Saturday, November 8, 2014

தினசரி வாழ்வில் நான்கு படிகள்

நான்கு வகை சாக்கிரம்.
ஒவ்வொருவரும் தினம் தினம் கீழ்கண்ட நான்கு நிலைகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி சிந்திக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதைப் பற்றி சற்று புரிந்து கொண்டாள் வாசி, சிவ யோகம் போன்ற வற்றை புரிந்து கொள்ளுவது மிகவும் எளிது.
நனவு
ஞானேந்திரம் 5
கர்மேந்திரம். 5
காற்று 10
அந்தக்கரணம் 4
புருடன் 1
ஆக 25 தத்துவங்கள் தொழில் படுதல்.
சொப்பனம். கனவு .
காற்று 10
அந்தக்கரணம் 4
புருடன் 1
ஆக 15 தத்துவங்கள் தொழில் படுதல்.
உறக்கம், சுழுத்தி.
அந்தக்கரணம் 4
புருடன் 1
ஆக 5 தத்துவங்கள் தொ ழில் படுதல்
துரியம்
புருடன் 1
ஆக ஒரு தத்துவமட்டும் தொழில் படுதல்
ஒரு பாதையுமின்றி தானாயிருப்பது பிரமம். பிரமம் மாயையாகிய அவித்தையிற் பிரதிபலித்த போது சீவன். சீவன் அவித்தையிற் கூடிய போது சுழுத்தி. சுழுத்தி அந்தகரனத்தில் கூடில் சொப்பனம். சொப்பனம் ஐந்து இந்திரியத்தில் கூடில் சாக்கிரம். சாக்கிரம் 96 தத்துவங்களுடன் கூடில் விவகாரம்.
இது மனித வாழ்க்கையின் தொடக்கம், நிலைப்பு, மறைவாகும்.
ஒரு மனிதன் வாசி யோகம் என்ற மடை மாற்றம் செய்தால், கடவுள் நிலை அடையலாம். அதற்கிடையில் எல்லா ஆற்றல்களையும் அடையலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
http://siddharulagam.blogspot.in/

No comments:

Post a Comment