Tuesday, December 8, 2015

சிதம்பர ரகசியம்

-கண்ணாக்கு மூக்கு செவி ஞானக் கூட்டத்தில்
பண்ணாக்கு வைத்த பழம் பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கினூடே அகண்ட வொளி காட்டி
பண்ணாக்கி நம்மைப் பதித்தவரே...
என்பதில் நந்திகேசவர் பெரிய நாக்காக
இருக்கிறார். அதற்கு புறத்திலுள்ள கண்ட
ஸ்தானத்தில் அண்ணாக்கு இருக்கிறது.
அதுவே அகாரமாகும். அதற்கு தூக்கிய பாதம்,
குஞ்சிதபாதம், திருவடி என்ற பெயர்களும்
உண்டு. அந்த அண்ணாக்குக்கு மேலே ஒரு
நாக்கு இருக்கிறது. அதற்கு பேர் உண்ணாக்கு.
அது உகாரம் ஆகும். அந்த அண்ணாக்கு
உண்ணாக்கு என்ற இரண்டும் தராசுமுனை
போல நிற்கிறது. சுவாமி இடது பாதம்
அண்ணாக்கு மேலே ஊன்றி, வலது பாதம்
புருவ நுனியிலிலே நிற்கிறது. இந்த வலது
பாதம் ஆடியபாதம், நற்றாள் ஆகும். அந்த
அண்ணாக்கு இருக்கப்பட்ட இடத்திலே
மனோன்மணி சக்தி வாசம் செய்கிறாள்.
உண்ணாக்குக்கு மேலே புருவமத்தியிலே
சதாசிவம் வாசம் செய்கிறார்...
சதாசிவனும் மனோன்மணியும் இருக்கப்பட்ட
இடமே சத்தம் பிறந்த இடம். அதுதான்
முச்சந்திகள் கூடும் இடமாகிய அகாரமும்
உகாரமும் தராசுமுனையாய் நிற்கும்.
இவ்விரண்டுக்கும் நடுவே மனோன்மணியும்
சதாசிவனும் நிற்கிறார்கள்.
இந்த இடமே இன்பதுன்பம் இல்லாத இடம்.
தீட்டு திடுக்கு அற்ற இடம். சகலமும்
விளையாடப்பட்ட இடமாகும். தூக்கிய
பாதத்தில் அணிந்த வீரகண்டா மணியும் பாதச்
சிலம்பும் சதங்கையும் அவ்விடத்திலே
ஒலிக்கும். அப்படி ஓசை உண்டான பின்பு
சதாசிவமும் மனோன்மணியும் தரிசனமாகும்.
பிறகு ஒரு சோதி தோன்றும், அச்சோதியில்
லயப்பட்டால் வெகுகாலம் ஒருவர் சீவித்து
வாழலாம்...
இன்னும் விளக்க வேண்டுமானால்,நம் உடலில்
உண்ணாக்கு மேலே உச்சிக்கு கீழேயுள்ள
பாதை வலம்புரி சங்கென்று அழைக்கப்படும்.இ
ந்த வலம்புரியில் இருகாது குறுக்கிடும்
பகுதியில் ஒரு கிணறு உள்ளது.இந்த
கிணற்றை நாதஉணவுதரும் தருமச்சாலை
என்ற நற்சத்திரங்கள் என்றும் கூறுவர்.இந்த
தருமச்சாலையிலே என்றும் வற்றாத
சக்திநாதனுக்கள் அக்கினியாக கொழுமிக்
கிடக்கின்றன.இந்த நாதனுக்களின்
ஊற்றுக்கண்ணாக மயிராண்டி எனும்
பிடரிக்கண்ணும் இந்த கிணற்றின்
மேல்மூடியாக மூக்காண்டி என்ற
புருவமத்தியின் உட்வாசலான குதம்
இருக்கிறது.
மேலும் இந்த வலம்புரியே மரணந்
தங்குந்தலமென்றும் கேள்வி
உதயஸ்தானமென்றும் நாதாக்களின்
அபிப்ராயம்.ஆகவே எவனொருவன்
வலம்புரியிலுள்ள நாதாந்தக் கிணற்றில்
நாதத்தை எழுப்புகின்றானோ அவனை எமன்
நெருங்கமாட்டான்.மீறி தவறான
எண்ணங்களினால் ஏற்படும் போக்குவரத்து
செலவினால் கிணற்றில் நாதத்திற்கு பதிலாக
கபமாக மரணத்தின் அஸ்திவாரம்
போடப்படுகிறது.
வள்ளலார் கூறிய சுத்த சன்மார்க்க அனுபவம்
கண்டத்திற்கு மேல் ஏன்?? என்பதும்,
ஞானமூலிகையான கரிசாலையும்
தூதுவளையும் பயன்பாடு எதற்கு என்பதும்,
மேல் ஆதாரங்களை பற்றியும், உடுக்கை,
சூலத்தின் வடிவங்கள் எதற்கு என்பதை
படத்தைக் கொண்டு படித்தால்
புரிந்துகொள்ளலாம். அண்ணாக்கை
உண்ணாக்கை பற்றி எழுதாத சித்தர்களே
இல்லை. இதன் அடிப்படை கொண்டே
வாசியோகம் பழகப்படுகிறது. ஊதறிந்து
ஊதுபவனே சித்தன் என்று அகத்தியர்
ஞானத்தில் கூறிப்பிட்டதும் இதுவே ஆகும்.
பாரடா மனந்தனை உண்ணாக்கின் நேராய்ப்
பத்தியே அண்டமதைப் பார்க்கும்போது
ஆரடா வாசியுந்தான் பிடரிமார்க்கம்
ஆகாசப் பிரமத்தில் அடங்கிப்போகும்
நேரடா நிருவிகற்ப சமாதியாச்சு
நித்யபிர்மச்சாரி என்று பேருண்டாச்சு
வீரடா சிலம்பொலியுங் காதிற்கேட்கும்
வேலெடுத்து வீதிசுத்தி வருகலாச்சு.
வீரடா அண்ணாக்கின் நேரே மைந்தா
மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.
மேலே உள்ள பாடல்கள் சுப்பிரமணியர்(அகத்தி­
யருக்கு உபதேசித்தது) மற்றும் காகபுசண்டர்
ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டது.
இப்பாடல்களை உங்கள் அனுபவத்தில்
கொண்டுவருவது எப்படியெனில், நீங்கள்
உள்வாங்கும் சுவாசத்தை கவனித்தால், அது
உங்கள் அடிவயிறுவரை சென்று வெளியேரும்.
இதற்கு பெயர் கீழ்கதி(அதோகதி). இதுவே
மனதை உண்ணாக்கில் வைத்து மூச்சை
கவனித்து(இழுத்தும் விட்டும்) பாருங்கள்,
உங்கள் மூச்சு மேல் கதியாக உண்ணாக்கிற்கு
மேலே செல்வதை உணர்வீர்கள். இதற்கு பெயர்
ஊர்த்துவ கதியாகும். சிவனின் ஊர்த்துவ
தாண்டவமும் இதை குறிப்பதேயாகும். இப்படி
மனதை உண்ணாக்கில் வைத்து சுவாசிக்கும்
முறையே வாசியோகமாகும். சித்தர்கள்
ஞானத்தில் இதுபோன்ற பாடல்கள்
கொட்டிகிடக்கின்றது. அகத்தியர் மூச்சேதான்
தெய்வம் என்றும் அண்ணாக்கின்
விவரங்களையும் நேரடியாக தனது ஞானத்தில்
எழுதிவிட்டார். மேலும் ஆழமான புரிதலுக்கு
அவர்கள் பாடல்களை ஊன்றி படிக்கவும்.
மேலே கூறப்பட்ட முறைதான்
வாசியோகமாகும். இதற்கென்று தனித்தனி
தியானமுறைகளோ பயிற்சிகளோ எதுவும்
கிடையாது. வாசியோகம் என்றால் மேலே
குறிப்பட்ட முறை மட்டும்தான். இதை ஒரு
உண்மையான குருமுகமாக அறிவது மிகவும்
சிறந்தது. அப்படிப்பட்ட குருவை
கண்டுபிடிப்பது மிகவும் சுலபமாகும்.
எப்படியெனில்,
உங்களாலும், உங்கள் பணத்தாலும் அவருக்கு
ஆவது ஒன்றுமில்லை, எளிமையாக இருப்பார்.
வாசி லயமாகின் அகசுவாசம் மட்டுமே
ஓடுவதால் அவருக்கு வெளிமூச்சு ஓடாது.
இப்படிப்பட்டவரால் உங்களுக்குள் ஒரு
நொடியில் வாசியை லயப்படுத்த முடியும்.
பாபாஜி கிரியாவை பற்றி தெரிந்து கொள்ள
kriyayogainfo.net என்ற முகவரிவை
பார்க்கவும், அனைத்தும் வெளிப்படையாக
உள்ளது. சிவானந்தரின் சித்த வித்தையை
கற்றுகொள்ள healer baskarரின் வாசியோக
தலைப்பில் YouTubeல் பார்க்கவும். சித்த
வித்தையில் உண்மையான முறையில் தீக்கை
அளிப்பவர்கள், கதியையும் நிஷ்டையையும்
சரியான முறையில் பிடிக்க கற்றுதருவார்.
அப்படி படிக்கும் அந்த நிமிடமே ஆத்ம
அமைதியை உங்களால் உணரமுடியும்.
இவர்கள் யாரும் பணம் வாங்கவே மாட்டார்கள்.
இப்படி யாரும் கிடைக்காத பட்சத்தில்
அகத்தியரையோ, முருகனையோ,
காகபுசண்டரையோ மானசீகமாக குருவாக
ஏற்றுக்கொண்டு பயபத்தியுடன் மேலே உள்ள
முறையை பயிற்சி செய்யுங்கள். உண்மையான
பக்திக்கு குருவின் அருள் கண்டிப்பாக உண்டு.
இப்படி வாசி இல்லாமல் இறைநிலை
அடையமுடியாத என்றால்??? கண்டிப்பாக
முடியும்!!! அதற்கு பெயர் ஞானசரியை, இந்த
முறையை விட எளிமையானதும் இல்லை,
கடினமானதும் இல்லை. இதை ஞானிகள்
தங்கள் யோகத்தோடு இணைத்தே
செய்கின்றனர். இதை தெளிவாக
விளக்கியவர்களில் வள்ளலார், காரை சித்தர்
போன்றோர் உள்ளனர். அடுதடுத்த பதிவுகளில்
இவற்றைபற்றி காண்போம்...
மண்மனம் எங்குண்டோ வாயுவும்(வாசி)
அங்குண்டு, என்பதற்கு ஏற்றார்போல்
மந்திரம்,தந்திரம் போன்ற அனைத்து
பயிற்சிகளும் மனதை லயமடைய
செய்யவேயன்றி வேரொன்றுமில்லை.
இதில்
சுவாசத்தைக்கொண்டு செய்யும் கலைகளே
சிறந்தது என்பதால்தான் உலகமுழுவதும்
வாசியோகம், இராஜயோகம், கிரியா யோகம்
போன்ற வெவ்வேறு பெயர்களில் கற்று
தரப்பட்டாலும், அனைத்தும் ஒன்றே.
24 நிமிட ஹம்ஸ தியானம் 24 மணிநேரம்
தியானம் செய்ததற்கு நிகரானது. 24 நிமிட
வாசியோகம் 24 மணிநேர ஹம்ஸ
தியானத்திற்கு நிகறானது. 24 நிமிட வாசியால்
நமது மூளையின் பரிணாம வளர்ச்சி ஒரு
வருடம் ஆகும். இவை லாகிரி மகாசாயர்
எழுதிய டைரியிலிருந்து எடுக்கப்பட்டது.
என்னை த்விஜன் என்ற மறு பிறப்பாளன் தான்
அறிந்துகொள்ளமுடியும் என்று கீதையிலே
கிருஸ்ணர் போதிக்கின்றார், இதையேதான்
மாற்றிபிறந்தல் என்று சித்தர்கள்
போதிகின்றனர். அப்படி மாற்றி பிறக்கும்
மறுபிறப்பாளன் இந்த ஐந்தாவது யோனியை
கொண்டே பிறக்கிறான்.
பிறப்பு எடுக்க ஒரு யோனி,
பிறப்பு அறுக்க ஒரு யோனி,
பிராணன் உட்புக ஒரு குதம்,
அபாணன் வெளியேற ஒரு குதம்,
சளி வெளியேற ஒரு குதம்,
மலம் வெளியேற ஒரு குதம்,
மாயையில் நாம் அகப்பட ஒரு கன்னித்திரை,
நம்மில் மாயை அகப்பட ஒரு திரை,
கீழ்த்திரை கிழிந்தால் மாயை,
மேல்திரை விலக்கினால் சாயை,
கீழ்த்திரை விலக்கினால் தான் விந்து
கருப்பையை அடைந்து கரு உருவாகி
குழந்தையை காணமுடியும்.
அதேபோல் மேல்திரை விலக்கினால்தான் நாதம்
விந்தையடைந்து கருக்குழந்தையை
காணமுடியும்.
தந்திர வாமத்தில் மூலாதாரம்
கண்டுகொள்ளப்படாது, ஆனால்
சுவாதிஷ்டானமே முக்கியமாக
கருதப்படுகிறது.
அதேபோல் குண்டலினி யோகத்தில் சகஸ்ராரம்
கண்டுகொள்ளப்படாது, ஆனால் ஆக்கினை
முக்கியமாய் கருதப்படும்.
தந்திராவில் மூலாதாரம் 1008 இதழாக
கூறப்படுகிறது.
யோகத்தில் சகஸ்ராரம் 1008 இதழாக
கூறப்படுகிறது.
இந்த உலகத்தில் உதிக்கும் அனைத்து
உயிர்களும் நால்வகை யோனிகளிருந்தே
உதிக்கின்றன, அவைகள் வித்து(விதை),
புழுக்கம், முட்டை மற்றும் கருவாகி
கர்ப்பத்திலிருந்து ஆகும். இதில் மனிதன்
பிறப்பெடுக்க ஒரு யோனி. பிறப்பை அறுக்கும்
யோனி என்பது, நமது வாய்க்குள் உண்ணாக்கு
அருகில் உள்ள துவாரமே ஐந்தாவது
யோனியாகும். நாராயணன் பள்ளிகொண்ட
நாறாத யோனி இதுவேயாகும். எவனொருவன்
இந்த ஐந்தாவது யோனியில் பிறப்பெடுக்கிறா
னோ, அவனே த்விஜன், அதாவது
மறுபிறப்பாளன் ஆகும். இதை ஞானிகள்
மாற்றிபிறந்தல் என்பர். பிராணன் உட்புகும்
மூக்குநுனி உட்வாசலையும் குதம் என்பர்,
அதன் வழியே சளி வெளியேறுகின்றது.
மலமும் மலக்காற்றென்னும் அபாணனும்
வெளிப்படும் மலதுவாரத்தையும்
குதமென்பர்.
பெண்ணின் யோனி துவாரத்திலிருந்து
2.5செ.மீ. தூரத்திலுள்ள கன்னித்திரை
என்னும் சவ்வைப்போலவே மேலேயும்
ஒருத்திரை இருப்பதாக கூறப்படுகிறது. மேலே
உள்ள அந்த சவ்வு கபத்தால் ஆனதாகும். கீழே
எவ்வாறு கன்னித்திரை கிழிவதைப் போலவே
மேலுள்ள கபப்படலச்சவ்வை திறந்தே
ஆகவேண்டியுள்ளது. மேல்திரை கிழிந்தால்
அதாவது பூட்டு திறந்தால்தான் நாதவிந்து
கலப்பு. கீழ்த்திரை கிழிந்தால் விந்துநாதக்
கலப்பு. பெண்ணோ ஆணோ பருவமடைய
பண்ணிரண்டு வருடங்கள் எடுக்கும், அதன்
பிறகே மாத விலக்கும் குழந்தை பெற்றெடுக்க
தகுதியும் உண்டாகும். உறவு கொண்டால்
மாதவிலக்கு இரத்தம் நின்று, அந்த
விந்துநாதக்கலப்போடு இரத்தமும் சுத்தமாகி,
இணைந்து கரு உண்டாகிறது. அதே போன்று
ஒரு ஞானவானுக்கும் பருவபக்குவமடைய
பண்ணிரண்டு வருடங்கள் ஆகும். அதன்பின் கப
நீர் இறங்கி நாதங்கேட்டலின் (உறவு) மூலம்
அக்கபமே சுத்தமான அமிர்தமாகிறது. இதையே
ஞானிகள் மாற்றிப் பிறக்கும் மருந்து என்பர்.
விந்தான ஒளியுடன் கலப்பதன் மூலம்
ஒளியான குமரியாகிய சுப்பிரமணியன்
கண்ணிற்கு குழந்தையாக தெரிகின்றான். இவன்
எதைக்கண்டாலும், எங்கு பார்த்தாலும், அங்கே
நம் பார்வைக்கும் பார்க்கும் பொருளுக்கும்
குறுக்கே இருப்பதனாலேயே நந்தி என்றும்
அழைக்கப்படுகிறான்.
வாமாச்சாரத்தில்
மூலாதாரமே 1008 இதழ் எனவும், யோகத்தில்
சகஸ்ராரமே 1008 இதழெனவும்
கூறப்படுகிறது. யோகத்தில் சகஸ்ராரத்தை
தொட்டாலும் ஆக்கினையே முக்கியமாய்
கொள்ளப்படுகிறது. அதேபோல் தந்திர
வாமத்தில் மூலாதாரம் கண்டுகொள்ளப்படவ
ில்லை சுவாதிஷ்டானமே கண்டுகொள்ளப்படு
கிறது. உடலில் மிகச்சிறிய அணு
விந்தணுவாகவும், பெரிய அணு
கருமுட்டையாகவும் உள்ளது. மேலும்
வாமத்திலும் சுரோணிதமெனும் நாதத்தை
குறிமூலமாய் வாங்கி நாதவிந்து கலப்பே
நடைபெறுகிறது.
சிதம்பர சக்கரம்
-----------------------------------
"சிதம்பர சக்கரம் தான் அறிவார்- இந்த
சீமையில் உள்ள பெரியோர்கள் சிதம்பர சக்கரம்
தானும் என்றால்- அதற்குள் தெய்வத்தை
யல்லோ அறியவேணும்".
சிதம்பர சக்கரத்தின் விளக்கத்தை சமீபத்தில்
வந்த வள்ளலார் அடிகள், தனது அகவலில்
தெளிவாக எழுதியுள்ளார். சகோதர
சகோதரிகள் அனைவரும் அகவலை
ஒருமுறையாவது படித்து பார்க்கவும்.
ஆன்மீகத்தின் ரகசியமான முறைகள் மற்றும்
சூட்சமங்கள் உங்களுக்குள் கேள்வியாய்
உதித்து அதை நோக்கி பயணிக்க வைக்கும்.
விடை என்பது எப்படி வேண்டுமானாலும்
கிடைக்கலாம். சிதம்பர சக்கரத்தை ஸ்தூலம்,
சூட்சமம், காரணம் என பல பிரிவுகளில்
விளக்கிக் கொண்டு செல்லலாம். இப்பதிவில்
சுவாசத்தால் ஏற்படும் மாற்றத்தையும் அதில்
இப்பூதங்களில் செயல்பாடுகளையும்
முதலில் காண்போம்.
சரமானது மண்ணை சார்ந்து நடக்கும்போது,
மண்ணில் மண் நடந்தால்- எதிலும் நிறைவு
உண்டாகும்,
மண்ணில் நீர்- அடிசேரலாம்,
மண்ணில் காற்று- அலைந்து அலைந்து
அவனடி சேர்வர்,
மண்ணில் நெருப்பு- உடல் உஷ்ணம்
அதிகமாகும்,
மண்ணின் ஆகாயம்- பிடி கிடைக்காமல்
சுற்றிக்கொண்டே இருப்பர்.
சரமானது நீரை சார்ந்து நடக்கும்போது,
நீரில் நிலம்- மூச்சு நீருக்குரிய
சரத்திலாரம்பித்து மண்ணிற்குரிய பிருதிவி
சரத்தில் முடிந்தால் கலத்தல் எனும் ஐக்கிய
பாதையான சமாதி நிலையை அடையலாம்,
நீரில் நீர்- எல்லாவற்றிலும் வளர்ச்சி,
நீரில் நெருப்பு- உடல் குளிர்ச்சியாகும்,
நீரில் காற்று- அமிர்தம் சுரக்கும்,
நீரில் ஆகாயம்- அப்படியே அதிர்ந்து போய் ஒரு
சில நிமிடங்கள் இருக்கும் நிலையில்
இம்மூச்சு ஓடும்.
சரமானது தீயை சார்ந்து நடக்கும்போது,
தீயில் மண்- ஆயுள் நீட்டிப்பு,
தீயில் நீர்- ஆயுள் குறைவு,
தீயில் தீ- இருநிலை மாற்றம்,
தீயில் காற்று- மயக்கத் தோற்றத்தை
உருவாக்கும்,
தீயில் ஆகாயம்- புவிஈர்ப்பு விசையை மீற
முடியும்.
சரமானது காற்றை சார்ந்து நடக்கும்போது,
காற்றில் மண்- நோய் அறிகுறி,
காற்றில் நீர்- விந்து மேலேறும்,
காற்றில் தீ- உடம்பில் தீயின் சுழற்சியை
காணலாம்,
காற்றில் காற்று- காந்தவியல் அழுத்தம்
மேற்பட்டு தலை கணக்கும், நாதம் கேட்கும்,
காற்றில் ஆகாயம்- பாவபுண்ணியம் கலைந்து
எரிந்துவிடும் நிலை.
சரமானது ஆகாயத்தை சார்ந்து நடந்தால்,
ஆகாயத்தில் மண்- உச்சி திறக்கும்,
தியானத்திற்கு உகந்தது,
ஆகாயத்தில் நீர்- நம் சக்தியானது இடம்விட்டு
இடம் நகரும்,
ஆகாயத்தில் காற்று- விசுத்தியில் நிற்கும்,
ஆகாயத்தில் தீ- நந்தியாகிய பரமாத்மாவை
தெளிவாக காண முடியும்,
ஆகாயத்தில் ஆகாயம்- இருள் நிலை, மாயை,
முழு ஞானம் உற்பத்தியாகும்.
மேலும் சந்திரகலை குளிர்ச்சியாக இருப்பதால்
அது உஷ்ணத்தை நாடி செல்லும், இதில்தான்
அறிவு உதிக்கின்றது. இதேபோல் சூரியகலை
உஷ்ணமானதால் குளிர்ச்சியை நோக்கி
செல்லும், இதில் மாயை அல்லது பிரமை
உண்டாகின்றது. பிரமை என்பது பிரம்மதோடு
இணைந்திருப்பது என்ற பொருளாகும். இந்த
வேறுபாடுகளை கொண்டு நீங்களே உங்கள்
உள்நிலையும் உங்கள் வெளி உலக
நிலையையும் துல்லியமாக ஒப்பிட்டு பார்த்து
கொள்ளலாம்.
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில்
என்பதற்கு ஏற்றாற் போல் இந்த பிண்டத்தில்
(உடலில்) பஞ்சபூத சரத்தால் என்னென்ன
மாற்றம் ஏற்படுகின்றதோ அதேபோல்
அண்டமாகிய பிரபஞ்சத்திலும் மாற்றம் நிகழும்.
முந்தைய பதிவு உங்கள் மனதில் மேலும்
தெளிவாக பதிய வேண்டுமெனில் கீழேயுள்ள
சாதாரணமாக நடைமுறையில்(Practical
changes around us in the nature) ஏற்படும்
இயற்கை மாற்றத்தை புரிந்துகொண்டால்
போதுமானது. இதுவே நம் உடலுக்கு உள்ளும்
வெளியும் நிகழ்பவை.
பிருதவியில் ஏற்படும் மாற்றம்
மண்ணை மண்ணில் போட்டால்- நிறையும்,
மண்ணை நீரில் போட்டால்- அடி செல்லும்,
மண்ணை காற்றில்- அலைந்து வேறிடம் பின்பு
கீழ் அடிவிழும்,
மண்ணை தீயில்- உஷ்ணமாகும், மண்ணை
ஆகாயத்தில்- சுழலும்.
அப்புவில் ஏற்படும் மாற்றம்
நீரை மண்ணில் கலந்தால்- பரவும்,
நீரை நீரில்- பெருகும்,
நீரை தீயில்- குளிர்ச்சி,
நீரை காற்றில்- ஆவியாகி மேகமாகி மழை
வரும்,
நீரை ஆகாயத்தில்- உறை நிலை.
தேயுவால் ஏற்படும் மாற்றம்
தீயை மண்ணில் போட்டால்- அழியாநிலை
(உஷ்ணம்),
தீயை நீரில் போட்டால்- அழிவுநிலை, தீயை
தீயில்- இருநிலை மாற்றம்,
தீயை காற்றில்- அனல், கானல்நீர், வெக்கை,
உருக்கம்,
தீயை ஆகாயத்தில்- குமிழாகி பறக்கும்.
வாயுவால் ஏற்படும் மாற்றம்
காற்றை மண்ணில்- விரிசல்,
காற்றை நீரில்- நீர் சுழற்சி,
காற்றை தீயில்- தீ சுழற்சி,
காற்றை காற்றில்- காந்தவியல் அழுத்தம்,
காற்றை ஆகாயத்தில்- மேகம் கலையும்.
ஆகாயத்தால் ஏற்படும் மாற்றம் ஆகாயத்தை
மண்ணில்- பிரளயம், தியானம்,
ஆகாயத்தை நீரில்- புவி நகரும், இடமாறும்,
ஆகாயத்தை தீயில்- ஒளி பெருகும்,
ஆகாயத்தை காற்றில்- கடல்நீர் உள்வாங்கும்,
ஆகாயத்தை ஆகாயத்தில்- இருநிலை, மாயை,
பிரமை.
நம் ஸ்தூல சூட்சும சரீரங்களில் ஸ்தூலமாக
மற்றும் சூட்சுமமாக நடைபெறும் காரண
காரியங்களுக்கு பஞ்சபூதங்களின் பயன்பாடு
பற்றி காண்போம்.
ஸ்தூலத்தில்,
மண்ணில் மண் சேர்ந்தால் உடலில் சக்தி
குறைந்து அசதி ஏற்படும்.
மண்ணில் நீர்- உடலில் மாமிசம்
உருவாகின்றது,
மண்ணில் தீ- சருமமாகிய தோல்
உருவாகின்றது,
மண்ணில் வாயு- நரம்புகளும்,
மண்ணில் ஆகாயம்- ரோமமும்,
நீரில் நீர்- சிறுநீரும்,
நீரில் மண்- உமிழ்நீரும்,
நீரில் வாயு- உதிரமும்,
நீிரில் தீ- வியர்வையும்,
நீரில் ஆகாயம்- சுக்கிலமும்,
தீயில் தீ- நேத்திர கண்ணும்,
தீயில் ஆகாயம்- செவியும்,
தீயில் வாயு- சரீரமும்,
தீயில் நீர்- வாயும் நாக்கும்,
தீயில் மண்- நாசியும்,
காற்றில் மண்- இருதயமும் பிராணக் காற்றும்,
காற்றில் நீர்- குதமும் அபான வாயுவும்,
காற்றில் காற்று- சர்வ நாதங்களும்
வியானனும்,
காற்றில் தீ- கழுத்தும் உதானனும்,
காற்றில் ஆகாயம்- தொப்புளும், சமானனும்,
ஆகாயத்தில் மண்- இருதயமும்,
ஆகாயத்தில் நீர்-நாசியில் பித்தமும்,
ஆகாயத்தில் தீ- மார்பும்,
ஆகாயத்தில் காற்று- கண்டமும்,
ஆகாயத்தில் ஆகாயம்- சிவமும்
உருவாகின்றன.
சூட்சுமத்தில்,
மண்ணில் மண் கலந்து குதமும்,
மண்ணில் நீர்- குய்யமும்,
மண்ணில் தீ- கைகளும்,
மண்ணில் காற்று- பாதங்களும்,
மண்ணில் ஆகாயம்- வாக்கும்,
நீரில் ஆகாயம்- சத்தமும்,
நீரில் காற்று- தொடு உணர்வும்,
நீரில் தீ- பார்வையும்,
நீரில் நீர்- சுவையும்,
நீரில் மண்- வாசனையும்,
தீயில் தீ- பசியாகிய தீபாக்கினியும்,
தீயில் மண்- தாகமும்,
தீயில் நீர்- தூக்கமும்,
தீயில் காற்று- கொட்டாவியும்,
தீயில் ஆகாயம்- சங்கமமாகிய கலத்தலும்,
வாயுவில் வாயு- ஓட்டமும்,
வாயுவில் நீர்- இருத்தலும்,
வாயுவில் தீ- தத்தித்தத்தலும்,
வாயுவில் மண்- நடத்தலும்,
வாயுவில் ஆகாயம்- படுத்தலும், ஆகாயத்தில்
மண்- ஆசையும் அகங்காரமும்,
ஆகாயத்தில் நீர்- துவேசமும்,
ஆகாயத்தில் தீ- பயமும்,
ஆகாயத்தில் காற்று- வெட்கமும், ஆகாயத்தில்
ஆகாயம்- மேகமும் உருவாகின்றன.
ஆக இதன் மூலம் ஒரு பூதமானது மற்றைய
பூதங்களில் கலந்து உடலிலும், வெளியிலும்,
ஸ்தூலமாகவும், சூட்சமமாகவும் ஏற்படும்
மாற்றங்களையும், பஞ்சபூதங்களே பிறக்கும்
முன் தாயின் கருவிலும், பிறந்தபின்
வெளியிலும் உடல் உறுப்புகள் உருவாவதற்கு
காரணமாகும். மேலும் நமக்கு ஏற்படும்
ஆணவம், கோபம், ஆசை,.,. போன்றவற்றிற்கும்
இப்பூதங்களே காரண காரியமாகும். இவை
அனைத்தையும் அனுபவத்தில் உணர
வாழ்த்துக்கள்.

1 comment:

  1. அருமை அருமை அருமை அருமை நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

    ReplyDelete