Tuesday, August 19, 2014

சைவப் பெருமக்களுக்குத் திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து என்ற மூன்றும் இன்றியமையாதவை

சைவப் பெருமக்களுக்குத் திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து என்ற மூன்றும் இன்றியமையாதவை.
* திருநீறு, விபூதி, பஸ்மம், பசிதம், சாரம், இரட்சை என்ற பல பெயர்களை உடையது திருநீறு. ஆன்மாக்களின் பாவங்களையெல்லாம் நீறு செய்வதனால் திருநீறு; பஸ்மம்.
* விமேலான; பூதிஐஸ்வர்யம். மேலான ஐஸ்வர்யத்தை தருவதால் விபூதி. அறியாமை அழியும்படி சிவஞானமாகிய சிவ தத்துவத்தை விளக்குவதால் பசிதம். ஆன்மாக்களின் மல மாசினைக் கழுவுவதால் சாரம். ஆன்மாக்களைத் துன்பத்தினின்றும்
நீக்கி ரட்சிப்பதனால் ரட்சை.
*""நீறில்லா நெற்றி பாழ்'' என்று அவ்வையார் கூறுகிறார். திருநீற்றை அன்புடன் பூசுவோர், எல்லா நோய்களும் நீங்கப் பெறுவர். அவ்வாறு பூசாதோர் நோய்வாய்ப்பட்டு செத்துப்பிறந்து உழலுவார்கள்.
"நோய்களுக்கும் அஞ்சேன்; பிறப்புக்கும், இறப்புக்கும் அஞ்சேன்; திருநீறு பூசாதவர்களைக் கண்டால் அஞ்சுகிறேன்'' என்கிறார் பாண்டிநாட்டு முதலமைச்சராகிய மாணிக்கவாசகர்.
* மனிதனுக்கு மிகவும் தேவையானவை ஐந்து பொருட்கள். 1. நல்வாக்கு. வாக்கு செல்வாக்குடையதாகவும், இனிமையுடையதாகவும் அமைதல் வேண்டும். 2. இனிய பால்சோறு. 3. நல்லார் இணக்கம். 4. உயர்ந்த நற்குணங்கள். 5. குறைவில்லாத செல்வம். இந்த ஐந்தும் ""சிவாய நம'' என்று ஜெபித்து திருநீறு தரிப்பதனால் எளிதில் கிட்டும்.
* திருநீற்றை ஒருவருக்குத் தரும்போதும், நம் பூசிக்கொள்ளும்போதும் சிவபெருமானுடைய ஐந்தெழுத்தை அன்புடன் ஓதுதல் வேண்டும். இந்தக் காரணத்தினால் திருநீற்றுப் பஞ்சாட்சரம் என்ற ஒரு பெயரும் அமைந்தது.
(வாரியார் சொற்பொழுவிலிருந்து.)
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஆன்மீக (ஆன்மா) அன்பர்களுக்கு மட்டும்.
இந்த பதிவை ஒருவர் படிக்கிறார் எனில் அதற்கு அவர்கள்
நற்காரியங்கள் செய்திருக்க வேண்டும் இதை படித்த பின் ருத்ராட்சம்
அணிந்துகொள்வர் எனில் இறைவன் அவர்கள் மீது கருணை
செய்திருக்க வேண்டும் ஏனெனில் ருத்ராட்சம் அணிந்து இருப்பவர்கள்
அனைவரும் சிவ குடும்பமே சிவ குடும்பத்தில் ஒருவர் ஆவார்.
பூர்வ ஜென்மத்தில் ஒரு ஆன்மா புன்னியம் செய்திருந்தால் தான்
ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும் .
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
பல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம்.
சிவபுராணத்தில் "புல்லாகிப், பூடாய்ப், புழுவாய், மரமாகிப், பல்விருக
மாகிப், பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப், பேயாய்க்
கணங்களாய் வல்லசுரர், ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ
நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்!
என்ற பாடல் வரிக்கேற்ப நாம் பல பிறவி கஷ்டங்களை கடந்து
வந்துள்ளோம். உலகில் மொத்தம் 84 நான்கு லட்சம் உயிரினங்கள்
உள்ளது அதில் கடைசி பிறப்பு தான் மானிட பிறவி.
ஒரு அறிவு புல் பூண்டு மரம் செடி கொடிகள்!
இரண்டு அறிவு நீரில் வாழ்பவை மீன் தவளை முதலை நண்டு!
மூன்று அறிவு நிலத்தில் ஊர்பவை பாம்பு பல்லி ஓணான்!
நான்கு அறிவு வானில் பறப்பவை மயில் குயில் கழுகு புறா காகம்!
ஐந்து அறிவு ஆடு மாடு சிங்கம் புலி யானை எருமை நாய் பூனை!
ஆறு அறிவு ஆண் பெண், திருநங்கை
என்று இந்த ஆறு அறிவும் ஒன்று முதல் எண்பத்தி நான்கு லட்சம் முடிய
பிறந்து இறந்து இறந்து பிறந்து 8399999 வரை மற்ற உயிரினங்களாக
வாழ்ந்து 8400000 லட்சம் எண்ணும்போது தான் மானிடப் பிறவி அதுவும்
8399999 இறந்த பிறந்து வாழும்போது இதில் ஏதாவது
ஒரு பிறப்பில் புண்ணிய காரியம் செய்து இருந்தால்தான் மானிட பிறவி
கிடைக்கும் அப்படி பட்ட அரிதான மனித பிறவி எடுத்து பிரயோஜனம்
இல்லாமல் போய்விடகூடாது என்பதற்காகத்தான் இறைவன் நம்மீது
கருணை கொண்டு தேவர்களுக்கு கூட கிடைக்காத மஹா
பொக்கிஷம்மான
திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம்
அருளி உள்ளார் இவைகளை பயன் படுத்தி பயன்பெறலாம் இதை என்
அனுபவத்தில் அனுபவித்து சொல்லுகின்றேன்.
சிலர் சொல்லுவார்கள் சுத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய
வேண்டும் என்று?
ஆம் சுத்தம் என்பது மனதை சுத்தமாக வைத்துக்கொள்வது பிறர்க்கு
தும்பம் தராமல் இருப்பது பிறரின் சொத்துக்களை அபகரிப்பு செய்வது
பொறாமை படுவது திருடுவது ஏளனமாக நடப்பது நம்பிக்கை துரோகம்
செய்வது பிறருக்கு தண்டனை தருவது தண்டிப்பது பொய் சாட்சி
சொல்வது இதைப்போன்ற சுத்தம் இல்லாத மனிதநேயம் இல்லாத
காரியங்கள் செய்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய கூடாது. தர்மம் மனிதாபிமானம் மரியாதை கனிவு அன்பு கருணை பக்தி
பிரதோஷம் அன்று ஆலயம் செல்வது இதுபோன்ற நல்ல
நற்காரியங்களை செய்பவர்கள் ருத்ராட்சம் கண்டிப்பாக
1000000000000000மடங்கு அணியலாம் நாம் பிறந்ததின் பயனும்
பெறலாம்
உதாரணத்திற்கு
63 நாயன்மார்கள் பெரியபுராணம் படியுங்கள் தெளிவு கிடைக்கும்
வெற்றி நிச்சயம்.
"திருச்சிற்றம்பலம்".
திருநீறு (நெற்றியில்) தரித்தல் ருத்ராட்ஷம் (கழுத்தில்) அனிதல்
பஞ்சாட்சர மந்திரம் (ஓம் நமசிவாய மனதில்) உச்சரித்தல் இம்மூன்றும்
ஒருவர் ஒரு சேரச் செய்வார் எனில் அவர்கள் இல்லத்தில்
ஐஸ்வர்யங்கள் பெறுகும்
இறைவனின் (சிவபெருமானின்) கருணை கிடைக்கப்பெறும்.
ருத்ராட்சம் எங்களிடம் தான் வாங்க வேண்டும் என்பது இல்லை
4 முகம் 5முகம் 6முகம் ருத்ராட்சம் எங்கு வாங்கினாலும்
ஒரிஜினல்ளாகத் தான் இருக்கும் ஏனெனில் அதன் விலை 5ருபாய்
முதல்
15ருபாய் வரைதான்.
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment