Thursday, October 9, 2014

ஆன்மீக முன்னேற்றத்திற்கு அகஸ்தியர் கூறும் மந்திரங்கள்

அகஸ்தியர் தனது "பரிபூரணம் 1000" என்ற நூலில் பின்வரும் மந்திரங்களை ஜெபித்து வருவதன் மூலம் ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் எனக் கூறுகிறார்.
பிரம்மச்சரியம் :-திருமணத்திற்கு முந்தைய பருவம் அல்லது திருமணம் செய்து கொள்ளாதவர்கள்.
மந்திரம்: "அம் கிலி சிம்" என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும்.
கிரகஸ்தம் : - திருமணம் செய்து மனைவி ,குழந்தைகளோடு வாழ்ந்து வருபவர்கள்.
மந்திரம்: "ஓம் றீங் அங் உங்" என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும்.
சந்நியாசிகள்:-
"ஓம் ஐம் க்லீம் சௌம்" என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும்.
வானப்ரஸ்தம் :-
50 முதல் 75 வயதுக்குள் உள்ளவர்கள்.வாழ்ந்து முடித்த பெரியவர்கள்.
மந்திரம்: "ஓம் அம் சிவ வசி " என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும்.
அவரவருக்கு எந்த வாழ்வு நிலை பொருந்துகிறதோ அதற்குண்டான மந்திரத்தை ஜெபித்து வர ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
நன்றி :-suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment