Saturday, July 18, 2015

கார்ய சித்தி தரும் ஸ்ரீ கந்த குரு கவசம் :. (ரகசியம் )

ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் இயற்றிய ஸ்கந்த குரு கவசம்
---------------------------------------------------------------------------------------
பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ
என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ……
175
[முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப்
படுகிறது! மந்திரம், அதனை சொல்லும் முறை,
எத்தனை முறை ஜெபிக்க வேண்டும், அதன்
பலன்கள் என்னென்ன என்பதையெல்லாம்
விளக்கும் அற்புதப் பகுதி. மந்திரங்கள் எல்லாம்
ஒரு குருமுகமாய்ப் பெறுதல் வேண்டும்
என்பது நியதி. ஆனால்,
இங்கு ஒரு சற்குருவே இதனைச்
சொல்லியிருப்பதால்,
இதனையே முறைப்படி முருகன் சந்நிதியில்
வைத்து, அங்கிருந்து ஜெபிக்கத் தொடங்கலாம்
எனப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
விருப்பமிருப்பின், அவ்வாறே செய்யலாம்.
முருகனருள் முழுதுமாய் முன்னிற்கும்! ]
ஹ்ருதயத்தில்
முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம்
இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன்
…… 185
தண்ணொளிப் பெருஞ்சுடராய்
உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும்
…… 190
மூவுலகும் பூஜிக்கும் முருகனருள்
முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண
வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய்
கோடியுமே …… 195
வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக
ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்
…… 200
கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உ னைச் சிவன் மலையில்
போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப்
ப்ரதிஷ்டை செய்திட்டார் (305)
புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த
குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உ ள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களiப்புறச்
செய்திடுமே
உ லகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உ
ள்ளஇடம் (310)
ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும்
குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் (315)
கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த
சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என்
தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே (320)
உள்ளொளiயாய் இருந்து உ ன்னில்
அவனாக்கிடுவன்
தன்னில் உ னைக்காட்டி உ ன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக்
காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான்
காட்சியுமே (420)
கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும்
கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப்
பரம்கொடுக்கும் (425)
ஒருதரம் கவசம் ஓதின் உ ள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம்
கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்முறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமட ஓதி பஞ்சாட்சரம்
பெற்று (430)
ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம்
பற்றறுத்து வாழ்வீரே (435)
கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும்
நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளiல் நீ எடுத்துக்
(440)
கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உ
ருவேற்றி
உ ச்சியிலும் தௌiத்து உ
ட்கொண்டு விட்டிட்டால் உ ன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும்
கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் (445)
கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம்
பெற்றுடுவீர்.
முக்தியை நோக்கி எத்திக்கும்
செல்லவேண்டாம் – முருகன் மூல மந்திரம்
யாமிருக்க பயமேன்
ஸ்ரீ சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய
ஸ்கந்த குரு கவசத்தில் முருகனின் மூல
மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை
தியானித்து உருஏற்ற முருகனின் அருள்
கிடைத்து மும்மலங்கள் ஆகிய ஆணவம்,
கன்மம்,
மாயை நம்மைவிட்டு அகன்று முக்தி நமக்கு
சித்தியாகுமாம், முக்தியை தேடி எங்கும்
அலைய வேண்டாம் என்று சொல்கிறது கந்த
குரு கவசம்.
##############################
#########################
மூல மந்திரம்:
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ

No comments:

Post a Comment