Thursday, October 23, 2014

பட்டினத்தார் நக்கலாகப் பாடுகிறார்

இருப்பதுபொய் போவதுமெய்
யென்றெண்ணி நெஞ்சே !
ஒருத்தருக்குந் தீங்கினை
யுன்னாதே - பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப
நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்குந்தான் !
பட்டினத்தாரின் பாடல் இது. இந்த உயிர் வாழ்க்கை என்பது கனவைப் போன்று பொய்யானதாக இருக்கின்றது. தோன்றுவதும் தெரியாது, கலைவதுவும் தெரியாது, விழிக்கும் போது(அடுத்த பிறப்பு) மறந்தும் போகும். ஆனால் ஒன்று மட்டும் உண்மையாக இருக்கிறது. எந்த நேரத்திலும் இந்த உலகை விட்டு போய் விடுவோம் என்று கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிகிறது என்பதே அது. இப்படி நிச்சயமற்ற நிலையில் வாழும் மனிதனோ தான் ஏதோ ஆயிரம் ஆண்டுகள் வாழப் போவது போல எண்ணி இறுமாந்து , தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள எத்தனையோ பேருக்கு தீங்கிழைக்கிறான், வஞ்சித்து ஏமாற்றுகிறான், அடுத்துக் கெடுக்கிறான். இவ்வாறு பிறருக்குத் தீங்கிழைத்து பெருஞ் செல்வத்தைக் குவிக்கும் மனிதனின் நிலை என்ன ?
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெறும் கையனாக, தன்னந்தனியாக பரலோகம் போய்விடுகிறான். இதைத்தான் பட்டினத்தார் நக்கலாகப் பாடுகிறார். தனது பருத்த தொந்தி மேலும் பருக்க வேண்டும் என்ற பேராசையினால் பிறருக்கு தீங்கிழைக்கும் மனிதனே, நீ இந்தத் தொந்தி உனக்கே சொந்தம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாயா ? அடப் பைத்தியக்காரா அங்கே நாய்களும், நரிகளும், கழுகுகளும், பேய்களும் இந்தத் தொந்தி எங்களுக்கே சொந்தம் என்று காத்துக் கொண்டிருப்பதை நீ அறியாமலிருக்கிறாய் என்கிறார்.
எந்த ஒரு உயிரினத்துக்கு யார் தீங்கிழைத்தாலும், அது அந்த உயிரினத்துக்கு மட்டுமல்ல, இறைவனுக்கே செய்யும் தீங்காகும். உலக ஜீவராசிகள் அனைத்திலும் இறைவன் குடி கொண்டிருக்கிறான் என்பதே நம் தேசத்தின் ஆன்மிகத் தத்துவம். இதையே அனைத்து சமயங்களும் வலியுறுத்துகின்றன. இந்த சமநோக்கு மனப்பான்மை மனிதனிடம் வளர ஆன்மிகம் மட்டுமே சிறந்த வழியாகும். மற்ற எந்த உபாயமும்யில்லை என்றே சொல்லலாம்.
சக மனிதனோ, பிராணியோ நமக்குத் துன்பம் தந்தால், அது நம்முடைய செயலின் பிரதிபலிப்புகளே என்று நாம் உணர வேண்டும். அவர்களோடு பகைமை பாராட்டக் கூடாது. நம் மீது நாம் அன்பு செலுத்துவது போல அவர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும். தீங்கு செய்யக் கூடாது. இதை கீதையும் சொல்கிறது, பைபிளும் சொல்கிறது. வள்ளலார் சொல்கிறார்.... ''அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும்.'' என்ன ஒரு உயர்வான சிந்தனை பாருங்கள். காசு, பணம், போகம் இதெல்லாம் கேட்கவில்லை. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் மனதைக் கேட்கிறார். இந்த மனப்பான்மையால் விளையும் நன்மை என்ன ? அதாவது இன்பம், துன்பம் என்றெல்லாம் தனித்தனியாக எதுவும் இல்லை. நம் மனப்பான்மையைப் பொருத்தே இன்பமும் துன்பமும் நம் உணர்வை எட்டுகின்றன. உயர்வான மனப்பக்குவத்தை, எண்ணங்களைப் பெற்றுவிட்டோமானால், இது வரை துன்பம் என்று எண்ணிக் கொண்டிருந்த பல விஷயங்களில் இருந்தும் இன்பத்தைப் பெற முடியும். அதாவது இன்பமாக உணர முடியும். ஆனால் இங்கே நாம் அடையும் இன்பங்கள் எல்லாம் ஒரு வரைமுறைக்கு உட்பட்டவை. இவை அதிகமானால் துன்பமாகி விடும். ஆனால் எல்லையே இல்லாமல் விரிந்து கொண்டே போகும் துன்பமே இல்லாத பேரின்ப நிலையை அடைய வேண்டுமென்றால், மனம் முழுவதும் அன்பு மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். அதுவே ஒளியாகவும், வழியாகவும் நின்று நம்மை மேன்மையுறச் செய்யும். இந்த மனப்பக்குவத்தின் மறுபெயரே ஆத்ம ஞானம்.
இருப்பதுபொய் போவதுமெய்
யென்றெண்ணி நெஞ்சே !
ஒருத்தருக்குந் தீங்கினை
யுன்னாதே - பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப
நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்குந்தான் !
பட்டினத்தாரின் பாடல் இது. இந்த உயிர் வாழ்க்கை என்பது கனவைப் போன்று பொய்யானதாக இருக்கின்றது. தோன்றுவதும் தெரியாது, கலைவதுவும் தெரியாது, விழிக்கும் போது(அடுத்த பிறப்பு) மறந்தும் போகும். ஆனால் ஒன்று மட்டும் உண்மையாக இருக்கிறது. எந்த நேரத்திலும் இந்த உலகை விட்டு போய் விடுவோம் என்று கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிகிறது என்பதே அது. இப்படி நிச்சயமற்ற நிலையில் வாழும் மனிதனோ தான் ஏதோ ஆயிரம் ஆண்டுகள் வாழப் போவது போல எண்ணி இறுமாந்து , தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள எத்தனையோ பேருக்கு தீங்கிழைக்கிறான், வஞ்சித்து ஏமாற்றுகிறான், அடுத்துக் கெடுக்கிறான். இவ்வாறு பிறருக்குத் தீங்கிழைத்து பெருஞ் செல்வத்தைக் குவிக்கும் மனிதனின் நிலை என்ன ?
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெறும் கையனாக, தன்னந்தனியாக பரலோகம் போய்விடுகிறான். இதைத்தான் பட்டினத்தார் நக்கலாகப் பாடுகிறார். தனது பருத்த தொந்தி மேலும் பருக்க வேண்டும் என்ற பேராசையினால் பிறருக்கு தீங்கிழைக்கும் மனிதனே, நீ இந்தத் தொந்தி உனக்கே சொந்தம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாயா ? அடப் பைத்தியக்காரா அங்கே நாய்களும், நரிகளும், கழுகுகளும், பேய்களும் இந்தத் தொந்தி எங்களுக்கே சொந்தம் என்று காத்துக் கொண்டிருப்பதை நீ அறியாமலிருக்கிறாய் என்கிறார்.
எந்த ஒரு உயிரினத்துக்கு யார் தீங்கிழைத்தாலும், அது அந்த உயிரினத்துக்கு மட்டுமல்ல, இறைவனுக்கே செய்யும் தீங்காகும். உலக ஜீவராசிகள் அனைத்திலும் இறைவன் குடி கொண்டிருக்கிறான் என்பதே நம் தேசத்தின் ஆன்மிகத் தத்துவம். இதையே அனைத்து சமயங்களும் வலியுறுத்துகின்றன. இந்த சமநோக்கு மனப்பான்மை மனிதனிடம் வளர ஆன்மிகம் மட்டுமே சிறந்த வழியாகும். மற்ற எந்த உபாயமும்யில்லை என்றே சொல்லலாம்.
சக மனிதனோ, பிராணியோ நமக்குத் துன்பம் தந்தால், அது நம்முடைய செயலின் பிரதிபலிப்புகளே என்று நாம் உணர வேண்டும். அவர்களோடு பகைமை பாராட்டக் கூடாது. நம் மீது நாம் அன்பு செலுத்துவது போல அவர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும். தீங்கு செய்யக் கூடாது. இதை கீதையும் சொல்கிறது, பைபிளும் சொல்கிறது. வள்ளலார் சொல்கிறார்.... ''அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும்.'' என்ன ஒரு உயர்வான சிந்தனை பாருங்கள். காசு, பணம், போகம் இதெல்லாம் கேட்கவில்லை. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் மனதைக் கேட்கிறார். இந்த மனப்பான்மையால் விளையும் நன்மை என்ன ? அதாவது இன்பம், துன்பம் என்றெல்லாம் தனித்தனியாக எதுவும் இல்லை. நம் மனப்பான்மையைப் பொருத்தே இன்பமும் துன்பமும் நம் உணர்வை எட்டுகின்றன. உயர்வான மனப்பக்குவத்தை, எண்ணங்களைப் பெற்றுவிட்டோமானால், இது வரை துன்பம் என்று எண்ணிக் கொண்டிருந்த பல விஷயங்களில் இருந்தும் இன்பத்தைப் பெற முடியும். அதாவது இன்பமாக உணர முடியும். ஆனால் இங்கே நாம் அடையும் இன்பங்கள் எல்லாம் ஒரு வரைமுறைக்கு உட்பட்டவை. இவை அதிகமானால் துன்பமாகி விடும். ஆனால் எல்லையே இல்லாமல் விரிந்து கொண்டே போகும் துன்பமே இல்லாத பேரின்ப நிலையை அடைய வேண்டுமென்றால், மனம் முழுவதும் அன்பு மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். அதுவே ஒளியாகவும், வழியாகவும் நின்று நம்மை மேன்மையுறச் செய்யும். இந்த மனப்பக்குவத்தின் மறுபெயரே ஆத்ம ஞானம்.
http://jayasekarjai.blogspot.in/

2 comments:

  1. நன்றாக உள்ளது தொடறுங்கள்

    ReplyDelete