Tuesday, August 19, 2014

ஆன்மீக சிந்தனைகள்

* மனம் ஆற்றின் நீரோட்டம் போல ஓடுகிறது. தகுந்த வடிகால் அமைத்து அதை சீர்படுத்த, நன்மை விளையும்.
* கொள்கை நல்லதாக இருந்தால், எந்தப் பின்னணியிலும் ஒருவன் முன்னேற்றம் காண முடியும்.
* தினமும் காலை, மாலை இருமுறை தியானத்தில் அமருங்கள். இதனால் மனம் அமைதி பெறும்.
* மனதில் உறுதியும், விடாமுயற்சியும் கொண்டவன் வாழ்வில் வெற்றி அடைவது உறுதி.
* குறுகிய மனப்பான்மை கூடாது. விசாலமான மனதுடன் உலகைப் பார்க்கக் கற்பது நல்லது.
* மனம் வருத்தப்பட்டால் எதிலும் விருப்பம் இருப்பதில்லை. மகிழ்ச்சியாக இருந்தால் எளிய உணவு கூட ருசியாக இருக்கும். அதனால், மனதை எப்போதும் லேசாக வைத்துக் கொள்ளுங்கள்.
* அறிவை பயன்படுத்தாத மனிதர்கள் விலங்கு நிலைக்கு தாழ்ந்து விடுகின்றனர். அவர்களால் மனதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
* நோக்கம் உயர்ந்ததாகவும், சுயநலம் இல்லாததாகவும் இருந்து விட்டால் விளைவு நம்மைப் பாதிப்பதில்லை.
* கடவுள் நம்முடைய மனமாகிய வீட்டில் இருந்து இயக்குகிறார். அதை உணராவிட்டாலும் அவருடைய அருளே நம்மை நடத்திச் செல்கிறது.
* கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய பண்புகளால் முயற்சிகளில் தோல்வி உண்டாகிறது.
* உயர்ந்த லட்சியத்திற்காக பணியாற்றும்போது மனதில் அரிய சக்தி தூண்டிவிடப்படுகிறது. அப்போது முயற்சித்தால் வெற்றி வந்து சேர்கிறது.
* அன்பை வாரி வழங்குவதால் வாழ்வு வளமாகும் என்ற அடிப்படையை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.
* அன்பைக் கொடுப்பதால் மனம் விரிவடைகிறது. அன்பை பிறருக்குக் கொடுப்பவனே சுதந்திரமானவன்.
* உள்ளத்தில் அன்பு இருந்தால் உலகமே புனிதமாகி விடும். அவன் காண்பதெல்லாம் தெய்வீகமாகி விடும்.
* அன்பு செலுத்தப் பழகி விட்டால் மனோசக்தி அதிகரிக்கும். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் அதன் அழகு வெளிப்படத் தொடங்கும்.
* நிஜமான பக்தி கொண்டவன், எல்லா உயிர்களையும் கடவுளாகவே காணும் பேறு பெறுவான்.
* ஆபத்து வந்ததும் கடவுளை அழைப்பவன் பக்திமான் அல்ல.
* மனமாகிய வீட்டில் இருந்து நம்மை இயக்குபவர் கடவுளே. கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவரே வழிநடத்துகிறார்.
* எளிய காணிக்கையையும் கடவுள் விருப்பத்துடன் ஏற்கிறார். அன்பும், தூய்மையுமே பக்திக்கு தேவையான அடிப்படை குணங்கள்.
-- சின்மயானந்தர்

No comments:

Post a Comment