொண்டுவருவது எப்படியெனில், நீங்கள்
உள்வாங்கும் சுவாசத்தை கவனித்தால், அது
உங்கள் அடிவயிறுவரை சென்று வெளியேரும்.
இதற்கு பெயர் கீழ்கதி(அதோகதி). இதுவே
மனதை உண்ணாக்கில் வைத்து மூச்சை
கவனித்து(இழுத்தும் விட்டும்) பாருங்கள்,
உங்கள் மூச்சு மேல் கதியாக உண்ணாக்கிற்கு
மேலே செல்வதை உணர்வீர்கள். இதற்கு பெயர்
ஊர்த்துவ கதியாகும். சிவனின் ஊர்த்துவ
தாண்டவமும் இதை குறிப்பதேயாகும். இப்படி
மனதை உண்ணாக்கில் வைத்து சுவாசிக்கும்
முறையே வாசியோகமாகும். சித்தர்கள்
ஞானத்தில் இதுபோன்ற பாடல்கள்
கொட்டிகிடக்கின்றது. அகத்தியர் மூச்சேதான்
தெய்வம் என்றும் அண்ணாக்கின்
விவரங்களையும் நேரடியாக தனது ஞானத்தில்
எழுதிவிட்டார். மேலும் ஆழமான புரிதலுக்கு
அவர்கள் பாடல்களை ஊன்றி படிக்கவும்.
மேலே கூறப்பட்ட முறைதான்
வாசியோகமாகும். இதற்கென்று தனித்தனி
தியானமுறைகளோ பயிற்சிகளோ எதுவும்
கிடையாது. வாசியோகம் என்றால் மேலே
குறிப்பட்ட முறை மட்டும்தான். இதை ஒரு
உண்மையான குருமுகமாக அறிவது மிகவும்
சிறந்தது. அப்படிப்பட்ட குருவை
கண்டுபிடிப்பது மிகவும் சுலபமாகும்.
எப்படியெனில்,
உங்களாலும், உங்கள் பணத்தாலும் அவருக்கு
ஆவது ஒன்றுமில்லை, எளிமையாக இருப்பார்.
வாசி லயமாகின் அகசுவாசம் மட்டுமே
ஓடுவதால் அவருக்கு வெளிமூச்சு ஓடாது.
இப்படிப்பட்டவரால் உங்களுக்குள் ஒரு
நொடியில் வாசியை லயப்படுத்த முடியும்.
பாபாஜி கிரியாவை பற்றி தெரிந்து கொள்ள
kriyayogainfo.net என்ற முகவரிவை
பார்க்கவும், அனைத்தும் வெளிப்படையாக
உள்ளது. சிவானந்தரின் சித்த வித்தையை
கற்றுகொள்ள healer baskarரின் வாசியோக
தலைப்பில் YouTubeல் பார்க்கவும். சித்த
வித்தையில் உண்மையான முறையில் தீக்கை
அளிப்பவர்கள், கதியையும் நிஷ்டையையும்
சரியான முறையில் பிடிக்க கற்றுதருவார்.
அப்படி படிக்கும் அந்த நிமிடமே ஆத்ம
அமைதியை உங்களால் உணரமுடியும்.
இவர்கள் யாரும் பணம் வாங்கவே மாட்டார்கள்.
இப்படி யாரும் கிடைக்காத பட்சத்தில்
அகத்தியரையோ, முருகனையோ,
காகபுசண்டரையோ மானசீகமாக குருவாக
ஏற்றுக்கொண்டு பயபத்தியுடன் மேலே உள்ள
முறையை பயிற்சி செய்யுங்கள். உண்மையான
பக்திக்கு குருவின் அருள் கண்டிப்பாக உண்டு.
இப்படி வாசி இல்லாமல் இறைநிலை
அடையமுடியாத என்றால்??? கண்டிப்பாக
முடியும்!!! அதற்கு பெயர் ஞானசரியை, இந்த
முறையை விட எளிமையானதும் இல்லை,
கடினமானதும் இல்லை. இதை ஞானிகள்
தங்கள் யோகத்தோடு இணைத்தே
செய்கின்றனர். இதை தெளிவாக
விளக்கியவர்களில் வள்ளலார், காரை சித்தர்
போன்றோர் உள்ளனர். அடுதடுத்த பதிவுகளில்
இவற்றைபற்றி காண்போம்...
மண்மனம் எங்குண்டோ வாயுவும்(வாசி)
அங்குண்டு, என்பதற்கு ஏற்றார்போல்
மந்திரம்,தந்திரம் போன்ற அனைத்து
பயிற்சிகளும் மனதை லயமடைய
செய்யவேயன்றி வேரொன்றுமில்லை.
இதில்
சுவாசத்தைக்கொண்டு செய்யும் கலைகளே
சிறந்தது என்பதால்தான் உலகமுழுவதும்
வாசியோகம், இராஜயோகம், கிரியா யோகம்
போன்ற வெவ்வேறு பெயர்களில் கற்று
தரப்பட்டாலும், அனைத்தும் ஒன்றே.
24 நிமிட ஹம்ஸ தியானம் 24 மணிநேரம்
தியானம் செய்ததற்கு நிகரானது. 24 நிமிட
வாசியோகம் 24 மணிநேர ஹம்ஸ
தியானத்திற்கு நிகறானது. 24 நிமிட வாசியால்
நமது மூளையின் பரிணாம வளர்ச்சி ஒரு
வருடம் ஆகும். இவை லாகிரி மகாசாயர்
எழுதிய டைரியிலிருந்து எடுக்கப்பட்டது.
என்னை த்விஜன் என்ற மறு பிறப்பாளன் தான்
அறிந்துகொள்ளமுடியும் என்று கீதையிலே
கிருஸ்ணர் போதிக்கின்றார், இதையேதான்
மாற்றிபிறந்தல் என்று சித்தர்கள்
போதிகின்றனர். அப்படி மாற்றி பிறக்கும்
மறுபிறப்பாளன் இந்த ஐந்தாவது யோனியை
கொண்டே பிறக்கிறான்.
பிறப்பு எடுக்க ஒரு யோனி,
பிறப்பு அறுக்க ஒரு யோனி,
பிராணன் உட்புக ஒரு குதம்,
அபாணன் வெளியேற ஒரு குதம்,
சளி வெளியேற ஒரு குதம்,
மலம் வெளியேற ஒரு குதம்,
மாயையில் நாம் அகப்பட ஒரு கன்னித்திரை,
நம்மில் மாயை அகப்பட ஒரு திரை,
கீழ்த்திரை கிழிந்தால் மாயை,
மேல்திரை விலக்கினால் சாயை,
கீழ்த்திரை விலக்கினால் தான் விந்து
கருப்பையை அடைந்து கரு உருவாகி
குழந்தையை காணமுடியும்.
அதேபோல் மேல்திரை விலக்கினால்தான் நாதம்
விந்தையடைந்து கருக்குழந்தையை
காணமுடியும்.
தந்திர வாமத்தில் மூலாதாரம்
கண்டுகொள்ளப்படாது, ஆனால்
சுவாதிஷ்டானமே முக்கியமாக
கருதப்படுகிறது.
அதேபோல் குண்டலினி யோகத்தில் சகஸ்ராரம்
கண்டுகொள்ளப்படாது, ஆனால் ஆக்கினை
முக்கியமாய் கருதப்படும்.
தந்திராவில் மூலாதாரம் 1008 இதழாக
கூறப்படுகிறது.
யோகத்தில் சகஸ்ராரம் 1008 இதழாக
கூறப்படுகிறது.
இந்த உலகத்தில் உதிக்கும் அனைத்து
உயிர்களும் நால்வகை யோனிகளிருந்தே
உதிக்கின்றன, அவைகள் வித்து(விதை),
புழுக்கம், முட்டை மற்றும் கருவாகி
கர்ப்பத்திலிருந்து ஆகும். இதில் மனிதன்
பிறப்பெடுக்க ஒரு யோனி. பிறப்பை அறுக்கும்
யோனி என்பது, நமது வாய்க்குள் உண்ணாக்கு
அருகில் உள்ள துவாரமே ஐந்தாவது
யோனியாகும். நாராயணன் பள்ளிகொண்ட
நாறாத யோனி இதுவேயாகும். எவனொருவன்
இந்த ஐந்தாவது யோனியில் பிறப்பெடுக்கிறா
னோ, அவனே த்விஜன், அதாவது
மறுபிறப்பாளன் ஆகும். இதை ஞானிகள்
மாற்றிபிறந்தல் என்பர். பிராணன் உட்புகும்
மூக்குநுனி உட்வாசலையும் குதம் என்பர்,
அதன் வழியே சளி வெளியேறுகின்றது.
மலமும் மலக்காற்றென்னும் அபாணனும்
வெளிப்படும் மலதுவாரத்தையும்
குதமென்பர்.
பெண்ணின் யோனி துவாரத்திலிருந்து
2.5செ.மீ. தூரத்திலுள்ள கன்னித்திரை
என்னும் சவ்வைப்போலவே மேலேயும்
ஒருத்திரை இருப்பதாக கூறப்படுகிறது. மேலே
உள்ள அந்த சவ்வு கபத்தால் ஆனதாகும். கீழே
எவ்வாறு கன்னித்திரை கிழிவதைப் போலவே
மேலுள்ள கபப்படலச்சவ்வை திறந்தே
ஆகவேண்டியுள்ளது. மேல்திரை கிழிந்தால்
அதாவது பூட்டு திறந்தால்தான் நாதவிந்து
கலப்பு. கீழ்த்திரை கிழிந்தால் விந்துநாதக்
கலப்பு. பெண்ணோ ஆணோ பருவமடைய
பண்ணிரண்டு வருடங்கள் எடுக்கும், அதன்
பிறகே மாத விலக்கும் குழந்தை பெற்றெடுக்க
தகுதியும் உண்டாகும். உறவு கொண்டால்
மாதவிலக்கு இரத்தம் நின்று, அந்த
விந்துநாதக்கலப்போடு இரத்தமும் சுத்தமாகி,
இணைந்து கரு உண்டாகிறது. அதே போன்று
ஒரு ஞானவானுக்கும் பருவபக்குவமடைய
பண்ணிரண்டு வருடங்கள் ஆகும். அதன்பின் கப
நீர் இறங்கி நாதங்கேட்டலின் (உறவு) மூலம்
அக்கபமே சுத்தமான அமிர்தமாகிறது. இதையே
ஞானிகள் மாற்றிப் பிறக்கும் மருந்து என்பர்.
விந்தான ஒளியுடன் கலப்பதன் மூலம்
ஒளியான குமரியாகிய சுப்பிரமணியன்
கண்ணிற்கு குழந்தையாக தெரிகின்றான். இவன்
எதைக்கண்டாலும், எங்கு பார்த்தாலும், அங்கே
நம் பார்வைக்கும் பார்க்கும் பொருளுக்கும்
குறுக்கே இருப்பதனாலேயே நந்தி என்றும்
அழைக்கப்படுகிறான்.
வாமாச்சாரத்தில்
மூலாதாரமே 1008 இதழ் எனவும், யோகத்தில்
சகஸ்ராரமே 1008 இதழெனவும்
கூறப்படுகிறது. யோகத்தில் சகஸ்ராரத்தை
தொட்டாலும் ஆக்கினையே முக்கியமாய்
கொள்ளப்படுகிறது. அதேபோல் தந்திர
வாமத்தில் மூலாதாரம் கண்டுகொள்ளப்படவ
ில்லை சுவாதிஷ்டானமே கண்டுகொள்ளப்படு
கிறது. உடலில் மிகச்சிறிய அணு
விந்தணுவாகவும், பெரிய அணு
கருமுட்டையாகவும் உள்ளது. மேலும்
வாமத்திலும் சுரோணிதமெனும் நாதத்தை
குறிமூலமாய் வாங்கி நாதவிந்து கலப்பே
நடைபெறுகிறது.
சிதம்பர சக்கரம்
-----------------------------------
"சிதம்பர சக்கரம் தான் அறிவார்- இந்த
சீமையில் உள்ள பெரியோர்கள் சிதம்பர சக்கரம்
தானும் என்றால்- அதற்குள் தெய்வத்தை
யல்லோ அறியவேணும்".
சிதம்பர சக்கரத்தின் விளக்கத்தை சமீபத்தில்
வந்த வள்ளலார் அடிகள், தனது அகவலில்
தெளிவாக எழுதியுள்ளார். சகோதர
சகோதரிகள் அனைவரும் அகவலை
ஒருமுறையாவது படித்து பார்க்கவும்.
ஆன்மீகத்தின் ரகசியமான முறைகள் மற்றும்
சூட்சமங்கள் உங்களுக்குள் கேள்வியாய்
உதித்து அதை நோக்கி பயணிக்க வைக்கும்.
விடை என்பது எப்படி வேண்டுமானாலும்
கிடைக்கலாம். சிதம்பர சக்கரத்தை ஸ்தூலம்,
சூட்சமம், காரணம் என பல பிரிவுகளில்
விளக்கிக் கொண்டு செல்லலாம். இப்பதிவில்
சுவாசத்தால் ஏற்படும் மாற்றத்தையும் அதில்
இப்பூதங்களில் செயல்பாடுகளையும்
முதலில் காண்போம்.
சரமானது மண்ணை சார்ந்து நடக்கும்போது,
மண்ணில் மண் நடந்தால்- எதிலும் நிறைவு
உண்டாகும்,
மண்ணில் நீர்- அடிசேரலாம்,
மண்ணில் காற்று- அலைந்து அலைந்து
அவனடி சேர்வர்,
மண்ணில் நெருப்பு- உடல் உஷ்ணம்
அதிகமாகும்,
மண்ணின் ஆகாயம்- பிடி கிடைக்காமல்
சுற்றிக்கொண்டே இருப்பர்.
சரமானது நீரை சார்ந்து நடக்கும்போது,
நீரில் நிலம்- மூச்சு நீருக்குரிய
சரத்திலாரம்பித்து மண்ணிற்குரிய பிருதிவி
சரத்தில் முடிந்தால் கலத்தல் எனும் ஐக்கிய
பாதையான சமாதி நிலையை அடையலாம்,
நீரில் நீர்- எல்லாவற்றிலும் வளர்ச்சி,
நீரில் நெருப்பு- உடல் குளிர்ச்சியாகும்,
நீரில் காற்று- அமிர்தம் சுரக்கும்,
நீரில் ஆகாயம்- அப்படியே அதிர்ந்து போய் ஒரு
சில நிமிடங்கள் இருக்கும் நிலையில்
இம்மூச்சு ஓடும்.
சரமானது தீயை சார்ந்து நடக்கும்போது,
தீயில் மண்- ஆயுள் நீட்டிப்பு,
தீயில் நீர்- ஆயுள் குறைவு,
தீயில் தீ- இருநிலை மாற்றம்,
தீயில் காற்று- மயக்கத் தோற்றத்தை
உருவாக்கும்,
தீயில் ஆகாயம்- புவிஈர்ப்பு விசையை மீற
முடியும்.
சரமானது காற்றை சார்ந்து நடக்கும்போது,
காற்றில் மண்- நோய் அறிகுறி,
காற்றில் நீர்- விந்து மேலேறும்,
காற்றில் தீ- உடம்பில் தீயின் சுழற்சியை
காணலாம்,
காற்றில் காற்று- காந்தவியல் அழுத்தம்
மேற்பட்டு தலை கணக்கும், நாதம் கேட்கும்,
காற்றில் ஆகாயம்- பாவபுண்ணியம் கலைந்து
எரிந்துவிடும் நிலை.
சரமானது ஆகாயத்தை சார்ந்து நடந்தால்,
ஆகாயத்தில் மண்- உச்சி திறக்கும்,
தியானத்திற்கு உகந்தது,
ஆகாயத்தில் நீர்- நம் சக்தியானது இடம்விட்டு
இடம் நகரும்,
ஆகாயத்தில் காற்று- விசுத்தியில் நிற்கும்,
ஆகாயத்தில் தீ- நந்தியாகிய பரமாத்மாவை
தெளிவாக காண முடியும்,
ஆகாயத்தில் ஆகாயம்- இருள் நிலை, மாயை,
முழு ஞானம் உற்பத்தியாகும்.
மேலும் சந்திரகலை குளிர்ச்சியாக இருப்பதால்
அது உஷ்ணத்தை நாடி செல்லும், இதில்தான்
அறிவு உதிக்கின்றது. இதேபோல் சூரியகலை
உஷ்ணமானதால் குளிர்ச்சியை நோக்கி
செல்லும், இதில் மாயை அல்லது பிரமை
உண்டாகின்றது. பிரமை என்பது பிரம்மதோடு
இணைந்திருப்பது என்ற பொருளாகும். இந்த
வேறுபாடுகளை கொண்டு நீங்களே உங்கள்
உள்நிலையும் உங்கள் வெளி உலக
நிலையையும் துல்லியமாக ஒப்பிட்டு பார்த்து
கொள்ளலாம்.
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில்
என்பதற்கு ஏற்றாற் போல் இந்த பிண்டத்தில்
(உடலில்) பஞ்சபூத சரத்தால் என்னென்ன
மாற்றம் ஏற்படுகின்றதோ அதேபோல்
அண்டமாகிய பிரபஞ்சத்திலும் மாற்றம் நிகழும்.
முந்தைய பதிவு உங்கள் மனதில் மேலும்
தெளிவாக பதிய வேண்டுமெனில் கீழேயுள்ள
சாதாரணமாக நடைமுறையில்(Practical
changes around us in the nature) ஏற்படும்
இயற்கை மாற்றத்தை புரிந்துகொண்டால்
போதுமானது. இதுவே நம் உடலுக்கு உள்ளும்
வெளியும் நிகழ்பவை.
பிருதவியில் ஏற்படும் மாற்றம்
மண்ணை மண்ணில் போட்டால்- நிறையும்,
மண்ணை நீரில் போட்டால்- அடி செல்லும்,
மண்ணை காற்றில்- அலைந்து வேறிடம் பின்பு
கீழ் அடிவிழும்,
மண்ணை தீயில்- உஷ்ணமாகும், மண்ணை
ஆகாயத்தில்- சுழலும்.
அப்புவில் ஏற்படும் மாற்றம்
நீரை மண்ணில் கலந்தால்- பரவும்,
நீரை நீரில்- பெருகும்,
நீரை தீயில்- குளிர்ச்சி,
நீரை காற்றில்- ஆவியாகி மேகமாகி மழை
வரும்,
நீரை ஆகாயத்தில்- உறை நிலை.
தேயுவால் ஏற்படும் மாற்றம்
தீயை மண்ணில் போட்டால்- அழியாநிலை
(உஷ்ணம்),
தீயை நீரில் போட்டால்- அழிவுநிலை, தீயை
தீயில்- இருநிலை மாற்றம்,
தீயை காற்றில்- அனல், கானல்நீர், வெக்கை,
உருக்கம்,
தீயை ஆகாயத்தில்- குமிழாகி பறக்கும்.
வாயுவால் ஏற்படும் மாற்றம்
காற்றை மண்ணில்- விரிசல்,
காற்றை நீரில்- நீர் சுழற்சி,
காற்றை தீயில்- தீ சுழற்சி,
காற்றை காற்றில்- காந்தவியல் அழுத்தம்,
காற்றை ஆகாயத்தில்- மேகம் கலையும்.
ஆகாயத்தால் ஏற்படும் மாற்றம் ஆகாயத்தை
மண்ணில்- பிரளயம், தியானம்,
ஆகாயத்தை நீரில்- புவி நகரும், இடமாறும்,
ஆகாயத்தை தீயில்- ஒளி பெருகும்,
ஆகாயத்தை காற்றில்- கடல்நீர் உள்வாங்கும்,
ஆகாயத்தை ஆகாயத்தில்- இருநிலை, மாயை,
பிரமை.
நம் ஸ்தூல சூட்சும சரீரங்களில் ஸ்தூலமாக
மற்றும் சூட்சுமமாக நடைபெறும் காரண
காரியங்களுக்கு பஞ்சபூதங்களின் பயன்பாடு
பற்றி காண்போம்.
ஸ்தூலத்தில்,
மண்ணில் மண் சேர்ந்தால் உடலில் சக்தி
குறைந்து அசதி ஏற்படும்.
மண்ணில் நீர்- உடலில் மாமிசம்
உருவாகின்றது,
மண்ணில் தீ- சருமமாகிய தோல்
உருவாகின்றது,
மண்ணில் வாயு- நரம்புகளும்,
மண்ணில் ஆகாயம்- ரோமமும்,
நீரில் நீர்- சிறுநீரும்,
நீரில் மண்- உமிழ்நீரும்,
நீரில் வாயு- உதிரமும்,
நீிரில் தீ- வியர்வையும்,
நீரில் ஆகாயம்- சுக்கிலமும்,
தீயில் தீ- நேத்திர கண்ணும்,
தீயில் ஆகாயம்- செவியும்,
தீயில் வாயு- சரீரமும்,
தீயில் நீர்- வாயும் நாக்கும்,
தீயில் மண்- நாசியும்,
காற்றில் மண்- இருதயமும் பிராணக் காற்றும்,
காற்றில் நீர்- குதமும் அபான வாயுவும்,
காற்றில் காற்று- சர்வ நாதங்களும்
வியானனும்,
காற்றில் தீ- கழுத்தும் உதானனும்,
காற்றில் ஆகாயம்- தொப்புளும், சமானனும்,
ஆகாயத்தில் மண்- இருதயமும்,
ஆகாயத்தில் நீர்-நாசியில் பித்தமும்,
ஆகாயத்தில் தீ- மார்பும்,
ஆகாயத்தில் காற்று- கண்டமும்,
ஆகாயத்தில் ஆகாயம்- சிவமும்
உருவாகின்றன.
சூட்சுமத்தில்,
மண்ணில் மண் கலந்து குதமும்,
மண்ணில் நீர்- குய்யமும்,
மண்ணில் தீ- கைகளும்,
மண்ணில் காற்று- பாதங்களும்,
மண்ணில் ஆகாயம்- வாக்கும்,
நீரில் ஆகாயம்- சத்தமும்,
நீரில் காற்று- தொடு உணர்வும்,
நீரில் தீ- பார்வையும்,
நீரில் நீர்- சுவையும்,
நீரில் மண்- வாசனையும்,
தீயில் தீ- பசியாகிய தீபாக்கினியும்,
தீயில் மண்- தாகமும்,
தீயில் நீர்- தூக்கமும்,
தீயில் காற்று- கொட்டாவியும்,
தீயில் ஆகாயம்- சங்கமமாகிய கலத்தலும்,
வாயுவில் வாயு- ஓட்டமும்,
வாயுவில் நீர்- இருத்தலும்,
வாயுவில் தீ- தத்தித்தத்தலும்,
வாயுவில் மண்- நடத்தலும்,
வாயுவில் ஆகாயம்- படுத்தலும், ஆகாயத்தில்
மண்- ஆசையும் அகங்காரமும்,
ஆகாயத்தில் நீர்- துவேசமும்,
ஆகாயத்தில் தீ- பயமும்,
ஆகாயத்தில் காற்று- வெட்கமும், ஆகாயத்தில்
ஆகாயம்- மேகமும் உருவாகின்றன.
ஆக இதன் மூலம் ஒரு பூதமானது மற்றைய
பூதங்களில் கலந்து உடலிலும், வெளியிலும்,
ஸ்தூலமாகவும், சூட்சமமாகவும் ஏற்படும்
மாற்றங்களையும், பஞ்சபூதங்களே பிறக்கும்
முன் தாயின் கருவிலும், பிறந்தபின்
வெளியிலும் உடல் உறுப்புகள் உருவாவதற்கு
காரணமாகும். மேலும் நமக்கு ஏற்படும்
ஆணவம், கோபம், ஆசை,.,. போன்றவற்றிற்கும்
இப்பூதங்களே காரண காரியமாகும். இவை
அனைத்தையும் அனுபவத்தில் உணர
வாழ்த்துக்கள்.

Monday, December 7, 2015

பணம் பொங்கும் பால் காளான் வளர்ப்பு,

Vikram Bala added 10 new photos — feeling optimistic.
பணம் பொங்கும் பால் காளான் வளர்ப்பு,
சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! பால் காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். மாதம் ஒரு லட்சம் (100000)வரை சம்பாதிக்கலாம். இனி பால்க்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..
மருத்துவ பலன்களும், உணவு முறையும்:
இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.
இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.
இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.
எப்படி விற்பனை செய்வது?
(Marketing)
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் நாற்பது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 190 ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.
முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஐந்து நாள் வரைக்கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் பத்து நாட்கள் வரைக்கும் வைக்கலாம்.செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.
தமிழ் நாட்டில் பல இடங்களில் காளான் வளர்ப்புப் பற்றி பயிற்சி வகுப்புகளை நிகழ்த்தி வருகிறார் திரு.சுந்தர ராஜன் என்பவர். இவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்ற ஊரில் “காளான் வளர்ப்பு பண்ணை மற்றும் விதை தயாரிப்பு ஆய்வுக் கூடம்” என்று ஒரு கூடத்தை நிறுவி செயல்பட்டு வருகிறார்.
தவிர இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு காளான் வளர்ப்பு பற்றி ஒருநாள் பயிற்சி அளித்த தோடு அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கான உதவியும் செய்து வருகிறார்.
காளான் வளர்க்க வங்கியில் கொடுக்கப்படும் கடன் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஆகும்.
காளானில் உள்ள சத்துக்கள்:
காளானில் அதிக புரோட்டீன் சத்து உள்ளது. எந்தத் தாவரத்திலும் இல்லாத சத்து இதில் உள்ளது.
தாவர வகைகளிலேயே அதிக புரோட்டீன் சத்து உள்ள ஒரே வகைத் தாவரம் காளான் ஆகும். இதனால் தான் இதன் விலையும் அதிகம்.
காளான் உணவின் மகத்துவங்கள்:
உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும்
நீரழிவு, புற்றுநோய்க்குத் தடுப்பாய் செயல்படும்.
சர்க்கரை நோய்க்குத் தடுப்பாய்ச் செயல்படும்.
இதய நோய்க்குத் தடுப்பாய்ச் செயல்படும்.
ஒட்டு மொத்த நோய் எதிப்புத் தன்மையை உடலுக்குத் தரும்.
இவ்வாறு காளான் வளர்ப்பில் பல நன்மைகளைக் கூறிய திரு.சுந்தரராஜன் என்பவர் “NATURAL KALAN PANNAI” என்ற பெயரில் காளான் வளர்ப்பு மற்றும் விதை தயாரிப்பு ஆய்வுக் கூடத்தை நிறுவி, இயங்கி வருவதின் நோக்கம் என்னவெனில்…
ஆரோக்கியமான உணவு மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல்.
தமிழக உணவுத் தயாரிப்பு தமிழருக்கு மட்டுமின்றி உலகிற்கும்.
விவசாயத் தொழிலை லாபகரமாக்குதல்.
கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு வாழ்வாதாரம் உருவாக்குதல்.
இவரின் அறிமுகத்தில் காளான் உணவு வகைகள்:
காளான் சூப் தயாரிப்பு.
காளான் டின் (உடனே உண்பதற்கேற்ற தயாரிப்பு)
காளான் மசாலா (குழம்பிற்கு)
காளான் கிரேவி
காளான் பிரட், காளான் பிஸ்கெட், காளான் ஊறுகாய்
காளான் கட்லெட், காளான் பக்கோடா
அதிக புரோட்டீன் உள்ள காளான் பானம்
காளான் பிரியாணி
– போன்ற உணவுகள்.
காளான் வளர்க்கும் விவசாய மக்களுக்கு காளான் விதை, மற்றும் வளர்க்கத் தேவையான அனைத்துப் மூலப்பொருட்களையும் கொடுத்து உதவுகிறோம். இவர்கள் உற்பத்தி செய்த மொத்த காளான்களையும் எங்கள் நிறுவனம் வாங்கிக் கொண்டு அதற்குறிய பணத்தை, விற்பவரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டு வருகிறது. தவிர அனைத்து மாவட்ட மகளிர் குழுக்களுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் எங்கள் நிறுவனம் காளான் வளர்ப்பில் பயிற்சி அளித்து வருகிறது.
அது தவிர கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு குறிப்பாகத் தாவரவியல் படிக்கும் மாணவர்களின் ஆய்வுக்கு உதவி செய்து வருகிறோம். காளான் வளர்ப்பு பற்றியும் அறிவுரை வழங்கி வருகிறோம்.
இதைத் தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் பயிற்சி அளித்து பலருக்கும் வழிகாட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறேன். இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். நலிந்த கொண்டிருக்கும் விவசாயத்தை லாபமான தொழிலாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியும், அதற்காகத் தீவிரமாக உழைத்தும் வருகிறேன். வெளிநாடுகளில் காளான் ஏற்றுமதி செய்ய மாதம் 5000 கிலோ தேவை இருக்கிறது. அதனை எட்டிவிட வேண்டும் என்ற முனைப்போடும் செயல்பட்டு வருகிறேன்.
மேலும் தொடர்புக்கு – திரு. சுந்தரராஜன் – 9600334848
NATURAL KALAN PANNAI
மேலும் இதை நீங்கள் SHARE செய்தால் பல பேர்க்கு உதவியாக இருக்கும். . . .

Wednesday, December 2, 2015

அனுமாரின் வசியக் கட்டு !!!

இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை பலிக்காது. என்கிறார் அகத்தியர்.
அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர்.
திருநீற்றைக் கையில் எடுத்து மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார் அகத்தியர்.
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று
அனுதினமும் ஓதும் அனுமந்தா லங்காபுரி ராவண சம்ஹாரா சஞ்சீவி ராயா
ஓடிவா உக்கிரமாக ஓடிவா அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய்
பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு
கொட்டு கொட்டு தாக்கு தாக்கு ஓம் ஆம் இளைய ஹனுமந்தா வா வா
சுவாஹா"