Saturday, August 23, 2014

சூரிய நமஸ்காரத்தின்போது உச்ச‍ரிக்கப்படும் 12 மந்திரங்களும் அதன் அர்த்த‍ங்களும்! – அறிய வேண்டிய தகவல்

சூரிய நமஸ்காரம்
உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்து வாழ்வதற்கு சூரிய னே கார ணம் .சூரியனை கடவுளாக வண ங்கும் பழக்கம் பழங்கால தொட்டெ இருந்து வருகிறது. சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய் தீர்க்கும் யோக பயிற்சியா கும்.
.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்ற பழமொழி உண்டு. சூரிய நமஸ்காரத்திற்கும் கண்ணிற்கும் உள்ள நெருக்கமான
தொடர்பை இதுகாட்டுகிறது. கண்ணொளி வழங்கும் சூரியனின் சக்தி உடலில் ஏற்ப டும் நோய்களை நீக்கி உடல.் ஆரோக்கி யத்தையும் பாதுகாக்கிறது.
அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக் கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர். சூரி ய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என் கிறது அதர்வண வேதம்.
.
இதனை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதுதான் சன்பாத் எனப்படும் சூரிய ஒளிக் குளியல்.சூரியக் குளிய லால் சிறுவர்களின் மன ஆற்றல் பத்து முதல் இருபது சதவீதம் வரை அதிகரி த்துள்ளதாக மேலை நாட்டு நவீன மரு த்துவ ஆய்வு நிரூபித்துள்ளது.
.
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவு ம் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம். இளஞ் சூரிய னிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. இர வில் தூக்கத்தால் உட லுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதா ல், அதிகாலையில் உடற்தசைக ள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏது வாக இருக்கும்.
மூளையின் அலைகள், அதிர்வு கள் குறைந்து அமைதியாக இ ருப்பதும் அதிகாலையில்தான். அதிகாலையில் வெப்பம் குறைவாக இருப்பதால் சூரிய நமஸ்கார பயிற்சி யின் போது நமது உடலும் உள்ளமு ம் சோர்வடைவதி ல்லை. சூரிய நம ஸ்காரம் செய்வதற்கு உகந்த திசை கிழக்கு. சூரியனின் கதிர்கள் உடல் முழுவதும் படும்வகையில் சுத்தமா ன காற்று இருக்கக் கூடிய திறந்த வெளியில் நின்றபடி செய்ய வேண் டும்.
.
12 மந்திரங்களை சொல்லி சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடல் நோய்கள் யாவும் தீர்ந்துவிடும்.
12 மந்திரங்கள்
ஓம் மித்ராய நமஹ- சிறந்த நண்பன்
.
ஓம் ரவயே நமஹ -போற்றுதலுக்குரியவன்
.
ஓம் சூர்யாய நமஹ- ஊக்கம் அளிப்பவன்
.
ஓம் பானவே நமஹ -அழகூட்டுபவன்
.
ஓம் ககாய நமஹ -உணர்வுகளுக்கு வலிமை தருபவன்
.
ஓம் பூஷ்ணே நமஹ-புத்துணர்ச்சி தருபவன்
.
ஓம் ஹிரண்யகர்ப்பாய- நமஹ ஆற்றல் அளிப்பவன்
.
ஓம் மரீசயே நமஹ- நோய்களை அழிப்பவன்
.
ஓம் ஆதித்யாய நமஹ -கவர்ந்திழு ப்பவன்
.
ஓம் சவித்ரே நமஹ -சிருஷ்டிப்பவன்
.
ஓம் அர்க்காய நமஹ -வணக்கத் திற்கு உரியவன்
.
ஓம் பாஸ்கராய நமஹ- ஒளிமிகுந் து பிரகாசிப்பவன்.
.
மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்த வாறு சூரிய நமஸ்காரம் செய்யும் போது நமது மனம் சிதறாமல் ஒரு முகப்ப டுகிறது. மந்திரத்தை உச் சரிக்கும்போது அதனதிர்வு நமது உடலின் எல்லா பகுதி களுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற் படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.
நன்றி :- http://vidhai2virutcham.com

No comments:

Post a Comment