Saturday, July 18, 2015

அவன் ஆறுமுகம் ... நம்மை ஆளுமுகம்

அவன் ஆறுமுகம் ... நம்மை ஆளுமுகம்
அதில் புன்னகை மின்னுதய்யா
கண்களில் ஆனந்த வெள்ளமய்யா
கண்களில் ஆனந்த வெள்ளமய்யா
அஞ்சுதலை நீக்குகின்றாய் ... ஆறுதலும் ஆகின்றாய்
ஏழிசை தாருமய்யா
சொந்தமென்னும் அடியார்க்கு ... சோதனைகள் ஏனய்யா
தாரணி காக்குமய்யா
வடிவேலா சிவபாலா வழிகாட்டுவாய்
எம் நிகழ்காலம் எதிர்காலம் ஒளியேற்றுவாய்
மும்மலமும் போக்குகின்றாய் ... இருவினைகள் தீரய்யா
முக்தியை தாருமய்யா
அண்டிவரும் அன்பருக்கு ஆசிதரும் கந்தய்யா
உன் புகழ் விந்தையய்யா
குகநாதா குருநாதா திசைகாட்டுவாய்
என் குலம்வாழ இனம்வாழ விளக்கேற்றுவாய்.
அவன் ஆறுமுகம் ... நம்மை ஆளுமுகம்
அதில் புன்னகை மின்னுதய்யா
கண்களில் ஆனந்த வெள்ளமய்யா
கண்களில் ஆனந்த வெள்ளமய்யா
Arumuga Saranam...


No comments:

Post a Comment