Monday, October 6, 2014

ஆன்மிக ரகசியம்:-

25 வருட ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருந்து பல ஆன்மீக ரகசியங்களை கண்டறிந்தவர் எனது ஆன்மீக குரு!!!.அவரது ஆன்மீக ஆராய்ச்சி முடிவுகள் பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கைச் சிக்கல்களிலிருந்து விடுபட உதவியிருக்கிறது; அவரது ஆசியோடும்,வழிகாட்டுதலோடும் ஆன்மீக ஆராய்ச்சிமுடிவுகளை 2008 முதல் வெளியிட்டு வருகிறோம்.உங்களின் வாழ்வியல் சிக்கல்கள் தீர & ஆன்மீக ஆலோசனைகளைப் பெற aanmigakkadal@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.
சனிப்பெயர்ச்சியும் பைரவ வழிபாடும்!!!
30 ஆண்டு வாழ்ந்தாரும் இல்லை;30 ஆண்டு வீழ்ந்தாரும் இல்லை; என்பது ஜோதிடப் பழமொழி! ஒரு ராசியில் இருந்து பெயர்ச்சி ஆன சனி மீண்டும் அந்த ராசிக்கு வர 30 ஆண்டுகள் ஆகும்;ஒரு ராசியை இரண்டரை ஆண்டுகளில் சனி கடக்கிறார்;12 ராசியைக் கடக்க 30 ஆண்டுகள் ஆகிறது;இந்த ஜோதிட விளக்கமே ஜோதிடப்பழமொழியாக பரிணமித்திருக்கிறது;
26.6.2009 அன்று துலாம் ராசிக்குள் சனி பெயர்ச்சியாகி வந்தார்;இதோ இரண்டரை ஆண்டுகள் ஓடிவிட்டன;16.11.2014 அன்று விருச்சிகராசிக்குள் நுழையப்போகிறார்;மீண்டும் துலாம் ராசிக்கு 2039 ஆம் ஆண்டில் தான் வருவார்;
நவீன மருத்துவம் நமது உடல் ஆரோக்கியம் பற்றிகூறுவது என்னவெனில்,சாப்பிடும் அளவு குறையும் போதும்,வேளாவேளைக்குச் சாப்பிடாமல் இருக்கும் போதும் நமது உடலானது ‘அவசரத் தேவை’க்கு சேமித்து வைத்திருக்கும் கொழுப்பு சக்தியைப் பயன்படுத்திக் கொள்கிறது;அதன் மூலமாக நாம் மெலிந்தாலும் பரிபூரணமான ஆரோக்கியத்தைப்பெறுகிறோம்;இதையே நமது முன்னோர்கள் உபவாசம் என்ற மரபினைத் தோற்றுவித்தனர்;தமிழ் மாதத்தில் அமாவாசை,ஏகாதசி,சதுர்த்தி,சஷ்டி,பவுர்ணமி வரும் நாட்களில் ஒருவேளை மட்டும் உண்டு(பல நாட்களில் நீராகாரம் மட்டும் அருந்தி) அந்த நாள் முழுவதும் உரிய கடவுளின் மந்திரம் ஜபித்து வந்தனர்;30 நாட்களில் வெவ்வேறு ஐந்து நாட்களில் இப்படி எதுவும் சாப்பிடாமல் இருப்பதன் மூலமாக நமது உடல் உறுப்புகள் ஓய்வு எடுத்துக் கொண்டன;இதனால் தான் நமது முன்னோர்களில் பெரும்பாலானவர்கள் 100 வயது வரை வாழ்ந்தனர்;
ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனி என்று சனிபகவான் ஒருவருடைய 30 வருட ஆயுளில் 20 வருடங்களை கபளீகரம் செய்துவிடுகிறார்;எனவே,ஒரு மனிதனால் ஒவ்வொரு 30 வருடங்களிலும் வெறும் 10 வருடம் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்;இந்த 30 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் வரையிலும் சனியின் தாக்கத்தால் பல்வேறு சிக்கல்கள்,பிரச்னைகள்,வேதனைகள் வந்து சரியான நேரத்தில் சாப்பிடமுடியாமல் போய்விடுகிறது;இதை முன் கூட்டியே உணர்ந்த நம்முடைய சைவ முன்னோர்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் வரையிலும் எதுவும் சாப்பிடாமல் இருக்கும் வழக்கத்தை உருவாக்கினர்;இதன் மூலமாக 20 வருட சனியின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் ஆத்மபலத்தைப் பெற்றனர்;
நாம் வாழ்ந்து வருவதோ கணினியுகம்! ஒரு நாளில் ஒருவேளை சாப்பிடாமல் போனாலோ அல்லது சரியான நேரத்தில் நாம் சாப்பிடாமல் போனால் நமது மனநிலை எப்படி மாறிவிடுகிறது?தமிழர்களாகிய நம்மில் பெரும்பாலானவர்கள் பசி தாங்கமாட்டார்கள்;பசியின் போது நமது அனைத்து நற்குணங்களும் மாறிவிடுகின்றன;
நாம் வாழும் வேகமான காலகட்டத்தில் சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள நமது குரு ஒரு சுலபமான வழியைக் காட்டியிருக்கிறார்;
அதுதான் பைரவ வழிபாடு!
பைரவ வழிபாடு செய்வதற்கு உபவாசம் இருக்க வேண்டியதில்லை;ஒருவேளை நாம் உபவாசம் இருக்க நினைத்தாலும் 1970க்குப் பிறகு பிறந்தவர்களால் முடிகிறதா?
அசைவம்,மதுவைக் கைவிட்டு
தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை எழுதி வரலாம்;
அல்லது
தினமும் வேலைக்கு/தொழிலுக்குச் செல்லும் போது வழியில் தென்படும் சிவாலயத்தினுள் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவப்பெருமானை மட்டும் வழிபட்டுச் செல்லலாம்;
அல்லது
ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் ராகு காலத்தில்(காலை 9 முதல் 10.30க்குள்) ஸ்ரீகாலபைரவர் 108 போற்றியை அவரது சன்னதியில் பாடலாம்;வசதியிருந்தால் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால் அரகஜா கொண்டு அபிஷேகம் செய்து கொண்டே ஸ்ரீகாலபைரவர் 108 போற்றியைப் பாடலாம்;நிறைய ஓய்வு நேரம் இருந்தால் ஸ்ரீகாலபைரவர் 1008 போற்றியைப் பாடலாம்;
அல்லது
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் அருகில் இருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று ராகு கால அபிஷேகத்தில் கலந்து கொள்ளலாம்;
அல்லது
வீட்டில் தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யலாம்;
16.11.2014 அன்று சனி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்;ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருக்க வேண்டிய சனி,கடந்த மாமாங்கமாக மூன்று ஆண்டுகள் வரை இருக்கிறார்;கலியுகத்தில் சனியின் தாக்கம் மனிதர்களுடைய வாழ்க்கையில் மிகவும் குறைவே!
இருப்பினும் அந்த குறைவான சனிதாக்கத்தையே நம்மால் சமாளிக்கமுடியாமல் தவிக்கிறோம்;விருச்சிக ராசியில் நுழையும் சனி 11.2.2018 அன்றுதான் தனுசுராசிக்குப்பெயர்ச்சியாக இருக்கிறார்;
இந்த விருச்சிகராசிக்கு சனிப் பெயர்ச்சி ஆவதால்,மேஷ ராசிக்கு அஷ்டமச்சனி ஆரம்பமாகிறது;
ரிஷபராசிக்கு கண்டச்சனி ஆரம்பமாகிறது;
சிம்மராசிக்கு அர்த்தாஷ்டமச்சனி ஆரம்பாகிறது;
கன்னி ராசிக்கு ஏழரைச்சனி முழுமையாக விலகுகிறது;
துலாம் ராசிக்கு கடுமையான கஷ்டகாலமான ஜன்மச்சனி விலகி,வாக்குச்சனி/பாதச்சனியாக மாறுகிறது;
விருச்சிக ராசிக்கு விரையச்சனி நிறைவடைந்து கடுமையான காலகட்டமான ஜன்மச்சனி ஆரம்பமாகிறது;
தனுசு ராசிக்கு விரையச் சனி ஆரம்பமாகிறது;
மீன ராசிக்கு அஷ்டமச்சனி முழுமையடைந்து,நன்மைகளை அள்ளித் தரும் பாக்கியச்சனியாக பரிணமிக்கிறது;
ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியும் ஆறு ராசிக்காரர்களுக்கு அளவற்ற துன்பத்தையும்,ஆறு ராசிக்காரர்களுக்கு அளப்பரிய நன்மைகளையும் தருவதாக அமைகிறது;
விருச்சிக சனிப்பெயர்ச்சியானது மேஷம்,ரிஷபம்,சிம்மம்,துலாம்,விருச்சிகம்,தனுசு ராசிக்காரர்களுக்கு தீமையைத் தரும் சனியாக மாறுகிறது.
இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்றுடன் அசைவம் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்;மது,போதை தரும் பொருட்கள் உபயோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்;அதன்பிறகு தான் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்ய வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே ஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருள் கிட்டும்;இந்த ராசிக்காரர்கள் 11.2.2018 வரையிலும் மேலே கூறப்பட்டிருக்கும் பைரவ வழிபாட்டுமுறையில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது விடாப்பிடியாகப் பின்பற்றி வரவேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே அவர்கள் அனைத்து துயரங்களில் இருந்தும் மீண்டு வாழ்க்கைப்பயணம் ஸ்மூத்தாகப் போகும்;
சரி! சனிக்கும் ஸ்ரீகாலபைரவருக்கும் இருக்கும் தொடர்புதான் என்ன?
மிருகண்டு மகரிஷிக்கு அவரது பிறந்த நட்சத்திரப்படியும்,ராசிப்படியும் ஏழரை ஆரம்பமானது;எனவே,அவரை சிக்கலில் மாட்டிவிட்டார் சனி.
சித்தர்கள்,ரிஷிகள்,மஹான்கள்,சாதுக்கள் எந்த ஒரு ஆசையும் இல்லாமல் கோடிக்கணக்கான ஆண்டுகளாக தியானம்,தவம்,பிராணயாமம் என்று இருந்து வருபவர்கள்;இவர்களுக்கு என்று எந்தவித ஆசாபாசமும் கிடையாது;ஆசையின் மூலமாகவே சனி நமது நல்ல நேரத்தின் போது தவறுகளைச் செய்ய வைக்கிறார்;பிறகு ஏழரைச்சனி,அஷ்டமச்சனி வரும் போது அந்தத் தவறுக்குரிய தண்டனையைத் தரும் விதமாகச் செயல்படுகிறார்;இந்த விதியெல்லாம் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கே பொருந்தும்;
சனியின் இந்த செயல்பாட்டினால் மிருகண்டு மகரிஷி அவமானப்படும் சூழலை அடைந்தார்;இதற்கு யார் காரணம் என்று தனது தவ ஆற்றல் மூலம் நினைத்தார்;சனிதான் காரணம் என்று அறிந்ததும்,சனிக்கு வாதநோய் வரக் கடவது என்று சாபம் விட்டார்;முனிசாபம் உடனே செயல்படும் என்பதற்கிணங்க,சனிக்கு உடனே வாதநோய் வந்துவிட்டது;
சனியின் வேதனையை உணர்ந்த அவரது அன்னை சாயாதேவி, சனியை பைரவ வழிபாடு செய்யும் படி போதனை செய்தார்;அதன்படி,சனி பைரவ வழிபாடு பல கோடி ஆண்டுகளாக செய்து வந்தார்;பைரவப்பெருமானின் அருளால் மிருகண்டமகரிஷியின் சாபம் நிவர்த்தியானது;சனியின் வாதநோய் விலகியது;இதனால் அகமகிழ்ந்த சனி, ஸ்ரீகாலபைரவப்பெருமானிடம் தன்னை அவரது சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்;
ஸ்ரீகாலபைரவப் பெருமானும் அவரை சீடராக ஏற்றுக்கொண்டு அவருக்கு ஏராளமான தெய்வீக உபதேசங்களை போதித்தார்;அதன்படி,மீண்டும் சனி ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்து வந்தார்;இதன் மூலமாக ஸ்ரீகாலபைரவப் பெருமானால் ;நவக்கிரகப் பதவி’ பெற்றார்;
பூமியில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருடைய தொழில்/வேலை மற்றும் ஆயுளை நிர்ணயிக்கும் பொறுப்பை ஸ்ரீகாலபைரவப்பெருமான் சனியிடம் ஒப்படைத்தார்;
‘யார் என்னை தொடர்ந்து வழிபடுகிறார்களோ,அவர்களை நீ ஒருபோதும் துன்புறுத்தக் கூடாது’ என்று சனியிடம் ஸ்ரீகாலபைரவர் சத்தியம் வாங்கியப் பின்னரே நவக்கிரகமாகச் செயல்பட அனுமதித்தார்;
இந்த சம்பவம் தஞ்சை,திருவாரூர் மாவட்டப்பகுதியில் நடைபெற்றிருப்பதால்,இந்தப்பகுதியில் அமைந்திருக்கும் பெரும்பாலான கோவில்களில் ஒரே சன்னதியில் ஸ்ரீகாலபைரவருடன் சனி இருப்பதைக் காணலாம்;(ஸ்ரீகாலபைரவருக்கு சனி கட்டுப்பட்டவர் என்பது இதன் தாத்பர்யம்!!!)
துலாம் ராசியினர் 11.2.2018 வரை:சனிக்கிழமை தோறும் வரும் ராகு காலநேரத்தில்(காலை 9 முதல் 10.30 வரை) ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் திருஷ்டிப்பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றிட வேண்டும்;தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க/எழுத வேண்டும்;
விருச்சிகராசியினர் 11.2.2018 வரை:சனிக்கிழமை தோறும் காலை 9 முதல் 10.30க்குள் மண் அகல் விளக்கிற்கு கறுப்பு வண்ணம் பூச வேண்டும்;அதில் பாதி நெய்,பாதி இலுப்பை எண்ணெய் நிரப்ப வேண்டும்;இத்துடன் ஒரே ஒரு சொட்டு எலுமிச்சைச் சாறு கலக்க வேண்டும்;இந்தக்கலவையில் ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் விளக்கேற்ற வேண்டும்;இத்துடன் தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்க/எழுத வேண்டும்;
தனுசு ராசியினர் 11.2.2018 வரை:சனிக்கிழமை தோறும் காலை 9 முதல் 10.30க்குள் ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் தேங்காய் உடைத்து அந்தத் தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்;தினமும் ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ 108 முறை ஜபிக்க/எழுத வேண்டும்;
மேஷ ராசியினர் 11.2.2018 வரை:சனிக்கிழமை தோறும் இரவு 7.30 முதல் 9.30க்குள் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு வர வேண்டும்;இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய்தீபம் ஏற்ற வேண்டும்;படையலாக கருவேப்பிலைச்சாதம் ஸ்ரீகாலபைரவப் பெருமானின் பாதத்தில் வைக்க வேண்டும்;நமது பெயருக்கு அர்ச்சனை செய்த பின்னர்,அங்கே வருபவர்களுக்கு அந்த கருவேப்பிலைச்சாதத்தை பகிர்ந்து தர வேண்டும்;நாமும் உண்ணலாம்;பாதியை வீட்டுக்குக் கொண்டு சென்று பிறருக்கும் பிரசாதமாகத் தரலாம்;ஒவ்வொரு மாதாந்திர சனிதோறும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு கறுப்புப்பட்டு சாத்த வேண்டும்;தினமும் ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று 108 முறை ஜபிக்க/எழுத வேண்டும்;
ரிஷபராசியினர் 11.2.2018 வரை:திங்கட்கிழமை காலை 7.30 முதல் 9 மணிக்குள் ஸ்ரீகாலபைரவப்பெருமானுக்கு அல்லிமலர் மாலை அணிவிக்க வேண்டும்;புனுகு பூச வேண்டும்;திருஷ்டிப்பூசணி என்ற சாம்பல் பூசணியில் விளக்கேற்ற வேண்டும்;பாகற்காய் சாதம் படையலிட வேண்டும்;தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று எழுத/ஜபிக்க வேண்டும்;
சிம்ம ராசியினர் 11.2.2018 வரை:வெள்ளிக்கிழமை தோறும் காலை 10.30 முதல் 12க்குள் ஸ்ரீகாலபைரவப்பெருமானுக்கு தாமரை மாலை அணிவிக்க வேண்டும்;புனுகு பூச வேண்டும்;வெள்ளைப்பூசணி கலந்த சாம்பார்சாதம் படையலாக வைத்து நமது பெயருக்கு அர்ச்சனை செய்து,அங்கே வருபவர்களுக்குப் பகிர்ந்து தர வேண்டும்;நாமும் உண்ணலாம்;தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று ஜபிக்க வேண்டும்;
மேலும் இந்த ராசியினர் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீகாலபைரவர் அபிஷேகத்தில் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்;
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
குரு பெயர்ச்சிப் வழிபாடு
நவக்கிரகங்களில் மிக மிக உயர்ந்த சுபக்கிரகம் குரு;வியாழன்,பொன்னன்,பிரகஸ்பதி,அந்தணன் என்ற பல பெயர்கள் உண்டு;ஒருவரது பிறந்த ஜாதகத்தில் எட்டு கிரகங்கள் பலம் இழந்திருந்து,குரு பகவான் மட்டும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தால் அவரது வாழ்க்கையில் எந்த ஒரு குறைவும் ஏற்படாது;ஒவ்வொரு நாளும் முன்னேற்றமே உண்டாகும்;அதே சமயம்,ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் ஆட்சி அல்லது உச்சம் பெற்று குருபகவான் மட்டும் வலுவிழந்திருந்தால் அவருக்கு வாழ்க்கை,வாழ்க்கையாக இராது.அவ்வளவு சுபக்கிரமாக குருபகவான் இருக்கிறார்.நவக்கிரகங்களில் சூரியனை விடவும் அதிகமான அளவு சுபத்தன்மையைத் தருபவர் குரு;
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கும் போது பிறந்திருந்தால் அவர் தான் எப்போதும் கவலைப்படாதவராக இருப்பவர்;
ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது லக்னாதிபதி அல்லது ராசியை குரு பார்க்கும் போது பிறந்திருந்தால் அவருக்கு ஆயுள் முழுவதும் குருவின் பாதுகாப்பும்,வழிகாட்டுதலும் உண்டு;இதனால்தான் குருபார்க்க கோடி குற்றம் விலகும் என்ற பழமொழி நம்மிடையே உருவானது;
ஜோதிடப்படி வருடக்கிரகங்கள் நான்கு;குரு,சனி,ராகு மற்றும் கேது;இவர்களில் குருவை மட்டுமே முழுச்சுபராக இருக்கிறார்;அதென்ன முழுச்சுபர்?
சனி நமது ராசிக்கு மறைவிடங்களான 3,6,12 ஆம் இடங்களைக் கடக்கும் போது அளவற்ற நன்மைகளைத் தருவார்;அதே சமயம் 1,2,4,7,8 ஆம் இடங்களைக் கடக்கும் போது நன்மைகள் நம்மை வந்து சேருவதைத் தடுக்கவும் செய்வார்;ராகு கேதுக்களும் இதே போலத்தான்;இவர்கள் மூவருமே நல்லவனுக்கு(நல்ல இடத்துக்கு வரும் போது கெட்டதையும்,கெட்ட இடத்துக்கு வரும்போது நல்லதையும்) நல்லவன்;கெட்டவனுக்கு கெட்டவன் என்ற விதத்தில் செயல்பட்டு வருகின்றனர்;
குரு அப்படி அல்ல;நல்ல இடங்கள் என்று சொல்லக்கூடிய 2,5,7,9,11 ஆம் இடங்களுக்கு வரும் போது பணப் பழக்கம் அதிகரிக்கும்;திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும்;வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும்,சம்பள உயர்வும் தேடி வரும்;படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்;ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியும் தன்மை உண்டாகும்;நகைக்கடை வைத்திருப்பவர்களுக்கு வர்த்தகம் எதிர்பாராதவிதமாக அதிகரித்துக் கொண்டே செல்லும்;
மறைவுஸ்தானங்களான 3,6,8,12 ஆம் இடங்களை குரு கடக்கும் போது நல்லது செய்யமாட்டார்;அதே சமயம் தீமையும் தரமாட்டார்;
13.6.14 வெள்ளிக்கிழமையன்று குருபகவான் மிதுனராசியில் இருந்து கடகராசிக்குப் பெயர்ச்சியாகிறார்;இதன் மூலமாக குரு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உச்சமாகிறார்;குரு உச்சமாகும் போது உலகெங்கும் மக்களிடையே ஆன்மீகத்தேடல் அதிகரிக்கும்;இறைவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கையும்,மந்திரஜபம் செய்பவர்களின் எண்ணிக்கையும் பலமடங்கு பெருகும்;
மேஷராசியினருக்கு வேலை மாற்றம் அல்லது தொழில் மாற்றம் அல்லது வீடு மாற்றம் ஏற்படும்;
ரிஷபராசியினருக்கு படிப்படியாக நற்பலன்கள் குறையத் துவங்கும்;
மிதுனம்,கடகம்,சிம்ம ராசியினருக்கு நீண்டகாலமாக இருந்து வந்த சுபகாரியங்கள் இந்த ஒருவருடத்திற்குள் நடைபெறும்;
கன்னிராசியினருக்கு ஏழரைச்சனியின் பாதிப்பு விலகத்துவங்கும்;
துலாம் ராசியினர் வேலை மாறும் நேரம் இது;
விருச்சிகராசியினர் சகலவிதமான நற்பலன்களையும் பெறுவார்கள்;
தனுசு ராசியினருக்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு மகத்தான நன்மைகள் தேடிவரும்;
மகரராசியினர் அனைத்து சுபத்தன்மைகளையும் பெறுவர்;
கும்பராசியினர் சேமிப்பை அதிகப்படுத்துவது அவசியம்;
மீனராசியினர் அஷ்டமச்சனியின் துயரத்திலிருந்து மீண்டுவிடுவர்;
இந்த குருப்பெயர்ச்சியன்று நாம் செய்ய வேண்டியது என்ன?
மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு,கொண்டைக்கடலை மாலை வாங்கிக் கொண்டு,மஞ்சள் நிறப் பூக்கள் அல்லது மஞ்சள் நிறப் பூக்களால் தயாரிக்கப்பட்ட மாலையுடன் அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்குச் செல்ல வேண்டும்;அங்கே இருக்கும் நவக்கிரக குருவுக்கு இவைகளை சமர்ப்பிக்க வேண்டும்;
தேவானாஞ்சம் ரிஷீணாஞ்சம்
குரு காஞ்சன ஸன்னிபம்
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்
என்ற குருவின் மூலமந்திரத்தை 27 முறை குருபகவானின் முன்பாக ஜபிக்க வேண்டும்;
அல்லது
நவக்கிரகங்கள் அனைவரையும் ஆசிர்வாதித்து அவர்களை மனிதர்களின் வாழ்க்கையை இயக்க வைத்த ஸ்ரீகாலபைரவப் பெருமானின் மந்திரத்தை 27 முறை ஜபிக்கலாம்;
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
என்ற இந்த மந்திரத்தை குருபகவானை பார்த்தவாறும்,நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களை நினைத்தவாறும் 27 முறை ஜபிக்க வேண்டும்;இதன் மூலமாக குருவின் ஆசிகள் இந்த வருடம் முழுவதும் நமக்குக் கிட்டும்;நமது வாழ்க்கையில் ஆன்மீக முன்னேற்றம் வேண்டுமானால் தகுந்த குரு நிச்சயமாக நமக்கு அமைய வேண்டும்;
தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது;எனவே,நவக்கிரகங்களில் அமைந்திருக்கும் குருபகவானை வழிபட வேண்டும்;
சந்தர்ப்பம் அமைந்தால்,கும்பகோணத்தில் அமைந்திருக்கும் வியாழசோமேஸ்வரர் திருக்கோவிலுக்கு நாளை அல்லது நாளை முதல் 45 நாட்களுக்குள் ஒருமுறை சென்று மூலவரை வழிபட்டு வருவதன் மூலமாக குருவின் அருளைப் பெறலாம்;கும்பகோணத்தில் அமைந்திருக்கும் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும் ஆலயமே வியாழசோமேஸ்வரர் திருக்கோவில் ஆகும்;குருபகவானின் சாபம் தீர்ந்த ஸ்தலம் இது.
ஓம்சிவசக்திஓம்
எந்தக் கடவுளுக்கு எந்த மலர்மாலையை அணிவிக்க வேண்டும்?
ஆன்மீகத்தில் முன்னேற விரும்புவோர் மணி,மந்திரம்,ஒளஷதம் இம்மூன்றையும் பயன்படுத்த வேண்டும்;அதன் மூலமாக ஆன்மீகத்தில் பல சாதனைகளை எட்ட முடியும்;காலம் காலமாக இப்படித்தான் முன்னேறினார்கள்;ஆனால்,எப்படி முன்னேறினார்கள் என்பது குருவானவர்,தகுந்த சீடனுக்கு மட்டும் உபதேசித்து வந்துள்ளார்;இதனால்,சமுதாயத்தில் பொறுப்பான சீடர்களும்,தகுதி நிறைந்த குருநாதர்களும் யுகம் யுகமாக உருவாகிக் கொண்டே வந்துள்ளார்கள்;
நாம் வாழ்ந்து வருவதோ தகவல்யுகம்! தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று எங்கோ இருந்து உலகம் முழுவதும் ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்ப முடிகிறது;அப்படி பரப்பினாலும்,சபையில் சொல்லக் கூடிய விஷயங்களைத்தான் குருவருளாலும்,குருவின் அனுமதியோடும் வெளிப்படுத்தி வருகிறோம்;ஆன்மீகத்தில் சில குறிப்பிட்ட நிலைகளை எட்ட விரும்புவோர் தொடர்ந்து நமது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே வந்தால் மட்டுமே மேற்கொண்டு முன்னேற்றத்துக்குரிய தீட்சை அல்லது பயிற்சி அல்லது உபதேசம் கிடைக்கும்;
மணி மந்திரம் ஒளஷதம் என்ற வார்த்தைகளைக் கொண்டே சுமாராக 100 ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்;அவ்வளவு ஆன்மீகப் பொக்கிஷங்கள் இந்த மூன்று வார்த்தைகளிலும் புதைந்திருக்கின்றன;
நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கு ஆன்மீகத்தில் வளர்ச்சியடைய பக்தி மார்க்கமே போதுமானது;கோவில்களுக்குச் சென்று வழிபடுதல்,வீட்டிலேயே மந்திரம் ஜபித்தல்,குறிப்பிட்ட திதியன்று குறிப்பிட்ட தெய்வத்தை அவரவரின் பிறந்த ஜாதகத்தில் அமைந்திருக்கும் திசையைப் பொறுத்து வழிபடுதல் போன்றவையே போதுமானது;
உதாரணமாக,கேது மஹாதிசை,கேதுவுடன் சேர்ந்திருக்கும் கிரகத்தின் திசை,கேதுவின் நட்சத்திரத்தில் நிற்கும் கிரகத்தின் திசை போன்றவை வரும் போது தேய்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் வழிபாடு தொடர்ந்து செய்ய வேண்டும்;
சுக்கிரமஹாதிசை வந்தால்,திருக்கோவிலூருக்கு அவரவர் ஜாதகப்படி குறிப்பிட்ட கிழமை அல்லது நட்சத்திரநாள் அல்லது திதி வரும்போது சென்று வழிபட வேண்டும்;அவசியப்பட்டால் அபிஷேகம் செய்ய வேண்டும்;
சூரிய மஹாதிசை வந்தால் கண்டிப்பாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்ய வேண்டும்;
சந்திர மஹாதிசை வந்தால் சாந்தமான பெண் தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்;சந்திரனுடன் ராகு,செவ்வாய் போன்ற பாவக் கிரகச் சேர்க்கை இருந்தால் உக்கிரமான பெண் தெய்வத்தை ‘முறைப்படி’ வழிபட வேண்டும்;
செவ்வாய் மஹாதிசை வந்தால் சஷ்டி திதியில் முருகக் கடவுள் வழிபாடு செய்ய வேண்டும்;அவரவர் ஜனன ஜாதகப்படி கடலோர முருகன் அல்லது மலைமீது அமர்ந்திருக்கும் முருகக்கடவுள் வழிபாடு செய்ய வேண்டும்;
ராகு மஹாதிசை வந்தால் நாகர்கோவில் நாகராஜா கோவில்,இருக்கன்குடி,சமயபுரம்,பொன்னமராவதி அருகில் அமைந்திருக்கும் பேரையூர் நாகநாதசுவாமி திருக்கோவில்,கரூர் பசுபதீஸ்வரர் கோவிலினுள் அமைந்திருக்கும் கருவூர் சித்தர் வழிபாடு,திருநாகேஸ்வரம்,காளஹஸ்தி பாதாளபைரவர் வழிபாடு மற்றும் உக்கிரமான பெண் தெய்வ வழிபாடு =இவைகளில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகும்;ராகு மஹாதிசை நடைபெறும் 18 ஆண்டுகளுக்குமே இந்த மாதிரியான கோவில்களுக்கு மாதம் ஒருமுறை செல்ல வேண்டும்;ராகுவின் நட்சத்திரம் நிற்கும் நாளில்,ராகு காலத்தில் வழிபாடு நற்பலன்களைத் தரும்;
குரு மஹாதிசை வந்தால் சித்தர்கள் வழிபாடு கண்டிப்பாக செய்ய வேண்டும்;ஆன்மீக வழிகாட்டிகளின் தொடர்பும் அதன்மூலமாக தெய்வீக ரகசியங்களும் தேடி வந்துகொண்டே இருக்கும்;குரு ஓரை மற்றும் குருவின் நட்சத்திர நாட்களில் தெய்வீக முன்னேற்றங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்;
சனிமஹாதிசை வந்தால் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்ய வேண்டும்;இதன் மூலமாக சனி மஹாதிசையின் வலிமை அதிகரிக்கும்;யோகம் தரும் சனிமஹாதிசையாக இருந்தால் யோகத்தின் சக்தி அதிகரிக்கும்;அவயோகம்/பாதகம் தரும் சனி மஹாதிசையாக இருந்தால் ஸ்ரீகாலபைரவ வழிபாடு அதை பெருமளவு குறைத்துவிடும்;
புதன் மஹாதிசை வந்தால் மஹாவிஷ்ணு வழிபாடு செய்ய வேண்டும்;
எந்த திசை வந்தாலும் சரி;இறைவனை பூக்கள் ,பழங்கள்,தூபதீப நைவேத்தியம் கொண்டு வழிபட வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே நமது பக்தியுணர்வு இறைசக்தியைச் சென்றடைகிறது;அவ்வாறு சென்றடையும் போது நமது கோரிக்கைகளும்நீண்டகால ஏக்கங்களும்,வேண்டுதல்களும் இறைசக்தியைச் சென்றடைகின்றன;
வேகமான வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்தச் சூழ்நிலையில்,நம்மில் பலர் கோவிலுக்குள்ளேயும் பரபரப்பாகவே வழிபாடு செய்கிறோம்;வேகமாக கோவில் வாசலுக்கு வருகிறோம்;தேங்காய் பழக்கடையில் நமக்குத் தேவையான தேங்காய்,பழம்,பத்தி,கற்பூரம்/நெய்தீபம் வாங்குகிறோம்;கடைக்காரரும் கேரி பேக்கில் வைத்துத் தருகிறார்;(சில சமயம் தட்டிலும் வைத்துத் தருவதுண்டு) அந்த கேரிபேக்குடன் வேகமாக கோவிலுக்குள் சென்று ஒவ்வொரு நொடிக்கும் ஒவ்வொர ஒவ்வொரு சன்னதியில் நின்று வேகமாக வேண்டிவிட்டு,மூலஸ்தானத்துக

No comments:

Post a Comment