Friday, August 22, 2014

இறப்பதற்கு முன் பீஷ்மர் போதித்த‌ ராஜ தருமங்கள் (பகுதி=>2)

அர்ச்சுனனால் அம்பு படுக்கையில் வீழ்த்த‍ப்பட்ட‍ பீஷ்மர், தான் இறப்ப‍தற்கு முன்பு சொன்ன‍ தருமங்கள்
தருமர், கண்ணனையும், பீஷ்மரையும் வணங்கிவிட்டுத் தம் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார்..
‘ராஜநீதியில் எல்லாத் தருமங்களும் அடங்கியுள்ளன.ராஜநீீதி தவறுமானால் உலகம் துன்புறும். ஆகவே இந்த
ராஜ தருமங்களை எனக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும்’ என்றார்.
பீஷ்மர்..அதன்படி ராஜதருமங்களைக் கூறத் தொடங்கினார்..
‘நாடாளும் மன்னன் எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும். முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின் உதவி கிடைக்காது. வண் டிக்கு இரு சக்கரங்களைப் போல வாழ்க்கைக்கு இவ்விரண்டும் தே வை. இவ்விரண்டில் முயற்சியே மேலானது.ஒருவேளை உன் முய ற்சி வீணாய்ப்போனாலும் அது குறித்து வருந்தக்கூடாது.எப்போதும் விடாமுயற்சி என்பது அரசர்களின் மிகப் பெரிய நீதியாகும். “முயற் சியற்ற மன்னனையும்..வேதம் ஓத வெளியே செல்லாத வேதியனை யும் பாம்பு எலிகளை விழுங்குவது போல இப்பூமி விழுங்கிவிடும்” என்று சுக்கிராச்சாரியார் கூறியிருக்கிறார்.
ராஜ தருமத்தில் இரட்சண தருமம் என ஒன்றை அரசன் கவனிக்க வேண்டும். இந்த இரட்சண தருமத்தை அரச தருமங்களுள் வெண்ணெய் போன்றது எனப் பிரகஸ்ப தியும், சுக்கிரரும், விசாலாட்சா ரும், பரத்வாஜரும், கௌரசிரசும், இந்திரனும் போற்றியுள்ளனர். இந்த இரட் சண தருமம் நிறைவேறும் வகையைக் கூறுகிறேன்…
பொறாமையின்மை,யுக்தியால் வரி வசூலித்தல், உபாய மின்றி வரி வாங்காமை,நல்லவர்களை அணைத்துச் செல்வது, சூர த்தனம், சுறுசுறுப்பு, உண்மை,குடிமக்களின் நன்மை, நேராகவும். கபடமாக வும் பகைவர் பலம் பெறாமல் பார்த்துக் கொள்வது, பழு தான கட்டி டங்களைப் பழுது பார்ப்பது, காலத்திற்கேற்ப உடல் தண் டனை. பொருள் தண்டனை விதிப்பது, படைகளை மகிழ்விப்பது, செயலில் சோர்வின்மை,கருவூலத்தைப் பெருகச் செய்வது,நகரைப் பாதுகாப்பது, காவற்காரரிடம் நம்பிக்கை வைக்காமலிருத்தல், நண்பர். பகைவர். நடுநிலையாளர் இவர்களைப் பகுத்தறிதல், வே லைக்காரரைப் பகைவரிடம் சேராதிருக்குமாறு செய்தல்,நகரை வலம் வந்து நேராகப் பார்வையிடுவது, துன்புற்றோர்க்கு ஆறுதல் கூறு வது, பகைவரை அலட்சியப் படுத்தாமை, இழிந்த செயல்களை விலக்குதல், நியாயத்துடன் பொரு ந்திய விடாமுயற்சி ஆகிய இக்கு ணங்கள் இரட்சண தருமங்களாகு ம்.
இந்திரன் விடாமுயற்சியால்தான் அமுதத்தைப் பெற்று அசுரர்களை க் கொன்று இவ்வுலகிலும். தேவர் உலகிலும் பெரும் புகழ் பெற்றான். முயற்சியால் சிறந்தவன் கல்வியி ல் சிறந்த பண்டிதனைவிட மேலா னவன். அரசன் அறிவுடையவனாக இருந்தாலும். அவனிடம் முயற்சி யில்லை எனில் அவன் பகைவரால் வெல்லப்படுவான். அரசன் மிக்க பலமுடையவனாக இருந்தாலும்..பகை சிறிதென்று அலட்சியமாக இருக்கக் கூடாது.நெருப்புச் சிறிதாயினும் சுடும். நஞ்சு கொஞ்சமாக இருந்தாலும் கொல்லும்..இவற்றையெல்லாம் கவனத்தில் கொண் டு ஆளும் அரசன் இறந்த பிறகும் புகழப்ப டுவான்.
உன் செயல் அனைத்தும் சத்தியத்தின் அடிப்படையில் இருக்க வே ண்டும். தவத்தோர்க்கு எப்படிச் சத்தியம் முதற் பொருளாக இருக்கி றதோ அப்படி அதுவே அரசர்க்கும் முதற் பொருளாகும். நற்குணமு ம், நல்லொழுக்கமும், புலனடக்கமும், தெளிவும், தானமும் உள்ள அரசனை விட்டு ராஜ்யலட்சுமி விலக மாட்டாள்..
தருமரே! வெளியிடத்தகாத அரசாங்க ரகசியங்களைத் தவிர மற்ற வற்றில் உண்மை பேச வேண்டும்..எப்போதும் அரசன் சாந்த குணம் கொண்டவனாக இருக்கக் கூடாது.எப்போதும் சாந்த குணம் கொ ண்ட அரசனை உலகம் மதிக் காது மீறி நடக்கும்.யானையின் தலை யில் மாவுத்தன் ஏறுவது போலத் தாழ்ந்த மனிதனும் பொ றுமை உள்ள அரசனை அவமதி க்கும் செயலில் ஈடுபடுவான். அதற்காக அரசன் எப்போதும் கடுமையாகவும் நடந்து கொள் ளக் கூடாது. கடுமையான அரச னிடம் மக்கள் அன்பு பாராட்ட மாட்டார் கள்.ஆதலால் அரசன் எந் தெந்த நேரத்தில் எப்படி எப்படி நடக்க வேண்டுமோ. அந்தந்த நேரத் தில் அப்படி அப்படி நடந்து கொள்ள வேண்டும். அதாவது அதிகத் தட்பமும் அதிக வெப்பமும் இல்லா வசந்த காலத்துச் சூரியனிப் போல இருக்க வேண்டும்.
மேலோரிடம் பணிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.இது பொது விதி. ஆயினும் மேலோர் தவறிழை த்தால் அவர்களையும் தண்டிக் கத் தயங்கக் கூடாது. மகரிஷி சுக்கிராச் சாரியார் இது சம்மந்தமா கச் சொன்ன தை நினைவில் கொள்ள வேண்டும் . போர்க்களத்தில் தனது தருமத்தை மீறி அந்தணன் ஆயுதம் ஏந்திப்போர் புரிவானாயி ன் அரசன் அந்த அந்தண னை ஆயுதத்தால் தண்டிக்க வேண்டு ம். அரச தருமம் அனைத்துத் தருமத் தை விடச் சிறந்தது. அரசாங்கத்தி ற்கு த் தீங்கு இழைப்போர் நண்பராக இரு ந்தாலும்..குருவாக இருந்தாலும் அவ ர்களைக் கொல்ல வேண்டும்.
அரசன் பதினெட்டுக் குற்றங்களை விலக்க வேண்டும்..இவற்றில் வேட் டை, சொக்கட்டான்,பகல் உறக்கம், பிறரை நிந்தித்தல்,பெண் மயக்கம், மதம், வீண் பாட்டு,கூத்து, வாத்தியங் கள், குடி ஆகிய இப் பத்தும் காமத்தால் உண்டாவன .தெரியாத குற்றத்தை வெளிப்படுத்துவது, குற்றமற்றவனை த் தண்டிப்பது,வஞ்சனையாக ஒருவ னைக் கொலை செய்வது,பிறர் புகழ் கண்டு பொறாமை கொள்வது,பிறர் குணங்களைக் குற்றமாகக் கூறுவது, பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வது ,கடுஞ்சொல் கூறுவது,கடுமையான தண்டனை வழங்கு வது .ஆ கிய எட்டும் சினத்தால் வருவன.அரசன் இவற்றை அறவே விலக்க வேண்டும்.
அரசன் எப்போதும் கர்ப்பிணியின் தருமத்தில் இருக்க வேண்டும். கர்ப்பிணி தன் மனதிற்கும், நாவிற்கும் சுவையான உணவு உண்ணா மல்..கர்ப்பத்தை வளர்க்கத் தக்க வழியில் இருப்பதுபோல, அரசனு ம் தனக்கு வேண்டும் என்ற செயலைத் தள்ளிவிட்டு உலகுக் கு நன்மை பயக்கும் தரும வழியில் செல்ல வேண்டும்..தைரியமாக நியாயமான தண்ட நீதியைச் செலுத்த வேண்டும்..அப்படி நடந்துக் கொண்டால் யாரும் குறை சொல்ல மாட்டார் கள்.
அரசன் வேலைக்காரருடன் பரிகாசமான வார் த்தைகள் பேசக் கூடாது. பரிகாசமாகப் பேசும் மன்னனை ஏவலர்கள் அவமதிப்பார் கள். அரசனின் உத்தரவை மீறி நடப்பார்கள்..ரகசியத்தைக் கேட்பா ர்கள். அத்துடன் நில்லாது அதனைப் பறை சாற்றுவார்கள்.லஞ்சம் வாங்கி அரச காரியத்தைக் கெடுத்து விடுவார்கள்.அரசன் உத்தரவு எனப் பொய்ச் செய்திகளை பரப்புவர்.அரசன் எதிரில் அநாகரிகமாக நடந்துக் கொள்வர்.நான் சொன்னால் சொன்னபடி அரசன் நடப்பான் என ஆணவத்துடன் உரைப்பர்..ஆகவே வேலைக்காரர்களிடம் விழி ப்பாக இருக்க வேண்டும்.
அரசன் எப்போதும் அமைச்சர்களுடன் செய்யும் ஆலோசனைகளை ப் பிறர் அறியாவண்ணம் மறைவாகச் செய்ய வேண்டும். காலையி ல் அறத்திலும்..மாலையில் பொருளிலும், முன்னிரவில் இன்பத்தி லும், பின்னிரவில் தெய்வ சிந்தனையிலும் ஈடுபட வேண்டும். அரச ன் நான்கு வருணத்தாரின் தர்மங்களையும் காக்க வேண்டும். எல் லோரையும் நம்பி விடக் கூடாது.நம்பத் தக்கவர்களை மட்டுமே நம்ப வேண்டும்.அவர்களிடமும் அளவு கடந்த நம்பிக்கை கூடாது.
ஓதுவிக்காத ஆசிரியன், ஓதாத ரித்விக், பாதுகாவாத மன்னன், விருப்பம் இல்லாதவற்றைக் கூறும் மனைவி, கிராமத்திலேயே இருக்க விரும்பும் இடையன்,காட்டிலேயே இருக்க விரும்பும் நாவி தன் ஆகிய இந்த அறுவரையும் கடலில் உடைந் த கப்பலைப் போல தள்ளிவிட வே ண்டும் என பிராசேதச மனு கூறியு ள்ளார்.
நாட்டை நன்கு பாதுகாப்பதை விட மேலான ராஜ தர்மம் வேறேதும் இல்லை.’ எனக் கூறி முடித்தார் பீஷ்மர்.அவர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த வியாசர்,கண்ணன்,சாத்யகி ஆகியோர் மகிழ்ந்தனர்.
டி. வி. ராதாகிருஷ்ணன்
நன்றி :-http://vidhai2virutcham.com

No comments:

Post a Comment