Tuesday, August 19, 2014

பொன்மொழிகள்

* பிறர் மனம் நோகாத வகையில் இதமாகவும், மென்மையாகவும் பேசுங்கள். அதனால் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.
* பாவச்செயல்கள் துன்பத்தையே தரும். செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்காமல் ஒருவன் சொர்க்கம் செல்ல முடியாது.
* உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. எண்ணம், சொல், செயல் மூன்றையும் நல்வழிப்படுத்தி சரியான நெறியில் வாழ்வதே ஒழுக்கம்.
* அடக்கத்துடன் வாழும் இல்லறத்தான், அடக்கமில்லாத துறவியை விட சிறந்தவன்.
* கவனமுடன் செயலாற்றுங்கள். நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள்.
* மனம் அமைதியுடன் இருந்தால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அந்த நிலையில் தான் மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த முடியும்.
* அடக்கத்துடன் வாழ்பவன் இந்த பிறவி மட்டுமில்லாமல் மறுபிறவியிலும் இன்பமுடன் வாழ்வான்.
* பிறரின் இகழ்ச்சியைக் கண்டு கோபம் கொள்ளாமலும், சண்டையிடாமலும் பொறுப்பவனே அறிஞன்.
- மகாவீரர்

No comments:

Post a Comment