Wednesday, December 2, 2015

அனுமாரின் வசியக் கட்டு !!!

இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை பலிக்காது. என்கிறார் அகத்தியர்.
அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர்.
திருநீற்றைக் கையில் எடுத்து மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார் அகத்தியர்.
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று
அனுதினமும் ஓதும் அனுமந்தா லங்காபுரி ராவண சம்ஹாரா சஞ்சீவி ராயா
ஓடிவா உக்கிரமாக ஓடிவா அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய்
பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு
கொட்டு கொட்டு தாக்கு தாக்கு ஓம் ஆம் இளைய ஹனுமந்தா வா வா
சுவாஹா"

No comments:

Post a Comment